ஞாயிறு, மார்ச் 09, 2008

கதை சொல்லும் வேளை ... 3

உள்ளூர் ஊதுகுழல்களுக்கு ஊதத் தெரியவில்லை என்று கருதி, அமெரிக்கா, ஃப்ரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து மூன்று ஊதுகுழல்களை சங் பரிவாரங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தன.
இந்தக் கதையில் துணைப் பாத்திரமாக சிறு வேடத்தில் பெல்ஜியம் ஊதுகுலான கொயன்ராட் எல்ஸ்ட் என்று ஒன்று வரும்.
அதுதான் இந்தக் கதையின் நாயகரையும் சிரிப்பு நடிகரையும் தூக்கி நிறுத்துவதாகும்.
எப்படி?
இணைய தளத்தில் சக தமிழருக்காக நூற்றுக் கணக்கான தமிழர்கள் 'உதவி வேண்டி' என்ற தலைப்பில் பல கால கட்டங்களில் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
மூடுவிழா நடத்துவதற்கு முன்னர் நம் கதையின் நாயகர் பவனி வந்த தமிழ் மணத்திலும் 'உதவி வேண்டி' கோரிக்கைகள் பல தமிழில் வெளியாயின.
அவற்றுள் எதையும் கண்டு கொள்ளாத கிச்சா, "யாரோ ஒரு அட்ரஸ் இல்லாத ஆள்" என்று பேரா. நாகூர் ரூமி குறிப்பிட்ட துணைப் பாத்திரத்துக்கு உதவுவதில்தான் முனைப்புக் காட்டி முன்னுரிமை அளித்தார். (பேரா. நாகூர் ரூமியின் கருத்துத் தவறானதாகும். எல்ஸ்ட்டுக்கு bjp.orgயில் அட்ரஸ் இருக்கிறது).
எப்படி இருப்பினும் உதவி, உதவிதான். கிச்சாவின் உதவியோடு எல்ஸ்ட்டுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்தது. உடனே கிச்சா நேர்காணல் கண்ட மனநோயாளி எல்ஸ்ட்டை நேரில் சென்று கண்டு வந்ததாராம்.
ஆனால்,
கிச்சாவுக்கு மனநோயாளியைத் தெரியாது; மனநோயாளிக்குக் கிச்சாவைத் தெரியாது என்பதாகக் கடைசிவரை க்ளைமாக்ஸ் உடையாமல் இந்தக் கதை விறுவிறுப்பாகவே செல்கிறது.
-தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை: