வியாழன், செப்டம்பர் 30, 2010

கட்டப் பஞ்சாயத்து (அ) பாபரி மஸ்ஜித் தீர்ப்பு

ந்திய வரலாற்றில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற 'பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம்?' எனும் (Tilte Suit) நில உரிமை சிவில் வழக்கில் இன்று (30.09.2010) அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னவ் பெஞ்ச் தீர்ப்பு(கள்) வெளியிட்டிருக்கிறது.
http://www.youtube.com/watch?v=JIO6nme7EuA
தீர்ப்பின் சுருக்கம் என்னவென்றால், பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பதற்கு பாபரின் பெயரால் பத்திரப்பதிவு (ரிஜிஸ்ட்ரேஷன்) இல்லை; பட்டாவும் இல்லை. அதனால் அதை 3 பங்கு வைத்து, அதில் ஒரு பங்கை போனால் போகிறதென்று முஸ்லிம்களுக்குக் கொடுத்து விடுவதென்றும் மீதி இரண்டு பங்கையும் இந்துக்களுக்குக் கொடுத்து விடுவதென்றும் தீர்ப்பாகியுள்ளது.

இந்துக்களிடம் பத்திரமோ பதிவோ பட்டவோ இருக்கிறதா? என்றெல்லாம் யாரும் கேட்கக் கூடாது. ஏனெனில், தீர்ப்புக்கு முன்னரே "மத நம்பிக்கையில் நீதி மன்றங்கள் குறுக்கிடக் கூடாது" என்று இந்துமத அமைப்புகள் பலமுறை நீதிபதிகளை அன்புடன் எச்சரித்திருக்கின்றன. அந்த எச்சரிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இப்போது தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.

அயோத்தியைப் பற்றிய உண்மையான இந்து மதநம்பிக்கை என்ன?
இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில்தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்தப் பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை.  கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது.  16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை.
11ஆம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார். தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
- வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள 'வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும்' என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். 1990 வெளியீடு பக்கம்-34,35).
மத்திய காலம்வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தைவிட, சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில்தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது ...
- வரலாற்றாசிரியர் சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியது (இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89).

1850 வாக்கில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக ஆற்காட்டு மவ்லவீ அஹ்மதுல்லாஹ் ஷா தமிழகத்திலிருந்து புறப்பட்டு, சென்ற வழியிலேயே விடுதலைக்கான வீர உரையாற்றி ஆயிரக்கணக்கான இந்து-முஸ்லிம் இளைஞர்களைத் தம் "ஜிஹாது"ப் படையோடு அழைத்துக் கொண்டு அயோத்திவரை சென்று ஆங்கிலேயரை எதிர்கொண்டார்.

பிற்காலத்தில் எதிரியாலும் சிலாகிக்கப்பட்டது அஹ்மதுல்லாஹ் ஷாவின் "ஜிஹாத்" வீரம்:
"The Moulvie was a very remarkable man. Of his capacity as a military leader, many proofs were given during the revolt... No other man could boast that he has twice foiled Sir Colin Campbell in the field. -Colonel G.B. Malleson in his 'Indian Mutiny'.

ஒரு கட்டத்தில், ஆங்கிலேயர் படை இவரால் முற்றுகையிடப்பட்டு உண்ணுவதற்கு ஒன்றுமில்லாமல் பட்டினி கிடந்தனர். அந்த இக்கட்டான நேரத்தில் அனுமான் ஹண்ட் கோயில் பூசாரிகளால் உணவு வகையில் உதவியளிக்கப்பட்ட ஆங்கிலேயப்படை, பின்னர் அதற்குப் பிரதியுபகாரமாகப் பூசாரிகளுக்கு ஒரு பரிசு வழங்கினர் - பாபரி பள்ளி வளாகத்தில்.அதுதான் 'ராம் சபூட்ரா (இராமர் திண்ணை)'!
That much before 1855 Ram Chabutra and Seeta Rasoi had come into existence and Hindus were worshipping in the same. It was very very unique and absolutely unprecedented situation that in side the boundary wall and compound of the mosque Hindu religious places were there which were actually being worshipped along with offerings of Namaz by Muslims in the mosque.

"பஜனை பாடிக் கொள்ள" என்று கூறி வெள்ளைக்காரனிடம் 'பரிசு' வாங்கிக் கொண்ட ராம் சபூட்ராதான் 1992 டிஸம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் தகர்ப்பின் முதல் அடிப்படைக் கடப்பாறை.

"பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தின்கீழ் இராமனுக்குக் கோயில் இருந்ததா?" என்பதை விசாரித்துச் சொல்லுமாறு நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தைக் கேட்டபோது, "அது எங்கள் வேலையில்லை" என்று உச்சநீதிமன்றம் பதிலளித்து இருந்தது.

இப்போது அலஹாபாத்தின் உயர்நீதிமன்ற நீதிபதி ஷர்மா தனது தீர்ப்பில், "கடவுள் இராமன் பிறந்த இடத்தின் மீதுதான் பாபர் பள்ளிவாசல் கட்டினார்" என்று நேரில் நின்று பார்த்ததுபோல் சூடம் கொளுத்தி இருக்கிறார்

நீதிபதி ஷர்மாவுக்கு 'அனுபோகச்சட்டம்' என்றால் என்னவென்றும் தெரியவில்லை; இந்துமத நம்பிக்கை, வழிபாட்டு ஆகமம் போன்றவையும் தெரியவில்லை.

ஒரு கோயிலில் உள்ள சிலைக்கு 12 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் செய்யவில்லை என்றால் அந்தச்சிலை, கடவுள் சிலையாகக் கருதப்பட மாட்டாது. அது இருக்கும் இடத்தைக் கோயிலாகவும் கொள்ளக் கூடாது.

எனில், 22.12.1949 இரவில் திருட்டுத்தனமாக பாபரி மஸ்ஜிதுக்குள் வைக்கப்பட்ட சிலை கடவுளுமல்ல; அது இருந்த இடம் கோவிலுமல்ல.

போலவே, வழிபாடு நடந்து கொண்டிருந்த இராமன் கோயிலை இடித்துவிட்டு பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது எனும் குறிப்பு எங்குமே காணப்படவில்லை.

இவற்றையெல்லாம் மீறி, காவிக்கூட்டத்தின் ஊதுகுழலாகத்தான் நீதிபதி ஷர்மாவின் தீர்ப்பு அமைந்திருகிறது:
"... Justice D V Sharma ruled that the disputed site is the birth place of Lord Ram and that the disputed building constructed by Mughal emperor Babur was built against the tenets of Islam and did not have the character of the mosque ..."
"... Justice DV Sharma in his minority verdict said the “disputed structure cannot be treated as a mosque as it came into existence against the tenets of Islam ..."
  1. சர்ச்சைக்குரிய கட்டடம் ராமன் பிறந்த இடத்தில் கட்டப்பட்டது.
  2. சர்ச்சைக்குரிய கட்டடம் மொகலாய மன்னன் பாபரால் கட்டப்பட்டது.
  3. அந்தக் கட்டடம் இஸ்லாமிய விழுமியங்களுக்கு எதிராகக் கட்டப்பட்டு, மஸ்ஜித் என்பதற்கு அருகதையற்றதாக இருந்தது.
  4. சர்ச்சைக்குரிய கட்டடம், மஸ்ஜிதாகக் கருதப்படக் கூடாது.
ஆகியன நீதிபதி ஷர்மாவின் காவிக்கருத்துகள்.

இந்திய முஸ்லிம்களின் கேள்வி என்னவென்றால், "மஸ்ஜிதாகக் கருதுவதா? வேண்டாமா? அங்குத் தொழுவதா? கூடாதா? என்பதெல்லாம் முஸ்லிம்களுடைய கவலைகள், பிரச்சினைகள். அதைப்பற்றிக் கருத்துச் சொல்ல நீ யார்?"

"1,2,3,4இல் உள்ளவற்றைச் சொல்லிவிட்டு, அப்புறம் என்ன ...க்கு 1/3 நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்று தீர்ப்புச் சொல்கிறாய்?"
  • 'பாபர் பள்ளிவாசல்' எனப் பிற்பாடு வழக்கில் வந்தது பாபரினால் கட்டப்பட்டது அல்ல என்பதும்
  • அந்தப் பள்ளியின் தொன்மைப் பெயர் 'லோடி மஸ்ஜித்' என்பதும்
  • "அயோத்தியை ஆட்சி செய்து கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468இல் கட்டப்பட்டது என்று அந்தப் பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது" என்று தொல்லியலாளர் ஷெர்சிங் (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162) ஆவணப் படுத்தியிருப்பதும்
நீதிபதி ஷர்மாவுக்குத் தெரியாது என்று நாமாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறுவழி?

