வெள்ளி, ஜூன் 23, 2006

பொருள் மயக்கம்

ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் 'வஹ்ஹாப்' எனும் பெயர். வஹ்ஹாப் என்ற அரபுச் சொல்லுக்கு நிகரற்ற பெருங் கொடையான் என்பது தமிழ்ப் பொருள். 'மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து ...' என்ற தலைப்பில் வெளியான எனது திண்ணைக் கடிதத்தின் [சுட்டி-1] மூன்று இறைவசனங்களின் மூலம் 'வஹ்ஹாப்' என்பவன் ஏக இறைவன்தான், மனிதர்களில் எவருமல்லர் என்று சான்றுகளின் அடிப்படையில் தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. 'நான் ஏன் வஹ்ஹாபி?' என்பதை எனது வலைப்பூவில் [சுட்டி-2] "வஹ்ஹாப்(நிகரற்றக் கொடையாளன்)ஐச் சார்ந்தவன் - வஹ்ஹாபி" என்று தெளிவாக அறிவித்து விட்டே எழுதத் தொடங்கினேன். "வஹ்ஹாப் என்றால் அல்லாஹ் என்று பொருள்" எனும் 'மொழியாக்க'த்தோடு நான் எங்கு-எப்போது மூன்று கால்களோடு நின்றேன் என்று 08.06.2006இல் திண்ணையில் எழுதிய ஹமீது ஜா.பர் [சுட்டி-3] சுட்டிக் காட்ட முடிந்தால் அவருடைய எழுத்து நேர்மையைப் பாராட்டலாம். குலாம் ரஸூல் எப்படி ரஸூல் ஆக முடியாதோ அதேபோல் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாபோ, அவருடைய தந்தை அப்துல் வஹ்ஹாபோ, பண்டாரி (அப்துல்)வஹ்ஹாபோ அந்த நிகரற்ற ஒரேயொரு பெருங் கொடையாளனான வஹ்ஹாப் ஆக முடியவே முடியாது. எனவே, மேலும் மயங்க வேண்டாம்; மயக்க நினைக்கவும் வேண்டாம். 'திண்ணை வாசகர்கள் எல்லாம் மாங்கா மடையன்கள்' என்று ஹமீது ஜ.பர் [சுட்டி-4] சொன்னதுபோல் நான் ஒருபோதும் நினைக்க மாட்டேன். ஸலாமைப் பொருத்தவரை சாந்தி,சமாதானம் எல்லாம் சரிதான். ஆனால், 'அஸ்லம' ( أَسْـلـَمَ சரணடைந்தான்) என்ற கடந்தகால வினையிலிருந்து பெறப் படும் சொல்லே இஸ்லாம் ஆகும். சான்று:
"... (எனக்கு முற்றிலும் வழிப்பட்டவராகச்) சரணடையும் என்று (இபுராஹீமிடம் அவருடைய இறைவன்) கட்டளையிட்டபோது அவர், அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோனாக, இதோ, சரணடைந்து விட்டேன் என்று கூறினார்" [002:131]
என்று தன் அருள் மறையில் வஹ்ஹாபு கூறுகிறான். இப்போது ஹமீது ஜா.பரின் ஊர்க்காரரான 'பண்டாரி வகாபோ', குலாம் ரஸூல் அடிக்கடி காட்டும் 'பூச்சாண்டி வகாபோ' வாசகர்களின் நினைவுக்கு வரார் என்று நம்புகிறேன்.
நல்லவேளை, சாமீ (சீன்+அலி· ப்+மீம்+யே) என்ற அரபு வார்த்தைக்கு உயர்ந்தவன் என்று பொருள். இதுவும் இறைவனின் திருநாமங்களில் ஒன்று. அதனால் சாமீ என்றால் இறைவன் எனவே சாமீ என்று சொல்வதில் தவறில்லை என்று ·பத்வா கொடுக்காமலிருந்தார் நம் வஹாபி
என்பவை ஹமீது ஜா.பரின் அருஞ்சொல் அகராதிப் பக்கத்திலுள்ளவை. இந்தச் சாமீ எங்கிருந்து பெறப் பட்டது என்று அவர் குறிப்பிட்டால் நன்றியுடையவனாவேன்.
என்றாலும், அஸ்-ஸாமிஃ (السامع = செவியுறுபவன்) என்று அல்லாஹ்வைச் சிலவேளை நான் அழைப்பதுண்டு - மிக்குயர்ந்த டிக்'ஷனரியின். சான்றின் அடிப்படையில்:
"(நபியே,) கூறுவீராக! நீங்கள் (அவனை) அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(இன்னும் பல) அழகிய பெயர்கள் [சுட்டி-5] உள ... " [017:110].
இன்னும் மயக்கம் தெளியவில்லையெனில் ... மீண்டும் திறக்கலாம், மிக்குயர்ந்த டிக்'ஷனரியை.
ஃஃஃ
சுட்டிகள்: 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606024&format=html 2: http://wahhabipage.blogspot.com/2006/01/blog-post.html 3: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606092&format=html 4: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605263&format=html 5: http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=3851&doc=5

வியாழன், ஜூன் 22, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1

எது இஸ்லாமிய இலக்கியம்?

அல்லாஹ்விடமிருந்து பெற்ற அருள் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தம் சொல், செயல், அனுமதி மூலம் கற்றுத் தந்தவைகளே இஸ்லாமிய மார்க்கமாகும்.

இந்த 'தீனுல் இஸ்லாம்' என்னும் வழ்க்கை நெறிக்கான அனைத்துக் கோட்பாடுகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே நிறைவு செய்யப்பட்டு அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இத்தகைய இஸ்லாமிய நெறி, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மெல்லப் பரவத் தலைப்பட்டது.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள், இலக்கியங்கள் மூலமாகவும் இஸ்லாமியக் கருத்துகளை வெளியிடலாயினர்.  

இலக்கியம் என்றால் என்ன? 

இலக்கியம் என்பதற்குப் பலரும் பலவாறாக விளக்கமளித்துள்ளனர். பல்வேறு வரைவிலக்கணங்களையும் ஒருங்கிணைத்து மிகச் சுருக்கமாகக் குறிப்பதாயின், "சொல்லின் அழகைப் புலப்படுத்தி, வாழ்க்கைக்குரிய உண்மை இலக்கினை இயம்புவது இலக்கியம்" எனலாம். கல்லின் அழகை வெளிப்படுத்தி ஒன்றை வடித்தெடுப்பதைச் சிற்பக் கலை என்று வழங்குவதுபோல், சொல்லின் அழகை வெளிப்படுத்தி வாழ்க்கை இலட்சியத்தைச் சுட்டுவது இலக்கியக் கலையாகும்.

உலகெங்கிலுமுள்ள எழுத்து வடிவமுடைய மொழிகள் அனைத்தும் ஏராளமான இலக்கியங்களைப் பெற்றுத் திகழ்கின்றன. அதற்கேற்ப, தொண்மையும் செம்மையும் உடைய நம் தமிழ் மொழியிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பல்வகைப்பட்ட இலக்கியங்கள் தோன்றியுள்ளன. ஐரோப்பியத் தொழில் புரட்சியின் விளைவாக அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர்தான் உரைநடை வடிவம் புகழ் பெறலாயிற்று. அதுவரை இலக்கிய உலகில் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும் செய்யுள் வடிவம்தான் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. எனவே, கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன.

இலக்கியம் என்று சொன்ன மாத்திரத்தில், அது செய்யுள் அல்லது கவிதையைத்தான் குறிக்கிறது என்று எண்ணுமளவுக்கு இப்போக்கு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தது. வாழ்க்கை உண்மைகளை அழகுபடப் பாடிய இலக்கியங்கள் தமிழில் பல உள்ளன. அதேவேளையில் அழகுபடக் கூறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உண்மையைப் பலிபீடத்திற்கு அனுப்பி விட்டு, அழகையே ஆராதித்துக் கொண்டிருந்த இலக்கியங்களும் இங்கு ஏராளம் காணப்படுகின்றன.

