சனி, டிசம்பர் 26, 2009

புதுவகை நோய்: இமி-2

உடன்படிக்கை என்றால் என்ன?

இருவர் அல்லது இரு சாரார் தத்தமது விருப்பங்களை/கோரிக்கைகளை முன்வைத்துக் கலந்துபேசி, பொதுவான முடிவுக்கு வந்து, அதை இருவரும்/இருசாராரும் ஏற்றுச் செயல்படுவதற்கு உடன்படுவதாக உறுதி கூறுவது/எழுதிக் கொள்வதற்குப் பெயர் உடன்படிக்கையாகும்.

அவ்வாறு ஏற்றுக் கொண்டவற்றைப் புறக்கணித்து உடன்படிக்கையை முதலாவதாக முறிப்பவர்கள் அநியாயக்காரர்களே. பிறரோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முஸ்லிம்கள் முறித்ததாக இஸ்லாமிய வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாது.

முஸ்லிம்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகள் பல. அவற்றுள் 'யூத உடன்படிக்கை' [சுட்டி-09], புகழ் பெற்றது. அந்த உடன்படிக்கையை முறித்தவர்கள் [சுட்டி-10] யூதர்கள் ஆவர். அதேபோல் இஸ்லாமிய வரலாற்றில் பெருமை பொங்கப் பேசப்படும் ஹுதைபிய்யா உடன்படிக்கையை முறித்தவர்கள் மக்கத்துக் குரைஷியர்கள் ஆவர்.

ஆனால், வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாக, 'புனித மோசடி'யில் உடன்படிக்கையை முஸ்லிம்கள் உடைத்ததாகத் தலைகீழ்ப் பாடம் நடத்தப் பட்டது; அதைத் திண்ணையும் பதித்துப் பெருமை(!) சேர்த்துக் கொண்டது.

அரைகுறை-2 Sura (9:3) - "...Allah and His Messenger are free from liability to the idolaters...” (உடன்படிக்கையை உடைத்தல் என்பதும் ‘தக்கியா’வின் மற்றொரு விளைவு-பாணி).

அல்குர்ஆனின் ஒன்பதாவதான 'மீட்சி/விலகல்' அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தின் சில (அரைகுறைச்) சொற்கள், 'உடைப்பதற்கே உடன்படிக்கை' என்று முஸ்லிம்களுக்கு உத்தரவு போடுவதுபோல் பம்மாத்துக் காட்டப் பட்டுள்ளது.

மேற்காணும் இறைவசனத்தில் பேசப்படும் உடன்படிக்கை யாது? அதன் பொருளடக்கங்கள் யாவை? அவற்றை மீறியவர் யாவர்? போன்ற முழுமையான தகவல்களை இங்கு நாம் அறிந்து கொள்வோம். அதற்கு முன்னர், இஸ்லாமிய மீளெழுச்சியின் 19ஆவது ஆண்டின் இறுதியில் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மக்கத்து இணைவைப்பாளர்களின் தலைவர் அபூஃஸுப்யானின் பிரதிநிதி ஸுஹைல் பின் அம்ரூ என்பவருக்கும் ஏற்பட்ட 'ஹுதைபிய்யா உடன்படிக்கை'யைப் பற்றி மேற்காணும் இறைவசனம் [009:003] பேசுவதால் 19 ஆண்டுகால இஸ்லாமிய மீளெழுச்சியைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வது நலம்.

இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பின்னர் 13 ஆண்டுகள்வரை, தம் குடும்பச் சொந்தமான குரைஷியர்களால் நிகழ்த்தப் பட்ட ஊர்விலக்கல் முதல், கொலை முயற்சிவரை அனைத்தையும் எதிர்கொண்டு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவில்தான் வசித்தார்கள். 13ஆவது ஆண்டின் இறுதியில், தாம் பிறந்த மண்ணான மக்காவைத் துறந்து, அடைக்கலம் கொடுப்பதற்கு அழைத்த மதீனாவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இந்தப் புலப் பெயர்வுக்கு, 'ஹிஜ்ரா/ஹிஜ்ரத்' என்பது அரபுப் பெயராகும். அந்த ஆண்டிலிருந்தே முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளை 'ஹிஜ்ரீ' எனும் பெயரால் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மதீனாவின் மக்களுக்கிடையே பன்னெடுங்காலம் நிலவி வந்த இனப்பகையை ஒழித்துக் கட்டி, மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தியதாலும் பல சீர்திருத்தங்களைச் செய்ததாலும் மதீனாவின் மக்கள் அண்ணல் நபியைத் தம் ஆட்சித் தலைவராக்கிக் கொண்டனர் [சுட்டி-11].

அண்ணல் நபியின் செல்வாக்குக் கூடிக் கொண்டே போவதையும் அவர்கள் மக்காவில் வாழ்ந்த காலத்தில் பரவியதைவிடப் பன்மடங்கு அவரது புலப் பெயர்வுக்குப் பின்னர் அதிவேகமாக தம் சொந்த மண்ணில், தங்களின் கண் முன்பே வெகு வேகமாக இஸ்லாம் பரவுவதைக் கண்ட குரைஷிகள், மதீனாவைச் சூறையாடுவதற்கும் மதீனாவின் ஆட்சித் தலைவராகத் திகழ்ந்த அண்ணலாரை ஒழித்துக் கட்டுவதற்கும் மக்காவிலிருந்து (ஏறத்தாழ 400கி.மீ) பயணித்து வந்து பலமுறை (முதல் பத்ரு ஹிஜ்ரீ2இல்; உஹது ஹிஜ்ரீ3இல்; இரண்டாவது பத்ரு ஹிஜ்ரீ4இல்; அகழி ஹிஜ்ரீ-5இல்) போர் புரிந்தனர்; அனைத்திலும் தோல்வியைத் தழுவித் திரும்பிச் சென்றனர்.

***

அகழிப் போருக்கு அடுத்த ஆண்டு ஹிஜ்ரீ 6இல் மக்காவிலுள்ள கஅபா எனும் இறைப் பேரில்லத்தில் உம்ரா எனும் புனித வணக்கம் புரிவதற்காக நபிகள் நாயகமும் அவர்களின் 1400 தோழர்களும் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நேக்கிச் சென்றார்கள். மக்காவைப் புனிதப் பயணக்குழு சென்றடைவதற்கு ஏறத்தாழ 15 கி.மீ தொலைவு இருக்கும்போது மக்காவின் இணைவைப்பவர்கள், பயணக்குழுவை மக்காவுக்குள் அனுமதிக்க முடியாது எனத் தடுத்தனர். அந்த இடத்துக்குப் பெயர் ஹுதைபிய்யா.

தாங்கள் போர் செய்ய வரவில்லை என்றும் அக்கால அரபியர் அனைவருக்கும் பொதுவான 'உம்ரா' வணக்கம் புரிவதற்கே மக்காவுக்கு வருவதாக முஸ்லிம்கள் தரப்பில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எதிரணியினர் செவி சாய்க்கவில்லை. முஸ்லிம்களும் முறுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மக்காவின் தலைவர்களுக்கிடையே முஸ்லிம்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது குறித்து இரு வேறு கருத்துகள் [சுட்டி-12] ஏற்பட்டன.