நீதியைத் தகர்க்கும் காவிக்கடப்பாறையின் இலக்கு அலஹாபாத்தோடு நின்றுவிடுமா அல்லது உச்சநீதிமன்றம் வரையும் பாயுமா? காத்திருப்போம்!

60 ஆண்டுகள் காத்திருந்த ஏமாளிச் சமுதாயம் இன்னும் சில/பல ஆண்டுகள் காத்திருக்காதா என்ன - மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கு?

(குறிப்பு : மேற்காணும் தகவல்கள் சில பேரா. அருட்செல்வனின் 'பாபரி மஸ்ஜித் ராமஜன்ம பூமியா?' எனும் நூலில் இருந்து பெறப்பட்டவை)

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 28

சுல்தான் அப்துல்கதிர் என்பது குணங்குடி மஸ்தானின் இயற்பெயராகும். பிறப்பு 1207ஹி தொண்டியில். கீழக்கரை சென்று ஷெய்கு அப்துல்காதர் லெப்பை ஆலிம் (தைக்கா சாஹிபு) என்பவரிடம் கல்வி பயின்றார். பின்னர் திரிசிரபுரமடைந்து ஷாம் ஷாஹிபிடம் தீட்சை பெற்று, தம் 17ஆவது வயதில் துறவு பூண்டார்.
"அதன்பின் அவர்கள் பித்தர் போன்று தலைவிரிக் கோலமாய்ப் பதாகை (கோவணம்?) அணிந்து, சதுரகிரியிலும் புறாமலையிலும் யானைமலையிலும் இன்னும் ஏனைய மலைகளிலும் இருளடை வனங்களிலும் விலங்குசெறி கானகங்களிலும் பல்லாண்டுகள் தனித்திருந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்குச் சருகும் கிழங்கும் தழையும் குழையும் கருகும் கனியும் காயும் புசித்துத் தம் உயிரைத் தம் உடலைவிட்டும் ஓடிவிடாதவாறு பாதுகாத்து வந்தனர். சிலபொழுது மரங்களில் மேலாம் காலும் கீழாம் தலையுமாகத் தொங்கி, இறைவனைப் பலப்பட வணங்கியும் வந்தனர்.

இவ்வாறு ஏழாண்டுகள் கழிந்தன.

அதன்பின் அவர்கள் காரைக்கால் சென்று அங்குள்ள குப்பை மேடுகளில் தங்கித் தம் காலத்தைக் கழித்து வந்தனர். மக்கள் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதையும் பொருட்படுத்தாது அங்குத் தங்கியிருந்த அவர்களைச் சில ஆலிம்கள் அணுகி, அவர்கள் தொழாது தூய்மையற்ற இடத்தில் தங்கிப் போலித்துறவி வேடம் புனைந்திருப்பதாகக் குறைகூறினர். உடனே அவர்கள் தண்ணீர் கொணரச் செய்து உளூச் செய்து அங்கேயே தொழுதனர். ஆனால் தொழத் துவங்கியவர்கள், துவங்கியவர்கள்தாம். மூன்று நாள்கள் அவர்கள் உணர்வற்று நின்ற நிலையிலேயே நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அதைக்கண்டு அவர்களைக் குறைகூறிய ஆலிம்கள் அவர்களின் மகாத்மியத்தை உணர்ந்து, அவர்களைப் போற்றிப் புகழ்ந்தனர். இந்நிலையில் அவர்களும் அவ்வூரைவிட்டும்  நீங்கி விட்டனர்.
'முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள்' - அப்துர் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1990 - பக்கங்கள் 456, 457.

பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்னை வந்து தம் வாழ்வின் கடைசிப் பன்னிரண்டு ஆண்டுகளையும் சென்னை இராயபுரத்தில் யோகநிஷ்டையில் கழித்த அவர், தம் 47ஆம் வயதில் ஹிஜ்ரீ 1254இல் அங்கேயே காலமானார். அவருடைய பெயரால் உருவான 'தொண்டியார் பேட்டை', இன்று தண்டையார் பேட்டை என மருவி வழங்குகிறது.

இவர் காதிரிய்யா தரீக்காவைச் சேர்ந்த ஸூஃபிக் கவிஞர் எனச் சுட்டப்படுகிறார். இறைவனையும் நபி (ஸல்) அவர்களையும் பற்றியும் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்), நாகூர் ஷாஹுல்ஹமீது (ரஹ்) ஆகியோரைப் பற்றியும் இவர் பாடல்கள் பல பாடியுள்ளார். முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களைத் தம் ஆன்மீக குருவாகக் கொண்டிருந்தார் குணங்குடி.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.