உண்மைக்கு முரணான பொய்யும் புனைசுருட்டும் கற்பனையும் செவிவழிச் செய்திகளும் கண், காது, மூக்கு வைத்துப் புனையப்பட்ட கதைகளும் 'அழகியல்' என்னும் பெயர்தாங்கி இலக்கியத்தின் பாடுபொருளாகப் பவனி வரலாயின. உண்மையை இயம்ப வேண்டும் என்ற தலையாய இலக்கியப் பண்பு பின்னுக்குத் தள்ளப்பட்டது. பொய்யாயிருப்பினும் கவர்ச்சியோடு கூறினால் அது போதும், இலக்கியமாகிவிடும் என்னும் எண்ணம் படைப்பவனிடமும் படிப்பவனிடமும் பரவி ஊன்றலாயிற்று.

அல்குர்ஆன் அருளப்பட்டக் காலத்திலும் இந்நிலைதான் உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலோங்கி இருந்தது. எனவே, இறைவன் 'இலக்கியப் படைப்பாளிகள்' என்னும் பொருள்படும் தலைப்பிலேயே ஓர் அத்தியாயத்தை வழங்கி வழிகாட்டிக் கொடுத்தான். அக்காலத்தின் இலக்கியம் என்பதே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை முன்னர் கண்டோம். எனவே, கவிதை அல்லது செய்யுள் வடிவில் இலக்கியம் படைப்பவர்கள் 'கவிஞர்கள்' என அழைக்கப்பட்டனர். இலக்கியப் படைப்பாளிகள் என்னும் பொருள் தரக்கூடிய 'கவிஞர்கள்' என்ற தலைப்பில் அமைந்த அல்குர் ஆனின் 26ஆவது அத்தியாயம், இலக்கியம் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது:
"ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை (நபியே) உமக்கு அறிவிக்கட்டுமா?" "இட்டுக் கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும்" "ஒட்டுக் கேட்கும் அவர்கள் பெரும்பாலும் பொய்யர்களே!" "மேலும் கவிஞர்களை வழிகேடர்தாம் பின்பற்றுவர்." "நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலாகத் தட்டழிந்து திரிவதை நீர் பார்க்கவில்லயா?" "நிச்சயமாக அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுகின்றனர்" "(அவர்களுள்) நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (கவிப்)பழி தீர்த்துக் கொண்டோரைத் தவிர (மற்றோர் குற்றவாளிகளே!) தாங்கள் செல்லுமிடம் எதுவென அநீதி இழைத்தவர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். -அல்குர்ஆன் 026:221-227.
இஸ்லாம் இலக்கியங்களை ஏற்றுக் கொள்கிறது; வரவேற்கிறது. உண்மையை-யதார்த்தத்தை அழகுறப்பாடி, வாழ்க்கை இலட்சியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. மாறாக, உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்மை அல்லது அளவுக்கு மீறிய கற்பனை என்னும் சவுரிமுடியை வைத்து, பொய்க் கற்பனைச் செய்திகளையே அதிகமாக நீட்டிப்பின்னிடும் நச்சிலக்கியங்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. இப்படிப்பட்ட நச்சுக் கவிஞர்களை - பொய்யர்களை - அல்குர்ஆன், 'ஷைத்தான்கள்' என்றே அடையாளம் காட்டுகின்றது. 

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, ஜூன் 04, 2006

நன்றி, இபுனு பஷீர் - 2

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது: 



1. "இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்." என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற வாரம், " திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும் ." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.  

இதையேதான் நான் எனது முந்திய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். வஹ்ஹாப் ஆகிய அல்லாஹ்வும் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்ட மனிதரும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும் நிலையில், உருவகப்படுத்தலும், வரலாற்று மோசடியும் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர் வஹ்ஹாபி, அப்துல் வஹ்ஹாபை அல்லாஹ்வாக உருவகப்படுத்தி யிருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா? 

2. "அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்." என்பது ஹெச்.ஜி.ரசூலின் கூற்று. நான் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன், அல்-குர்ஆனின் கொள்கைகளிலிருந்து இமாம் அப்துல் வஹ்ஹாபின் கிதாப் அல் தவ்ஹீத் எவ்வாறு வேறுபடுகிறது? ஹெச்.ஜி.ரசூல் விளக்குவாரா? 

-நன்றி: திண்ணை 

இனி, ‘திண்ணை’யில் வராத கடைசிப் பகுதி! 
3. திண்ணையில் வந்த கடிதம் ஒன்றை படித்ததன் விளைவாக எனக்கு தோன்றிய ஒரு சிறு கவிதை! 
ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,  
சில தூண்டி விடப்பட்டு.. 
சில தூண்டிலில் இடப்பட்டு.. 
நரிகளும் ஓநாய்களும் கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன, 
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/06/02/hgrasool2/

சனி, ஜூன் 03, 2006

நன்றி, இபுனு பஷீர் - 1

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது:

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவர் ‘அல்லாவும் வகாபும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். (முன் குறிப்பு: ஹெச்.ஜி.ரசூல் வஹாபிசம் பற்றி முன்பு திண்ணையில் எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘வஹ்ஹாபி’ என்ற பெயரிலேயே ஒருவர் பதில் / விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து விவாதம் தொடங்கியது.) ரசூல் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
‘இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.’ 
இஸ்லாத்தை வஹ்ஹாபிசமாகவும் வஹ்ஹாபை அல்லாஹ்வாகவும் உருவகப்படுத்துவது தவறா? இல்லவே இல்லை! குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைவனின் பெயர்களுள் ஒன்றே வஹ்ஹாப் என்பது! அத்தியாயம் 3 வசனம் 8 "இன்னக அன்தல் வஹ்ஹாப்" என இறைவனை குறிப்பிடுகிறது. இதன் பொருள் ‘நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!’ என்பதாகும். மேலும் இறைவசனம் 17:110 இவ்வாறு கூறுகிறது: "நீங்கள் (இறைவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" குர்ஆனிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பெயரைக் கொண்டு இறைவனை அழைப்பது எப்படி மோசடியாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல் தான் விளக்க வேண்டும். 

ஹெச்.ஜி.ரசூல் மேலும் சொல்கிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்.' 

இதைத் தொடர்ந்து, வஹ்ஹாபிசத்தை தோற்றுவித்தவர் என இவர்களால் ‘குற்றம் சுமத்தப்படும்’ முகம்மது இப்ன் அப்துல் வகாப் என்ற மனிதரைப் பற்றி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் ரசூல். 

இங்குதான் அவரது அசட்டு வாதம் வெளிப்படுகிறது. இறைவனின் பெயர்களுள் ஒன்று வஹ்ஹாப் (பெரும் கொடையாளி) என்பதை முன்பு பார்த்தோம்.அப்துல் வஹ்ஹாப் என்பது மனிதர்கள் வைத்துக் கொள்ளும் பெயர். இதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள். ரசூல் குறிப்பிடும் மனிதரின் பெயரும் அப்துல் வஹ்ஹாப் தான்! இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. அப்துல்லா, அப்துர் ரஹ்மான் என இதற்கு பல உதாரணங்களை தரலாம். இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதையும் ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும். 

இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்! 

பின்குறிப்பு: "இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்." - நேசகுமார். நல்ல ஜோக்! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/05/17/hgrasool/

வெள்ளி, ஜூன் 02, 2006

மிக்குயர்ந்த டிக்'ஷனரியிலிருந்து ...