நிலைமை மோசமாவதை அறிந்து கொண்ட மக்கத்துக் குறைஷிகள், அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வதற்காக சுஹைல் இப்னு அம்ரூ என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.

நபி (ஸல்) அவர்களிடம் சுஹைல் நீண்ட நேரம் பேசினார். பின்பு இருவரும் உடன்படிக்கைக்கான கூறுகளை முடிவு செய்தனர். அவையாவன:
[1] முஸ்லிம்கள் இந்த ஆண்டு மக்காவுக்குள் நுழையாமல் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அடுத்த ஆண்டு முஸ்லிம்கள் உம்ராவிற்கு வந்து மக்காவில் மூன்று நாட்கள் தங்கிக் கொள்ளலாம். சாதாரணமாக ஒரு பயணி தன்னுடன் வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து வரலாம். ஆனால் அவற்றை உறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த ஆண்டில் முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் எந்தவித இடையூறும் இருக்காது.

[2] பத்து ஆண்டுகளுக்கு இரு தரப்பிலும் போர் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. அக்காலங்களில் அனைவரும் அச்சமற்று இருப்பார்கள். யாரும் எவருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யக் கூடாது.

[3] யாரொருவர் முஹம்மதுடைய உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறாரோ அவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். போலவே, மக்காக் குறைஷிகளின் உடன்படிக்கையாளராகச் சேர்ந்து கொள்ள விரும்புகிறவர் அதில் சேர்ந்து கொள்ளலாம். இந்த இரு பிரிவினரில் ஒன்றுடன் சேர்ந்து கொள்ளும் எந்த ஒரு கிளையினரும் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராவார். அதற்குப்பின் அந்தக் கிளையினருக்கு எதிராக யாராவது அத்துமீறி நடந்து கொண்டால் அஃது அவர் சார்ந்த முழுப்பிரிவின் மீதான அத்துமீறலாகக் கொள்ளப் படும்.

[4] மக்கத்துக் குறைஷி ஆண்களுள் யாராவது தன் பாதுகாவலரான நெருங்கிய உறவினரின் அனுமதியின்றி, தப்பித்து முஹம்மதிடம் வந்து சேர்ந்தால் முஹம்மது அவரை மக்கத்துக் குறைஷிகளிடம் திருப்பி அனுப்பி விடவேண்டும். ஆனால், முஹம்மதிடம் உள்ளவர்களில் யாராவது தப்பித்து மக்கத்துக் குறைஷிகளிடம் வந்துவிட்டால் அவர் முஹம்மதிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டார்.

மேற்காணும் உடன்படிக்கை [சுட்டி-13] முழுமை பெறுமுன்னர், மக்காவைச் சேர்ந்த, அண்மையில் இஸ்லாத்தைத் தழுவிய அபூஜந்தல் என்பார் முஸ்லிம்களுடன் சேர்ந்து கொள்ளப் புகலிடம் தேடி வந்தார். அவர், மக்கத்துக் குரைஷிகளின் பிரதிநியான சுஹைலின் மகனாவார். மக்காவைச் சேர்ந்த ஆண் தங்களிடம் வந்தால் திருப்பி அனுப்பி விடுவோம் என்ற பேச்சு வார்த்தை முடிந்து விட்டதால், அபூஜந்தலை அவரின் தந்தையிடமே ஒப்படைத்த நேமையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-14] முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

பிற்றை நாட்களில் அதேபோல், மக்கத்துக் குரைஷியரின் உடன்படிக்கைப் பிரிவான ஸகீப் இனத்தவருள் ஒருவரான அபூபஸீர் என்பார் புகலிடம் தேடி மதீனாவுக்கு வந்தபோது, அவரைத் திருப்பி அனுப்புமாறு கேட்டு வந்த மக்கத்தவர்களுடன் அவரை அனுப்பி வைத்த நேர்மையாளர் எங்கள் தலைவர் [சுட்டி-15].

***

பின்னர், தங்களுக்குப் பாதகம் விளைந்தபோது, ஹுதைபிய்யா உடன்படிக்கையின் நான்காவது கூறுதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தவர்கள் மக்கத்துக் குறைஷிகளாவர்.

உடன்படிக்கையின் மூன்றாவது கூறான, "ஒருபிரிவினருடன் சேர்ந்து கொள்ளும் எந்தக் கிளையினருக்கும் எதிராக மறுபிரிவினர் அத்து மீறக் கூடாது" என்பதை உடைத்தவர்களும் மக்கத்துக் குரைஷியரே.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர்வரை குஜாஆ, பனூபக்ரு ஆகிய இரு குலத்தவரும் பன்னெடுங் காலமாகப் பகைமை மாறாமல் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். உடன்படிக்கைக்குப் பின்னர், குஜாஆவினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பனூபக்ரு குலத்தார் குரைஷிகள் பக்கம் சேர்ந்து கொண்டனர். இரு குலத்தவரிடையே சண்டைகள் தொடராமல் ஹுதைபிய்யா உடன்படிக்கைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தது.

ஹிஜ்ரீ 8, ஷஅபான் (எட்டாவது) மாதம் பனூபக்ரு குலத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆக் குலத்தவருள் சிலர் 'அல்வத்தீர்' என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆவினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. பனூபக்ருக் கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதோடு, அவர்களோடு இணைந்து கொண்டு குரைஷிகளுள் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.

சண்டைசெய்து கொண்டே குஜாஆவினர் புனித (ஹரம்) எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பனூபக்ருக் கிளையினர், "நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!'' என்று கூறினர். ஆனால், சதிகாரன் நவ்ஃபல் அதைச் செவிமடுக்காமல், மிகக் கடுமையான வார்த்தையைக் கூறினான். "பக்ரு இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?'' என்றான். கொல்லப் பட்டவர்களைத் தவிர்த்து, எஞ்சிய குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ ஆகிய தங்களின் நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் புகுந்து கொண்டனர்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை மக்கத்துக் குரைஷிகள் மீறி, தங்களைக் கொன்றொழிக்க வந்ததை, குஜாஆக் குலத்தைச் சேர்ந்த அம்ரு இபுனு ஸாலிம் மதீனாவுக்குச் சென்று நபியவர்களிடம் கவிதையாகப் பாடினார்:
இறைவா! நான் முஹம்மதிடம் எங்கள் உடன்படிக்கையையும்
அவர் தந்தையின் பழமையான உடன்படிக்கையையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்;
நாங்கள் பெற்றோர்கள்; பின்னரே முஸ்லிமானோம்.
பின்வாங்கவில்லை. முழுமையாக உதவுங்கள்!
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை;
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான உடன்படிக்கையை முறித்து விட்டனர்.
'கதா'வில் எனக்குப் பதுங்குக் குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனைப் பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.

