வெள்ளி, டிசம்பர் 29, 2006

கால் நகங்களைப் பிய்த்துக் கொள்ளும் காவிப் பூனைக்குட்டி

திண்ணையின் 21 டிஸம்பர் 2006 இதழில் சூபி என்னும் காவியின் இன்னொரு குருட்டு, 'பெண்குறி' வடிவில் வெளிப்பட்டிருந்தது. விவாதத்தில் நான் 'சிக்கி'க் கொண்டேனாம். குரு குலாமைப் போலவே கொ.ப.செ.வும் நன்றாகச் சிரிப்பு மூட்டுகிறார். "அப்ரஹாவின் யானைப்படையைப் பறவைகள் அழித்த அதிசயம், வெறும் மூடநம்பிக்கையன்று. மாறாக, பதிவு செய்யப் பட்ட வரலாறு" என்று எனது பதிலில் உள்ள 'வரலாறு' என்ற சொல், இந்தக் குருட்டுப் பூனைக்குத் தெரியாமல் போனதில் வியப்பொன்றுமில்லை. 'யானை ஆண்டு' என வரலாறு குறிப்பிடுவதைத்தான் நான் எடுத்தெழுதினேன்.
The Year of the Elephant (عام الفيل `Âm al-Fîl) is estimated at 570 CE and reported in Muslim historical accounts as the same year as that of the birth of their prophet Muhammad.[1] It is so named for an event that occurred at Mecca, in which it is reported that Abraha, a Christian King of Yemen, marched upon the Kaaba with elephants in order to demolish it.[2]

வஹ்ஹாபிகளின் தலைவரின் பிறந்த ஆண்டை, 'யானை ஆண்டு' என்று ஏன் வரலாறு குறிக்கின்றது?

As Abraha neared Mecca, he sent them an emissary, telling them that he would not fight them if they did not resist his destruction of the Kaaba. Abdul Muttalib, the chief of Quraysh, responded that he would defend his own property, but God would defend His house, the Kaaba, and withdrew with his people. The next day, as Abraha prepared to enter the city, swarms of birds carrying small rocks came and bombarded the Ethiopian forces; each man that was hit was killed, and they fled in panic, as Abraha died a horrible death. The tribes saw this as a sign of the Kaaba's holiness.
"என்னைப் பொறுத்தமட்டில் தர்காக்களின் சமாதி வழிபாட்டிற்கு ஆதாரம் முஸ்லிம்களின் கபா வழிபாடே ஆகும்" என்கிறார் காவி. எங்களின் மார்க்கத்தில் சமாதி வழிபாட்டுக்கு எம் தலைவர் கிஞ்சிற்றும் இடமளிக்கவில்லை என்பது காவிக்குத் தெரியாமலேயே இருக்கட்டும்; ஆனால் திண்ணை வாசகர்களுக்கு நன்கு தெரியும்.

"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்...": அஹ்மது 8449, அபூதாவூது 1746 .

"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே...": அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .

"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்": நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் என ஐயுற்றார்கள்: புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.

சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள்: திர்மிதீ 972, அஹ்மது 14748.

"கபாவின் ஹஸ்ருல் அஸ்வத் பெண்குறி வடிவமைப்பை முத்தமிடும் வழிபாட்டிற்கும்,தமிழக சக்ராயி தெய்வ பெண்குறி வழிபாட்டிற்கும் எப்படி ஒப்புமை ஏற்பட்டது ... " என்ற காவியின் இந்தக் கேள்விக்கு இரண்டு வகைப் பட்ட விளக்கங்கள் உள: 1. காவியின் தலைச்சோறு புளித்து நாறிப் போனதால் இந்த ஒப்புவமை ஏற்பட்டிருக்கலாம். 2. ஹஜருல் அஸ்வத் என்பது உடைந்து, பல சிதிலங்களாகி விட்ட சிறு-சிறு கற்கள்:
The Stone is actually broken into several pieces, damage which occurred when the stone was stolen in 930 C.E. Ismaili (Qarmatian) warriors sacked Mecca and carried the Black Stone away. It was returned twenty-two years later. In the process, the Black Stone was cracked. It is now held together by a silver band, which is fastened by silver nails to the Stone.
காவி பார்த்துச் சொல்லும் சக்ராயி யோனி, பல துண்டுகளால் இணைக்கப் பட்ட யோனியா என்று அவர் படம் போட்டால் நானும் திண்ணை வாசகர்களும் பார்த்துக் கொள்ள ஏதுவாகும். இடம் தெரியாமல் பிராண்டி, காவிப் பூனைக்குட்டியின் நகங்கள் பிய்த்துக் கொண்டன ... பாவம்.
ஃஃஃ

வெள்ளி, டிசம்பர் 15, 2006

கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டி

நவம்பர் 16, 2006 திண்ணை இதழில் இடம் பெற்றிருந்த எனது கடிதத்தில்
நான்கு மாத ஓய்விற்குப் பின்னர் கொஞ்சமாவது தேறி வந்திருப்பாரே என்று நினைத்தால், 'உள்ளதும் போச்சுதே நொள்ளைக் கண்ணா' என்ற சொல்வழக்கை நினைவூட்டி வந்து நிற்கிறார் சூபி. இதிலே குலாம் ரஸூலின் கொ.ப.செ. ஆகத் தன்னை நியமித்துக் கொண்டது வேறு. தலைவர்கள் தளர்ந்து தடுமாறும்போது கை கொடுக்க வேண்டியது கொ.ப.செ.க்களின் பொறுப்பு என்ற கடமை உணர்வோடு வந்திருக்கும் சூபி எனக்குப் பதில் சொல்லப் போகிறாராம். நல்ல முடிவு! இந்தக் கடிதத்தின் இறுதில் 'திண்ணையில் வஹ்ஹாபி' என்றொரு சுட்டி இருக்கும். அதைச் சொடுக்கினால், திண்ணையில் வெளியான எனது கடிதங்கள் வரிசைப் படுத்தப் பட்டிருக்கும். அவற்றுள் எனது முதல் கடிதத்தில் இரு கேள்விகள் உள்ளன. "சமாதிகளைக் கட்டிக் கொண்டு 'பண்பாட்டு ' முகாரி பாடுபவர்களை, இஸ்லாமை அறியாதவர்கள் என்றும் மூடநம்பிக்கையாளர்கள் என்றும் வெளிப்படையாய்க் கூறுவதில் தவறென்ன? இஸ்லாமுக்கும் சமாதி வழிபாட்டுக்கும் புரோகிதத்துக்கும் என்ன தொடர்பு?"லிருந்து தொடங்கி, 'வெற்றிலைப் பிள்ளை' வரைக்கும் நான் எழுப்பியுள்ள கேள்விகளையும் விமர்சனங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து எல்லாவற்றுக்கும் பதில்களைத் தந்து, வஹ்ஹாபியைத் தோலுறித்துக் காட்டி, கொ.ப.செ. பதவியை சூபி தக்க வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் .. அந்த 'முலையறு சபத'த்தை மறந்து விடவேண்டாம்!
என்று நான் கேட்டிருந்தேன். எனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாத, கண்களை மூடிக் கொண்ட பூனைக்குட்டியாகிப் போன சூபி, உலகம் இருண்டு விட்டதாகப் புலம்புகிறார். அப்ரஹாவின் யானைப்படையைப் பறவைகள் அழித்த அதிசயம், வெறும் மூடநம்பிக்கையன்று. மாறாக, பதிவு செய்யப் பட்ட வரலாறு. எமது தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ஆண்டுதான் அந்த வரலாற்றுப் புகழ் பெற்ற 'யானை ஆண்டு'. சென்ற வாரத் திண்ணையில் சூபியின் கடிதமும் அதற்கான (ஹமீது ஜாஃபரின்) பதிலும் ஒரே இதழில் வெளிவந்ததும் ஓர் அதிசயமே! இன்னொரு அதிசயமும் உண்டு! அதுதான் சூபி என்னும் காவியை ஹமீது ஜாஃபர் இனங் கண்டு கொள்ள இத்தனை காலம் எடுத்துக் கொண்டது! பிப்ரவரி 24, 2006 திண்ணை இதழிலேயே 'சூபியின் முகமூடி மட்டும்' என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தில் அந்த முகமூடியைச் சற்றே நீக்கிக் காட்டியிருந்தேன். பின்னும், ஜூலை 6, 2006 திண்ணை இதழில் வெளியான 'நியாயமான கேள்விகள்' என்ற தலைப்பில் நான் எழுதிய கடிதத்தின் இறுதி வரிகளில்
திண்ணை வாசக நண்பர்: பூனக்குட்டி வெளியே வந்து பொத்துன்னு விழுந்துடுச்சே தெரியுமா? நான்: என்ன சொல்றீங்க? நண்பர்: சூபிமுகமது என்ற பெயரில் திண்ணையிலெ எழுதுற ஆளு முஸ்லிமில்லே! நான்: எப்படிச் சொல்றீங்க? நண்பர்: அல்லாவின் சமாதி, அல்லாவின் சிலை, கபாவுக்குள்ளே இபுராகீம் பீடம், ஸ்ங்கே அஷ்வேத, சிவலிங்கம் அப்டில்லாம் எழுதுறது இருக்கட்டும். ஒரு முஸ்லிமுக்கு இப்டியெல்லாம் நினைக்க முடியுமா? இது அவ்ளவும் ஆர்.எஸ்.எஸ் சைட்டிலேர்ந்து சுட்டது. நான்: இருக்கட்டும். யாராயிருந்தா என்ன? சூபின்னோ முகமதுன்னோ முஸ்லிமல்லாதவங்க உண்மையிலேயே பேரு வச்சிகிட்டா நீங்க கேஸா போட முடியும்? நண்பர்: முடியாதுதான். ஆனா இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை சந்தேகம்ங்கிற பேர்ல எழுதி திண்ணையை ஏமாத்தலாமா முடியாதா? இதையே ஒரு கிரிஸ்டின் பேர்லெயோ இந்து பேர்லெயோ எழுதி இருந்தா ... திண்ணை பப்ளிஷ் செய்யுமா?
என்று சூபியின் முகமூடியை முற்றிலும் கிழித்திருந்தேன். பொத்தென்று வந்து விழுந்த அந்தப் பூனைக்குட்டிதான் இப்போது கோரைப்பாயென்று நினைத்துக் கொண்டு மாமலையைப் பிராண்டுகின்றது. அந்தக் கொ.ப.செ. பூனைக்குட்டிக்கு எனது பழைய பதிலையே பதிவு செய்கிறேன்:
பெரிய-கொடிய மிருகங்கள் எல்லாம் மோதிப் பார்த்த மலைதான் குர்ஆன். அதில் மோதிச் செத்துப் போன மிருகங்களின் உக்கிப்போன எலும்புகள் அம்மலையின் அடிவாரத்தில் இன்னும் எஞ்சிக் கிடக்கின்றன. கழிவிடக் கொசுக்களின் கடிக்கெல்லாம், மலை அசைந்து கொடுத்து விடாது.
ஃஃஃ

வெள்ளி, டிசம்பர் 01, 2006

இல்லாத இடம் தேடும் ...

மனுதர்மத்தைக் குர்ஆனில் தேடுகின்ற சூபியின் மாறாத மடத்தனம் கடந்த வாரத் திண்ணையில் வெளிப் பட்டிருக்கிறது. "மனிதர்களே!" என்று மொத்த மனுக்குலத்தையும் விளித்து, "நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய்-தகப்பனின் வழி வந்தவர்கள்" என்றும் "உங்கள் அனைவரின் இறைவனும் ஒரேயொருவனே!" [004:001] என்றும் தீண்டாமையை அழித்தொழிக்கும் குர்ஆனில் மனு தர்மத்தைத் தேடி அலையும் சூபியை எதில் சேர்ப்பது? என்பதை வாசகர்களே முடிவு செய்யட்டும். இனி, அபூலஹபைக் குறித்து சூபி கேட்டிருப்பதற்கு விளக்கம்: அபூலஹப் என்பவன் யார்? அப்துல் உஸ்ஸா என்ற இயற் பெயருடைய அபூலஹப், அப்துல் முத்தலிபின் மகன்களுள் ஒருவனும் வஹ்ஹாபிகளின் தலைவர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையுமாவான். ஹர்புடைய மகளும் அபூஸுஃப்யானின் சகோதரியுமான அர்வா என்பவள் அபூலஹபின் மனைவியாவாள். "உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுப்பீராக!" [026:214] என்ற இறைகட்டளை வந்தவுடன், நபி (ஸல்) அவர்கள், மக்காவில் உள்ள 'ஸஃபா' என்ற குன்றின் மீதேறி நின்று, ''யா ஸபாஹா! யா ஸபாஹா!!'' என்று குரலெழுப்பினார்கள். (எதிரிப் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த அரபுச் சொல் பயன்படுத்தப்படும்.) பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: "ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே!" என்று அழைத்தார்கள். அவர்களது அழைப்பைச் செவியேற்றவர்கள், "இவ்வாறு அழைப்பவர் யார்?" என வினவ சிலர் ''முஹம்மது'' என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் உட்பட பலரும் அங்குக் குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள். அனைவரும் ஒன்று கூடியபோது நபி (ஸல்), ''இம்மலைக்குப் பின்னாலுள்ள கணவாயில் உங்களைத் தாக்குவதற்காகக் குதிரை வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்று நான் கூறினால் நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், ''ஆம்! உங்களை நம்புவோம்; உங்களை உண்மையாளராகவே கண்டிருக்கிறோம்; பொய்யுரைத்துக் கண்டதில்லை'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

''குறைஷியரே! அல்லாஹ்விடமிருந்து உங்களது ஆன்மாக்களை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. கஅபு இப்னு லுவய்யின் வழித்தோன்றல்களே!

முர்ரா இப்னு கஅபின் வழித்தோன்றல்களே!

குஸைய்யின் வழித்தோன்றல்களே!

அப்துல் முனாஃபின் வழித்தோன்றல்களே!

அப்து ஷம்ஸ் வழித்தோன்றல்களே!

ஹாஷிம் வழித்தோன்றல்களே!

அப்துல் முத்தலிபின் வழித்தோன்றல்களே!

அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே!

அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே!

உங்களை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களது எந்தவொரு நன்மைக்கும் தீமைக்கும் நான் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே!

எனது செல்வத்திலிருந்து விரும்பியதைக் கேட்டு பெற்றுக்கொள். உன்னை நரகிலிருந்து பாதுகாத்துக் கொள்! நிச்சயமாக நான் உனது நன்மைக்கும் தீமைக்கும் பொறுப்பாக முடியாது. அல்லாஹ்வை விட்டு உனக்கு நான் எந்தப் பலனும் அளிக்க முடியாது. எனினும், மக்களே! உங்களுடன் இரத்த பந்தம் எனும் உறவு இருக்கிறது. உரிய முறையில் இரத்தப் பந்தத்திற்கானக் கடமைகளை நிறைவேற்றுவேன்''

என்று கூறி முடித்தார்கள். இந்த எச்சரிக்கை முடிந்ததும் மக்கள் எதுவும் கூறாமல் கலைந்து சென்றார்கள். ஆனால், அபூ லஹப் மட்டும் குரோதத்துடன் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டான். ''நாள் முழுவதும் உனக்கு நாசமுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களைக் கூட்டினாயா?'' என்று கூறினான். அவனைக் கண்டித்து ''அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனும் அழியட்டும்...'' என்ற 111வது அல்குர்ஆன் அத்தியாயம் அருளப் பட்டது. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத்திர்மிதீ,ஃபத்ஹுல் பாரீ). அபூலஹபின் மீது தணியாத பாசம் கொண்ட சூபியின் கேள்வி யாதெனில், "கருணையாளனான அல்லாஹ் தெருச் சண்டைக்காரன் போல் சாபமிடலாமா?" என்பதே! முஸ்லிம்களின் இறைவனைக் குறித்து எதுவுமே தெரியாத அறிவிலித்தனத்தால் விளைந்த கேள்வியைத்தான் சூபி கேட்கிறார். அல்லாஹ் கருணையாளன்தான். அதேவேளை கையாலாகாதவன் அல்லன். அடக்கியாள்பவனும் அவனே! அவனுடைய அன்பிற்குரிய அடியார்கள் பலரையே அடக்கி வைத்தவன்; வைத்திருப்பவன் எனும்போது அபூலஹப் அவனுக்கு எம்மாத்திரம்? அடுத்து, "இது அல்லாவின் வார்த்தையா?" என்று சூபி ஒரு கேள்வியை வைக்கிறார் - அந்தக்கால அபூலஹபைப் போலவே. மேற்காணும் 111ஆவது அத்தியாயம் அருளப் பட்ட பின்னரும் பத்தாண்டு காலத்திற்கு மேல் அபூலஹப் உயிர் வாழ்ந்திருந்தான். அந்தப் பத்தாண்டுகளில் அவனுடைய குரைஷிக் குலத்தினரில் பெரும்பாலோர் சத்திய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டனர். சூபியைப் போலவே இறைவாக்கைப் பொய்ப் படுத்திவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்த அபூலஹப், சற்றே அறிவைப் பயன் படுத்தி இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? "நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன்" என்ற ஓர் அறிவிப்பு அபூலஹபிடமிருந்து வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? 1 - "குர்ஆன் இறைவாக்கு இல்லை" என்று நிறுவுவதற்கு 1400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க வேண்டிய பரிதாப நிலை தொடந்திருக்காது. 2 - நபி (ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் தூதர் என்ற உயர் பதவியிலிருந்து இறக்கி, வெறும் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று ஆக்குவதற்கு இன்றுவரை செய்யப் பட்டுக் கொண்டிருக்கும் பூனையைக் கட்டி வைத்து சிரைக்கும் வேலை மிச்சமாகிப் போயிருக்கும். 3 - உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பின்பற்றுகின்ற - எதிர்ப்புகளை எதிர்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து செம்மாந்து நிற்கின்ற - வாழ்க்கை நெறியான இஸ்லாம், இல்லாமலாகி இருக்கும். கேள்வி: அபூலஹப் ஏன் அதைச் சொல்லாமலே அழிந்து போனான்? பதில்: அல்குர்ஆன் இறைவேதம்தான் என்பதற்கு இன்னொரு சாட்சியாக!
ஃஃஃ