கடந்த வாரத் திண்ணை (25.05.2006) இதழில் 'அறிவு ஜீவிகள் .........?!' என்ற தலைப்பில் ஒரு ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. அதில்,
"இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல் வெறும் ஏட்டறிவை அதையும் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தனக்குத் தோன்றியபடி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்"
என்று கடிதம் எழுதிய ஹமீது ஜா· பர் என்பார் யாரைப் பற்றியோ குறைப் பட்டுக் கொண்டிருக்கிறார். 'இஸ்லாம் என்றால் என்ன பொருள்?' என்பதை அவராவது சொல்லித் தந்திருந்தால் அவரது கடிதம் முழுமை பெற்றிருக்கும். போகட்டும்.
"எந்த டிக்ஷனரியில் இருக்கிறது வஹ்ஹாப் என்றால் இறைவன்/அல்லாஹ் என்று?"
என்ற கேள்வியை அவர் திண்ணையில் முன்வைத்திருக்கிறார். 'சொன்னால் பிழையாகும்' என்ற அய்யப்பாடோ 'சுருட்டி மறைக்க' வேண்டிய கட்டாயமோ எனக்கில்லாததால் அவருடைய கேள்விக்கு பதில் - மிக்குயர்ந்த டிக்'ஷனரியான அல்குர்ஆனிலிருந்து:
'வ-ஹ-ப' என்ற வேரடி வினையிலிருந்து பிறந்த சொல் 'வஹ்ஹாப்' என்பதாம். பார்க்க: 003:008, 006:0084, 014:038, 019:049, 019:050, 021:072, 021:090, 026:021, 029:027, 038:30, 038:043.
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியை அறிவித்ததன் பின்னர், எங்களுடைய உள்ளங்கள் தடம் புரண்டு விடுமாறுச் செய்து விடாதே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்]" 003:008.
"அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியான உங்கள் இறைவனின் [ரப்பிக்கல் அஸீஸில் வஹ்ஹாப்] அருட் கிடங்கு அவர்களிடம்தான் இருக்கின்றதா?" 038:009.
"என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்] என்று (ஸுலைமான்) பிரார்த்தனை செய்தார்." 038:35.
[...] குறிகளுக்குள் உள்ளவை அரபுமொழி உச்சரிப்பாகும். இங்கு 'வஹ்ஹாப்' என்பவன் யார் என்று சான்றுகளின் அடிப்படையில் மெய்ப்பிக்கப் பட்டு விட்டது.
இனி, 'தெரியவில்லை'களில் பட்டியலிடப்பட வேண்டிய பெயர் எதுவென முடிவு செய்ய வேண்டியது திண்ணை வாசகர்களின் பொறுப்பு.
***
அடுத்து, ஓட்டைப் பானை எதுவெனெ இனங் கண்டு கொள்ளக் கூடிய இன்னொரு கூடுதல் பொறுப்பையும் திண்ணை வாசகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"சமாதிகள் தரைமட்டமாக்கப் படவேண்டும்" என்ற தன் தலைவரின் கட்டளைக்கானத் தாரகைச் சான்றுகளைத் திண்ணையில் வைத்து, எல்லாப் பானைகளிலும் ஒருவர் நீர் வார்க்கிறார் - ஓட்டைப் பானை உட்பட.

முக்கால்வாசி கருகிப் போன பின்னரும் தம் சமாதிக் காதலைக் கைவிட முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார் இன்னொருவர்.

தானாகப் புலம்பிக் கொண்டிருக்கட்டும்; ஆனால், புலம்பலுக்கு ஏன் " நபி முகமது முன் வைத்த அறவியல் கொள்கைகள்" என்ற பொய்ப் பெயர்?

சிறியதென்று எண்ணி ஏமாறிப் போனேன். பானையின் ஓட்டை இவ்வளவு பெரிதா?
ஃஃஃ