மக்கத்துக் குரைஷியரால் ஹுதைபிய்யா உடன்படிக்கை மீறப்பட்ட பின்னரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கத்துக் குரைஷியருக்கு மூன்று கூறுகளைத் தேர்வுக்காக முன் வைத்தார்கள்:
1. வலியச் சென்று சண்டையைத் துவக்கிய பனூ பக்ரு குலத்தாரை உடன்படிக்கையிலிருந்து நீக்குவது
2. மக்கத்துக் குரைஷியரும் பனூ பக்ருவினரும் சேர்ந்து கொண்டு கொலை செய்த குஜாஆவினருக்காக நஷ்ட ஈடு வழங்குவது.
3. ஹுதைபிய்யா உடன்படிக்கையை முற்றாக முறித்துக் கொள்வது.


அடுத்த மாதமே, அதாவது ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு, ரமளான் (9வது) மாதம் பத்தாம் நாளில் பத்தாயிரம் தோழர்களுடன் மதீனாவிலிருந்து நபியவர்கள் புறப்பட்டு மக்காவை அடைந்தபோது நபியவர்கள் பிறந்த மண், தன்னை முழுமையாக அவர்களிடம் ஒப்படைத்தது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், தன்னை ஊரைவிட்டு விரட்டியடித்தவர்கள் அன்று வெருண்டோடி ஒளிந்து கொள்வதை நபியவர்கள் கண்டனர் [சுட்டி-17]. அதற்குப் பின்னரும் - மக்கா வெற்றி கொள்ளப் பட்டு, உடன்படிக்கை என்பது செல்லாமல்/இல்லாமல் ஆகிவிட்ட பிறகும் - அவ்வாறு நபியவர்கள் அறிவிக்கவில்லை என்பது வரலாற்று ஆசிரியர்களின் உச்ச கட்ட வியப்பாகும்!

மக்கா வெற்றி கொள்ளப் பட்டபோது, "குரைஷிக் கூட்டத்தினரே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?" என்று நபியவர்கள் கேட்க, " நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள். நீங்கள் எங்களின் சிறந்த சகோதரரும் எங்களுள் சிறந்த சகோதரரின் மகனுமாவீர்கள்" என்று குரைஷியர் கூறினர். "இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு" என்று அறிவித்து, தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தி, மனிதாபிமானத்தை நிலைநிறுத்தினார் எம் தலைவர் [சுட்டி-18].
***
அரைகுறை-2இல் குறிப்பிடப் பட்டுள்ள கீழ்க்காணும் வசனங்கள் ஹிஜ்ரீ ஒன்பதாவது ஆண்டில் அருளப் பெற்றன:
அல்லாஹ்வும் அவனின் தூதரும் இணைவைப்பவர்கள்(உடன் செய்திருந்த உடன்படிக்கை)ஐ விட்டும் முற்றிலும் விலகி விட்டனர் என்பதை இந்த மாபெரும் ஹஜ் நாளில் மக்களுக்கு அல்லாஹ்வும் அவனின் தூதரும் அறிவிக்கின்றனர். (இணைவைப்பாளர்களே!) நீங்கள் திருந்திக் கொள்வீர்களாயின் அஃது உங்களுக்குச் சிறப்பைத் தரும். மறுதலிப்பீர்களாயின், அறிந்து கொள்வீர்! அல்லாஹ்வை நீங்கள் வெல்ல முடியாது. (நபியே!) வலிமிகு வேதனையைப் பற்றி இறைமறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!
நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இணைவைப்போருள் உடன்படிக்கைக்கு ஊறு செய்யாமலும் உங்களுக்கு எதிரானவர்களுக்கு உதவி செய்யாமலும் இருப்பவர்களுடன் அவ்வுடன்படிக்கையை அதன் காலக் கெடுவரை முழுமைப் படுத்துங்கள். அல்லாஹ், தன்னை அஞ்சி வாழ்வோரிடம் அன்பு செலுத்துகிறான் [அல் குர்ஆன் 009:003-004].
And an announcement from Allah and His Messenger, to the people (assembled) on the day of the Great Pilgrimage,- that Allah and His Messenger dissolve (treaty) obligations with the Pagans. If then, ye repent, it were best for you; but if ye turn away, know ye that ye cannot frustrate Allah. And proclaim a grievous penalty to those who reject Faith. (But the treaties are) not dissolved with those Pagans with whom ye have entered into alliance and who have not subsequently failed you in aught, nor aided any one against you. So fulfil your engagements with them to the end of their term: for Allah loveth the righteous [சுட்டி-19].
மேற்காணும் முழுமையான இறைவசனத்தில் இருப்பது என்ன வகை தக்கியா புக்கியா என்று சொல்லத் தெரியாமல் இந்த இடத்தில் கட்டுரையாளர் ஊமை வேஷம் போடுகிறார்.

- பிற அரைகுறைகள் முழுமையாக்கப்படும்வரை தொடரும், இன்ஷா அல்லாஹ்
ஃஃஃ

சுட்டிகள்:

ஞாயிறு, டிசம்பர் 20, 2009

புதுவகை நோய் : இமி - 1

டந்த 29.11.2009 & 04.12.2009 திண்ணை இதழ்களில், "இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது" எனும் தவறான கருவோடு, 'புனித மோசடி-1' [சுட்டி-01 மற்றும்-2 சுட்டி-02] வெளியாகி இருந்ததைப் படிக்க நேர்ந்தது.

அக்கட்டுரைக்கான எதிர்வினை விளக்கங்களை வாசகர்களுக்குத் தருவதற்கு முன்னர், திசைதிருப்பும் அரைகுறைச் சான்றுகளோடு காழ்ப்பைக் கக்கும் தரமற்ற எழுத்துகளைப் பதிக்கும் திண்ணையின் அண்மைப் போக்கைப் பற்றிய எனது வருத்தங்களையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

அக்கட்டுரையில் காணப்படும் கருவுக்குத் தொடர்பில்லாத
01. உலகநாதர்,
02. வள்ளுவர்,
03. ஜெர்மனியின் கோயபல்ஸ்,
04. நாஸி ஹிட்லர்,
05. கம்யூனிஸ்ட்கள், இடதுசாரிகள், பொதுவுடைக்காரர்கள்
06. காந்திஜி,
07. முன்னேற்றம் அடைந்த/அடையாத கழகங்கள்,
08. வெங்காயம்,
09. நேரு, இந்திரா,
10. திராவிட நாடு,
11. முரட்டு தாதா,
12. தேபால், உபகணஸ்தான், கூபா, உதபந்தபுரா, லவகுசபுரா

ஆகியோர்/ஆகியன பற்றியெல்லாம் கட்டுரையாளருக்குத் தெரியும் எனக் காட்டிக் கொள்ள மட்டுமே எழுதப் பட்டிருக்கிறது; இங்குப் பேசுபொருளுக்கு மீக்குறியவை அப்பாற் பட்டவை என நான் கருதுவதால், இஸ்லாம் குறித்து அவர் எடுத்து வைத்த,
"குரான் Qur'an, ஹடித்-சுன்னா ( Hadith & Sunna -- Traditions) அல்லது சிரா (Sira) (biographies) அடிப்படையில் பொய் பேசலாம்; சத்தியம் செய்யலாம்; பிற மதத்தவரிடம் எந்தக் காலத்திலும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசலாம்; புனித(!) மோசடி (தகிய்யா) செய்யலாம்"
 

எனும் தலையாய குற்றச் சாட்டுகளுக்கு முன்வைக்கப் பட்ட அரைகுறைச் சான்றுகளை முழுதுமாக வாசகர்கள்முன் வைக்க விரும்புகிறேன். 

அரைகுறை-1: (குரான் சுரா: 8:39: எதிர்ப்பு நீங்கி, உலகில் எல்லாமே அல்லாவுக்கென்று ஆகும் வரை போர் புரியுங்கள்).

இஸ்லாத்தின் உயிர்நாடியான "கடவுள் இல்லை - அல்லாஹ்வைத் தவிர" என்பதில் பாதியை மட்டும் சான்று என யாராவது முன்வைத்தால், இஸ்லாம் என்பது நாத்திகத்தைக் கொள்கையாகக் கொண்ட ஒரு மதம் என்றுதான் எவரும் விளங்குவர். அதுபோலவே குர்ஆன் கூறுவதைப் பாதியாக்கி இருக்கிறார் கட்டுரையாளர். "பிற மதத்தவரைக் கொன்று குவிக்கும்படி இஸ்லாம் சொல்கிறது" என்ற புனைவை நிறுவச் செய்யும் திருகுதாளமாகும் அவரது முயற்சி.  

பிற மதத்தவர் குறித்துக் குர்ஆன் கூறுவதென்ன?  
"(நபியே) கூறுவீராக! : இறை மறுப்பாளர்களே!
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன்;
நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
மேலும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபனல்லன்;
அன்றியும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவரல்லர்.
உங்களுக்கு உங்கள் மதம்; எனக்கு என் மார்க்கம்" [குர்ஆன் 109:001-006].
"Say : O ye that reject Faith!  
I worship not that which ye worship,  
Nor will ye worship that which I worship.  
And I will not worship that which ye have been wont to worship,  
Nor will ye worship that which I worship.  
To you be your Way, and to me mine. [சுட்டி-03]. 
"மேலும் உம் இறைவன் நாடியிருப்பின் இப்பூவுலகின் மாந்தர் அனைவரும் இறைநம்பிக்கை கொண்டிருப்பர். எனவே, எல்லாரும் இறைநம்பிக்கையாளராக ஆகிவிடவேண்டும் என அவர்களை நீர் வலுக்கட்டாயப் படுத்த முடியுமா என்ன?" [குர்ஆன் 010:099]. "If it had been thy Lord's will, they would all have believed,- all who are on earth! wilt thou then compel mankind, against their will, to believe!" [சுட்டி-04] .
 

"(நபியே!) இணைவைப்பாளர்களுள் எவர் உம்மிடம் புகலிடம் தேடி வந்தாலும் அவருக்குப் புகலிடம் அளிக்கவும். அதனால், அல்லாஹ்வுடைய சான்றுமிகு வசனங்களை அவர் செவியேற்கலாம்.  பின்னர், அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் இடத்துக்கு அவரை அனுப்பி விடுவீராக! ஏனெனில் அம்மக்கள் அறியாச் சமூகத்தவராவர்" [குர்ஆன் 009:006]. "If one amongst the Pagans ask thee for asylum, grant it to him, so that he may hear the word of Allah; and then escort him to where he can be secure. That is because they are men without knowledge. [சுட்டி-05].
 

"(இஸ்லாம்) மார்க்கத்தில் (இணைவதில்) வலுக்கட்டாயம் என்பது இல்லை ..." [குர்ஆன் 002:256] "Let there be no compulsion in religion ..." [சுட்டி-06]. 
இத்துணைத் தெளிவான நல்லிணக்க இறைவசனங்களைக் கூறும் குர்ஆன், "பிற மதத்தவர் எவராயினும் கொல்லுங்கள்" எனக் கூறுவதாகப் பித்தலாட்டம் செய்யலாமா

அரைகுறை-1இல் காணப்பட்ட முழு வசனம்:
"(இறைநம்பிக்கையாளர்களே!) தொடர் தாக்குதல்களும் அடக்குமுறையும் ஒழிக்கப் பட்டு, நீதி நிலைநாட்டப் படும்வரை, இறைநம்பிக்கை முற்றிலும் அல்லாஹ்வுக்கென்று ஆகும்வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் (விட்டு விடுங்கள். ஏனெனில்,) அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான். அவர்கள் (தாக்குதலை நிறுத்த) மறுதலித்தால், (எதிர்த் தாக்குதல் புரியுங்கள்). அல்லாஹ் உங்களின் திண்ணமான பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் ..." [குர்ஆன் 008:039-040].
"And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere; but if they cease, verily Allah doth see all that they do. If they refuse, be sure that Allah is your Protector ..." [சுட்டி-07]. 
மேற்காணும் வசனங்களில் அப்பாவிகள் எவரையும் கொல்லும்படி கட்டளை ஏதுமில்லை. முஸ்லிம்களை அழித்தொழிக்கப் போர் தொடுக்கும் பகைவரை எதிர்த்துப் போர் செய்வது பற்றிப் பேசப் படுகிறது. இந்த வசனங்கள் பேசும் எட்டாவது அத்தியாயத்தின் பெயரே "போர் வெற்றிப் பொருட்கள்"தான். அதை, அடுத்து வரும் வசனம் உறுதி செய்கிறது: 
 "(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒன்று (20%) அல்லாஹ்(வின் அறவழியில் செலவழிப்பதற்)கும் அவனின் தூதருக்கும் உறவினர்க்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் ..." [குர்ஆன் 008:041]. "And know that out of all the booty that ye may acquire (in war), a fifth share is assigned to Allah,- and to the Messenger, and to near relatives, orphans, the needy, and the wayfarer ..." [சுட்டி-08]. 
*** 
ஹிஸ்டீரியா நோயாளிகள், பேயாடுவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்கு உலக அரசியல் முதல் உள்ளூர் விவகாரம்வரை எல்லாமே அத்துப்படி என்று பிறரை நம்ப வைப்பதற்காக ஏதேதோ உளறிக் கொட்டுவார்கள். முக்காலமும் உணர்ந்தவர்களாகத் தங்களை எண்ணிக் கொண்டு "இவனுக்கு அது நடக்கும்; அவனுக்கு இது நடக்கும்" என்று குறி சொல்வார்கள். பாமரப் பேயாடிகள்கூட பல பாஷைகள் பேசுவர். எனக்குத் தெரிந்த ஒரு ஹிஸ்டீரியா நோயாளிப் பெண் அதுபோல் ஒருமுறை பேய்(!) வந்து உளற, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில், மூன்று மாத விஸிட்டிங் விசாவில் மலேஷியாவுக்குப் போய்விட்டுத் திரும்பி வந்திருந்த ஒருவர் சொன்னார் : "பேய் மலாய் பாஷை சூப்பராப் பேசுது!

 
திண்ணையில் 'புனிதமோசடி'யைப் படித்தபோது எனக்கு அந்தப் பெண் பேயாடிதான் நினைவுக்கு வந்தார்.

 
பார்ப்பதற்குக் கலர் நன்றாக இருப்பதாக நினத்துக் கொண்டு, காவி கலந்த உணவைக் கண்ட இடத்தில் தின்று விட்டு, அதனால் ஏறிய பித்தம், வாந்தி, மயக்கம், அத்தோடு ஹிஸ்டீரியாப் பேயாட்டம் போன்ற கலவைகள் அனைத்துக்கும் சேர்த்து ஆங்கிலத்தில் ஒரு பெயர் கூறுகின்றனர்: "இஸ்லாமோஃபோபியா". தமிழில் "இஸ்லாமிய மிரட்சி".  தற்போது தமிழகத்தில் பரவுகின்ற புதுவகை நோய்.

சுருக்கமாக இமி்.

அதைத்தான் தலைப்பில் படித்தீர்கள். 

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஃஃஃ
சுட்டிகள்:
சுட்டி - 01 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20911296&format=html


சுட்டி - 02 http://www.thinnai.com/?module=displaystory&story_id=20912045&format=html


சுட்டி - 03 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/109.qmt.html


சுட்டி - 04 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/010.qmt.html#010.099


சுட்டி - 05 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/009.qmt.html#009.006


சுட்டி - 06 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/002.qmt.html#002.256


சுட்டி - 07 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.039


சுட்டி - 08 http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/008.qmt.html#008.041

ஞாயிறு, டிசம்பர் 06, 2009

அறிவியலும் அரையவியலும் - 4

மேற்காணும் தலைப்புக்குப் பொருத்தமாக இருந்ததால், வலைப்பதிவர் நல்லடியாரிடம் அனுமதி பெற்று, அவரது 'விரை'ப்பான கேள்விகளும் விடாத பதில்களும்... பதிவு இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது; அவருக்கு நன்றி!
ஃஃஃ

குர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல்! இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ளடக்கியது. குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அனேகக் குறிப்புகள் தற்கால ஆய்வுகளுடன் / நிரூபனங்களுடன் 100% ஒத்துப்போகிறது. எனவேதான் "இதில் முரண்பாடுகள் இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்" என்று ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சவால் விடுகிறது. உலகில் வேறு எந்தநூலும், கொள்கையும் இவ்வாறு சவால் விட்டதாக அல்லது அத்தகைய சவால்களை எதிர்கொண்டு நிலைத்திருப்பதாகவோ அறியமுடியவில்லை.

நிற்க,

திருவாளர் தருமி "மதங்கள்" என்ற தலைப்பில் "இஸ்லாம்-2" குறித்து எழுதி இருந்தார். மனிதவிந்து உற்பத்தியாகுமிடம் குறித்து விந்தையான பதிவு அது! குர்ஆன் வசனம் 86:05-07ஐ மேற்கோள் காட்டி எழுதி இருந்தார்.
5. எனவே, மனிதன் எதிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்பதை (நோட்டமிட்டு)ப் பார்ப்பானாக!
6. குதித்து வெளியாகும் நீரினால் அவன் படைக்கப்பட்டுள்ளான்
7. (ஆணுடைய) முதுகுத் தண்டிற்கும், (பெண்ணுடைய) நெஞ்செலும்புகளுக்குமிடையில் இருந்து அது வெளியாகிறது.
அவரின் கேள்வி எனனவென்றால், "மனிதன் விந்திலிருந்து படைக்கப் பட்டான் என்று நேரடியாகச் சொல்லாமல் முதுகுத் தண்டிற்கும், விலா எழும்புக்கும் இடையில் இருந்து குதித்து வெளியாகும் நீரினால் படைக்கப்பட்டுள்ளான் என்று ஏன் சொல்ல வேண்டும்?" என்றதோடு "விந்துக்கும் முதுகுத் தண்டிற்கும் என்ன தொடர்போ?" என்று அறிவியல்(!) பூர்வமாகக் கேள்வி ஒன்றையும் கேட்டிருந்தார்!

அவரின் பதிவிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் திரும்பத் திரும்ப தெரிவது, இஸ்லாம் குறித்த அரைகுறை தகவல்களுடன் அறிவியலைப் பற்றிய அறியாமையும்தான்!

இது தருமியின் புதிய ஆய்வொன்றுமில்லை. ஏற்கனவே அவர் வேறொரு வசனத்தை எடுத்தெழுதி, அதற்கு விளக்கம் சொல்லப் பட்ட கருதான்:
படைப்புக்கொள்கை: இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி
பதில் : முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது, பார்க்க: 23:12,13 & 14). இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால், நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான்? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?

குர்ஆன் வசனம் 86:07இல் ஒரு குழந்தையின் உருவாக்கத்தில் உள்ள ஒரு பகுதி மட்டும் சொல்லப் படுகிறது. يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ என்பதற்கு விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேறும் திரவம், கருவுக்கான பகுதி மூலம் என்று சொல்கிறது. இங்குக் கேள்வி என்னவென்றால் விந்து (مَنِيٍّ/SPERM) நேரடியாகச் சொல்லாமல் ஏன் திரவம் (مَاءٍ/FLUID) என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும்? என்பதே!

குர்ஆனின் இன்னொரு வசனத்தில் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒரு துளியாக மனிதன் (مَنِيٍّ) இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

இரண்டும் வெவ்வேறு வடிவிலானவை / நிலைகளைக் கொண்டவை என்ற வேறுபாடு நன்கு தெரிந்திருப்பதால் வெவ்வேறான சொல்லாடல் கையாளப் பட்டுள்ளது. ஆணிடமிருந்து வெளியாகும் தாது (SEMEN) பல்வேறு சுரப்பிகளைக் கடந்து இறுதியில் விந்தாக (SPERM) மாற்றமடைகிறது.

கருவாக்கத்திற்கு ஆணின் விந்து (SPERM) பகுதி மூலமாகும். அந்த விந்து ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்பதும் பொதுவானது.

பொதுவான ஒன்றை குர்ஆன் வெவ்வேறு பதங்களில் குறிப்பிடுவதற்கு வேறுபட்ட காரணம் இருக்க வேண்டும். கர்ப்பத்தில் விந்துத்துளியாக இருக்கவில்லையா? என்று கேட்கும் குர்ஆன், விலா எலும்புகளுக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிலிருந்து வெளியேற்றப்பட்ட திரவம் என்று வேறுபடுத்துவது எப்படிச் சாத்தியமாயிற்று?

தாது (SEMEN) என்ற விந்தின் (SPERM) மூலப்பொருள் பற்றி நவீன மருத்துவம் விளக்குகிறது. குர்ஆன் வசனம் 86:06ம் இதைத்தான் சொல்கிறது. நுண்ணாடி (MICROSCOPE) மருத்துவ உபகரணங்களும் சாத்தியமில்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்திராத ஒருவரால் ஒரே விசயத்தை துல்லியமான வெவ்வேறு சொற்களால் விளக்க முடிந்தது?

விந்து (SPERM) ஆணின் விரையிலிருந்து உருவாகிறது என்று பொதுவாக நம்பப்பட்ட காலத்தில் (சமீபகாலம் வரையிலும்கூட) எல்லோரையும்போல் இருகால்களுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து விந்து வெளியாகிறது என்று சொல்லாமல் "விலா எலும்புக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையிருந்து உருவாகும் 'திரவம்' என்று துல்லியமாக வேறுபடுத்திச் சொல்வதன் மூலம் படைப்பின் ரகசியங்களை அறிவித்தவன் படைத்தோன் அல்லாஹ் என்பது இன்னொரு முறை உறுதியாகிறது.

***************************************

தருமியின் பதிவிலும் பின்னூட்டத்திலும் விந்து உற்பத்தியாகுமிடம் விரை (TESTICLE) என திரும்பத் திரும்ப சொல்கிறார்.அவரது பதிவில் பின்னூட்டம் இட்டுள்ள அறிவுசீவிகளும் "ஆமா, ஆமா" என்கின்றனர். நவீன மருத்துவமும் குர்ஆனும் வெவ்வேறு நிலைகளைச் சொல்கின்றன.
தாதுவுடன் (SEMEN) பல்வேறு திரவங்களும், தனிமங்களும் கலந்துள்ளது. SEMINAL VESICLES, PROSTATE GLANDS மற்றும் விரைகளில் சுரக்கும் பிற சுரப்பிகளும் கலந்துதான் விந்தாக ( SPERM ) வெளியேற்றப்படுகிறது. தாதுவுடன் Citric acid, prostaglandin, flavin, ascorbic acid, ergothioneine, cholesterol, phospholipids, fibrinolysin, zinc, phosphatase acid, phosphase, hyaluronidase ஆகிய தனிமங்களுடன் கலந்து விந்தணு fallopian tube நோக்கி நீந்திச் செல்கிறது. இக்கலவைகள் இல்லாமல் பயணிக்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களால் மட்டும் ஆரோக்கியமான கருவாக்கம் சாத்தியமில்லை என்று நவீன மருத்துவம் சொல்கிறது.

இருதொடைகளுக்கு இடைப்பட்ட உறுப்பிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சொல்லாமல், முதுகுத் தண்டுக்கும் விலா எலும்புக்கும் இடைப்பட்ட பல்வேறு சுரப்பிகளிலிருந்து உருவாகும் தாது (SEMEN) குறித்து இவ்வசனத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
"எல்லாம் தெரிந்த கடவுள் அறிவியல் உண்மைகளைச் சொல்ல வேண்டுமென்றால், 2 + 2 = 4 என்றல்லவா சொல்ல வேண்டும். விந்திலிருந்து மனிதன் பிறக்கிறான் என்று சொல்வதை விட இடுப்பிலிருந்து வரும் திரவத்தால் மனிதன் பிறக்கிறான் என்பது என்ன அறிவியல்?"
என்று தருமி கேட்கிறார். தான் விரும்பும் சொல்லை - அது பிழையாக இருந்தாலும் - தான் நம்பாத கடவுள் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அவருக்கே ஓவரா தெரியவில்லை? ;-)

மேலும் முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் என்ன தொடர்பென்றும் தருமி கேட்டுள்ளார். முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்புகளால் ஆணின் தாது விருத்தி/விந்து செலுத்தும் வீரியம் குறையும் என்று முதுகுத் தண்டுக்கும் விந்துக்கும் உள்ளத் தொடர்பை தற்கால மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன. (Spinal Cord Injury (SCI) என்று கூகிலிட்டால் தொடர்புடைய சுட்டிகள் கிடைக்கும்.)

கருவின் பல்வேறு நிலைகள் குறித்து விளக்கும்போது வெவ்வேறு சொற்களைக் குர்ஆன் ஆளுகின்றது. காட்டாக,
"ஒவ்வொருவனுக்கும் அவன் மனிதனாக (பிறப்பெடுக்கு) முன்னர் ஒரு கால இடைவெளி சென்றுவிடவில்லையா? அக்காலகட்டத்தில் அவன் இன்ன ஒன்றாய் இருந்தான் என்று குறிப்பிட்டுக் கூறவியலா நிலையில் இருக்கவில்லையா?
(பின்னர், ஆண்-பெண்ணின்) கலப்பான விந்திலிருந்து மனிதனைத் திண்ணமாக நாமே படைத்தோம் ..." அல் குர்ஆன் 76:1-2.
ஆணின் விந்தும் பெண்ணின் சினைமுட்டையும் கலந்துதான் கரு உருவாகிறது என்பது அண்மைக்காலக் கண்டுபிடிப்புத்தான்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இஸ்லாம்-1இல் இவர் எடுத்து வைத்த கேள்விகள் கேலிக்கூத்தானவை.
(சில ஐயங்கள்:)
ஒரே கடவுளால் தரப்பட்ட சட்டங்கள் எப்படி வித்தியாசமாகின?
பழைய ஏற்பாட்டில் கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்ற பழி வாங்குதல் எப்படி கிறித்துவர்களின் - ஈசாவின் - சட்டத்தில் இடது கன்னத்தில் அடித்தால் வலது கன்னத்தைக் காட்டு என்றாயிற்று? பின் எப்படி குரானில் மறுபடியும் பழைய நிலை வந்தது?
600 வருஷத்துக்கு முன்னால் கடவுள் ஈசா நபியிடம் 'வாளை உன் உறையில் போடு; ஏனெனில் வாளை எடுத்தவன் வாளால் சாவான்' என்று அவரைச் சொல்லும்படி அறிவுறுத்தி விட்டு, அதன் பின் 600 வருஷம் கழித்து பல போர்க்களங்களை தன் நபியைக் காணச் செய்கிறார். ஏனிப்படி 600 வருஷத்தில் ஜெகோவாவிடம் / அல்லாவிடம் ஒரு மாற்றம்?
"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைத் திருப்பிக் காட்டு என்று நாம் ஈஸாவுக்குக் கட்டளை இட்டிருந்தோம்" என்றும் "வாளை எடுத்தவன் வாளால் சாவான்" என்றும் குர்ஆனில் இருந்தால்தான் இஸ்லாமியக் கடவுள் மாற்றி மாற்றிப் பேசுகிறார் எனப் பொருள் கொள்ள முடியும். நினைத்த நேரத்தில் நினத்தவர்கள் நிறையப் பேரால் திருத்தப் பட்டு, நடைமுறையில் உள்ள புதிய ஏற்பாடு என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று யார் தருமிக்குச் சொல்லிக் கொடுத்தது? என்று புரியவில்லை.

எல்லாவற்றையும் படிப்பது நல்லதுதான். ஆனால், ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளக் கூடாது; குழம்பக் கூடாது; குழப்பம் விளைவிக்கக் கூடாது.

இஸ்லாத்தைப் புறந்தள்ளப் புதிதாக ஒரு காரணம் கண்டு பிடித்திருக்கிறார் தருமி:
இசையின் ஆரம்பமே கடவுளோடு இணைந்தது என்பார்கள். கோவிலில் பாடப் பட்டு, பின்பு அரசர்களின் அரண்மனைக்குள் நுழைந்து, பின் மக்களிடம் இசை வந்ததென்பார்கள். Divine music -> Chamber music -> Popular music. ஆனால், இங்கு கடவுளே இசையை மறுக்கிறது; வெறுக்கிறது! பக்தியை இசையால் நிரப்பிய நம் சமூகத்தில் இந்தக் கருத்து ஒரு ஆச்சரியத்தைத்தான் அளிக்கிறது. பாடலும், இசையும், ஒவியமும் இச்சை தூண்டும் கருவிகளா? இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல; நம்ப முடியாத ஒன்று. நிச்சயமாக இது ஒரு தனிமனிதனின் (முகமது) விருப்பு வெறுப்பாக இருக்க முடியுமே ஒழிய சர்வ நிச்சயமாக 'ஒரு கடவுளின்' விருப்பு வெறுப்பாக இருக்கவே முடியாது. இஸ்லாமைப் புறந்தள்ள இந்த ஒரு காரணம்கூட போதும்.
"என்பார்கள்" என்பவர்கள் யார்? என்பதைக் கடைசிவரை தருமி சொல்லவில்லை. இசை என்பது மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்வது. தன்னிலை மறக்கும் மயக்கும் எதுவும் இஸ்லாத்தில் இடம்பெறவியலாது. மற்றபடி இச்சை தூண்டுவது என்று இஸ்லாம் கூறுவதாக தருமி ஏதோதோ எழுதுகிறார்.

தருமிக்கு இஸ்லாம் வெறுத்துப் போனதுக்கு அவர் கூறிய முதல் காரணம் விசித்திரமானது. "இஸ்லாத்தில் முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை" என்று தருமி தொடக்கத்தில் வெறுத்துப் போயிருந்தார்.அது தொடர்பாகப் பகுத்தறிவாளன் எனும் பதிவர் 9 கேள்விகளை தருமிக்குப் பின்னூட்டத்தில் வைத்ததாகவும் அந்தப் பின்னூட்டத்தைத் தருமி முடக்கி விட்டதாகவும் பதிவொன்றில் அவர் சலித்துக் கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது.

திங்கள், நவம்பர் 09, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 25

ரீஅத்தைத் தாண்டி, தரீக்கத்தைக் கடந்து, ஹகீக்கத்தில் எவர் காலூன்றி விடுகிறாரோ அவர் இறைவனோடு ஃபனா ஆகி, மஃரிஃபாவுடைய ஞானத்தைப் பெற்று விடுகிறாராம். அதாவது இறைவனோடு இரண்றக் கலந்து விடுகிறாராம். இதை ஓர் உதாரணம் மூலம் விளக்குவர் ஸூஃபிகள். அதாவது,

இஸ்லாம் என்பது ஒரு வட்டம். அதன் வெளிவிளிம்புதான் வெளிரங்கமான ஷரீஅத். வட்டத்தின் மையப் புள்ளியே உள்ரங்கமான ஹகீக்கத்தாம். ஷரீஅத் எனும் வெளிவிளிம்பிலிருந்து ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கிச் செல்லும் ஆரமே தரீக்கத் எனும் ஞானப் பாட்டையாம். இந்தத் தரீக்கத் எனும் கோடு எந்த அளவுக்கு ஹகீக்கத் எனும் மையப் புள்ளியை நோக்கி நெருங்கி, நெருங்கிச் செல்கிறதோ, அந்த அளவுக்கு மனிதன் இறைவனை நெருங்குகின்றானாம். நெருங்கி, நெருங்கி, இறுதியில் இந்தக் கோடு கடைசியாக அந்த மையப் புள்ளியைப் போய்த் தொடுமன்றோ? அப்போது இந்த ஞானவான், இறைவனோடு ஒன்றிக் கலந்து விடுகிறானாம். இவ்வாறு கலந்த நிலையே மஃரிஃபத்தாம்.

மஃரிஃபாவுடைய நிலயை எய்தி, இறைவனோடு ஃபனாவாகி - ஒன்றிக் கலந்து - விட்ட ஸூஃபிக்கு உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் இறைவனாகவே காட்சி வழங்குமாம். அவனும் இறைவன்தானாம். இந்த வழிகெட்ட கோட்பாட்டை ஸூஃபிஸத்தின் ஆரம்ப நிலையில் அனுபவித்த பக்த கோடிகள் அதைத் தம் உள்ளத்துக்குள்ளேயே வைத்துக் கொண்டார்கள்.

"சொல்லத் தகுமல்ல இப்பொருளை
சுருட்டி மறைக்கிறேன் ஷரஹுக்காக"

என்று பீரப்பா பாணியில் ஆரம்பகால ஸூஃபிகள் மஃரிஃபா ஞானத்தை வெளிப் படுத்தினார்களில்லை.

இவ்வாறு ஒளிவு-மறைவாக மஃரிஃபா ஞானம் அடைந்து கிடந்தபோது அதை வெளிப்படுத்தி ஆன்மீக உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஒரு 'புரட்சித் தலைவர்'.

"நேசனும் நேசிக்கப் பட்டவனும் ஒருவனே! என்னைக் காணும்போது அவனைக் காணுகின்றீர்கள். நாங்கள் இருவரும் ஒரே உருவில் ஒன்றிவிட்ட இரு ஆன்மாக்களாகும்" என்று அந்தப் புரட்சியாளர் பகிரங்கமாகப் பறை சாற்றினார்.

"அனல் ஹக் - நானே அல்லாஹ்" என்பது இவருடைய ஆன்மீக கோஷமாயிற்று. உடனே, அப்போதிருந்த ஷரீஅத் கோர்ட் உஷாராயிற்று. அந்தப் புரட்சித் தலைவரான ஹுஸைன் இப்னு மன்ஸூர் ஹல்லாஜ் என்ற ஸூஃபியை, காஃபிர் எனத் தீர்ப்புரைத்தது. அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிகழ்வு ஹிஜ்ரீ 309ஆம் ஆண்டு இராக்கில் நடந்ததாகும்.

தொடரும் …

சனி, அக்டோபர் 17, 2009

அறிவியலும் அரையவியலும் - 3

டந்த 9 அக்டோபர் 2009 திண்ணை இதழில் அப்துல் அஸீஸ் எனும் பெயரில் எழுதுபவர், "அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப்பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன [021:033] என்று இவர் குறிப்பிடும் இடத்தில் தெளிவாக தரையும் அப்படியே சூரியனை சுற்றி வருகிறது என்று எழுதியிருக்கிறதா என்று படித்து சொல்ல வேண்டுகிறேன்" என்று திண்ணை ஆசிரியரை (அன்புள்ள ஆசிரியருக்கு) வேண்டியிருந்தார்.
முதல் மடலில், "உலகம்" என்றும் "பூமி" என்றும் எழுதியவர் இப்போது "தரை"க்கு இறங்கி விட்டார். தரை என்பது நீர் உட்பட எதுவுமில்லா நிலத்தைக் குறிக்கும் சொல்லாகும். பூமியின் மூன்றில் இரண்டு பங்கைச் சூழ்ந்திருக்கும் கடல், நமது "தரை"க்குத் தொடர்பற்றது போல் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பது வியப்பளிக்கிறது!

வானில்தான் சூரியனும் சந்திரனும் இருக்கின்றன என்பது, நிலவைக் காட்டி உணவூட்டும் தமிழ்த் தாயின் இடுப்பில் இருக்கின்ற குழந்தைக்கும் தெரிந்ததுதான். என்றாலும் அதைக் குர்ஆனின் சொற்களால் நிரூபிக்க வேண்டிய கட்டாயச் சூழல் எனக்கு. ஏனெனில், போகிற போக்கைப் பார்த்தால், "வானில்தான் சூரியனும் சந்திரனும் உள்ளது என்று குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கிறதா?" எனக் கட்டுரையாளர் அறிவுப்பூர்வமான கேள்வியைக் கேட்டு விடும் வாய்ப்பிருப்பதால்,
"ஏழு வானங்களையும் அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்கக் கூடாதா? அவற்றில் சந்திரனை வெளிச்சமாகவும் சூரியனை ஒளிவிளக்காகவும் அமைத்தவன் அவனே!" [071:015,016] Allah has created the seven heavens in tiers and has made the moon a light therein, and made the sun a lamp meaning, He made a distinction between them (the sun and moon) in reference to their lighting. He made each one of them in a set manner with a distinct quality so that the night and day may be known. They (the night and day) are known by the rising and setting of the sun. He also determined fixed stations and positions for the moon, and He made its light vary so that sometimes it increases until it reaches a maximum, then it begins to decrease until it is completely veiled. This shows the passing of months and years.
என்று குர்ஆன் தெளிவாகக் கூறுவதை உறுதி செய்வது எனது கடமையானது.

அடுத்து,

"வானில் இருக்கும் சூரியன்-சந்திரனோடு வானுக்குச் சம்பந்தம் இல்லாத பூமியைக் 'கொண்டுபோய்' சேர்த்துச் சொல்வது சரியாகுமா?" என்பது கட்டுரையாளரது முக்கிய ஆட்சேபணையாகும்.
"திண்ணமாக, வானங்கள்-பூமி ஆகிய அவ்விரண்டும் விலகி விடாதவாறு அல்லாஹ்தான் தடுத்து வைத்திருக்கிறான்.  அவை இரண்டும் விலகுமாயின் அவை இரண்டையும் தடுத்து நிறுத்த அவனையன்றி எவராலும் முடியாது ..." [035:041] Verily, Allah grasps the heavens and the earth lest they should move away from their places, and if they were to move away from their places, there is not one that could grasp them after Him.
மேற்காணும் இறைவசனத்தில் அரபு மொழியின் சிறப்பு எண்ணான இருமை تَزُولاَ  ஆளப் பட்டுள்ளது ஈண்டு நோக்கத் தக்கது.

ஏனெனில், எனது முதல் எதிர்வினையில் எடுத்துக் காட்டாகக் குறிக்கப் பட்டதும் கட்டுரையாளரின் மறுப்புக்குரியதுமான, "...அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப்பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" எனும் 021:033 இறைவசனத்தில் சூரியன் - சந்திரன் ஆகிய இரண்டையும் குறிக்க இருமைச்சொல் ஆளப்படவில்லை என்பதும் "ஒவ்வொன்றும்/எல்லாமும்" எனப் பன்மைச் சொல் كُلٌّ பயன் படுத்தப்பட்டுள்ளதும் கட்டுரையாளர் விளங்க வேண்டிய கட்டாயக் கருவாகும்.

அந்த வசனத்தில் ஏன் இருமை ஆளப்படவில்லை? எனும் வினாவுக்கு விடை, அந்த இறைவசனத்தில் இருமைக்கு மேற்பட்டவை இடம் பெறுகின்றன என்பதுதான். அந்த வசனம் முழுமையாக :
"அவன் தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" [021:033] And He it is Who has created the night and the day, and the sun and the moon, each in an orbit floating.
மேற்காணும் இறைவசனத்தில் உள்ள இரவு-பகல் என்பன பூமிக்குச் சொந்தமானவை. இரவு-பகல் மாறி வரும் பூமியும் வானங்களும் பால்வளிப் பயணத்தின் சகபயணிகள் என்பதை இதைவிடத் தெளிவாகச் சொல்லவும் வேண்டுமோ?

கட்டுரையாளரின் கருத்துப்படி சூரியன்-சந்திரன் இரண்டும் பூமியை அம்போ என்று விட்டுவிட்டு நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன எனக் கொண்டால் ... பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், சூரிய ஒளியின்றி இருளில் மூழ்கி எப்போதோ செத்திருப்போம்.

மேற்காணும் விளக்கங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதல்ல. தலைக்குள் இருப்பதைப் பயன் படுத்தும் எவருக்கும் எளிதாக விளங்கக் கூடியவைதாம் - அதுவும் கட்டுரையாளரின் கூற்றுப்படி, "700 ஆண்டுகளுக்கு முன்னர் சரியாக எழுதி வைத்த இமாம் இபுனு கஸீர்" விளக்குவதால்.

மறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).
ஃஃஃ
திண்ணை குறிப்பு:
இந்த விவாதம் இத்துடன் முற்றுப்பெறுகிறது.

ஞாயிறு, அக்டோபர் 11, 2009

அறிவியலும் அரையவியலும் - 2

டந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில், "அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல்குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் கட்டுரை ஒன்று அப்துல் அஸீஸ் என்ற பெயரில் வெளியாகி இருந்தது. அதற்கு எதிரிவினையாகக் கடந்த வாரம், "அறிவியலும் அரையவியலும்" எனும் தலைப்பில் அவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தேன்.

கட்டுரையாளர் அப்துல் அஸீஸுடைய பார்வையில் முதல் குற்றவாளியான டாக்டர் மாரிஸ் புகைல் விசாரிக்கப்பட்டுவிட்டதால் இரண்டாவது குற்றவாளியான புவியியல் முனைவர், பேரா. ஸக்லூல் ராகிப் முஹம்மது அல்-நஜ்ஜாரை இந்த வாரம் திண்ணைக் கூண்டில் ஏற்றுவோம்.

"பூமி சுழன்று கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருக்கிறது; அதனால்தான் இரவு-பகல் ஏற்படுகிறது" என்று அல்-நஜ்ஜார் கூறும் "காஃபிர் (!) கருத்தை" விசாரிப்பதற்கு முன்னர் சூரியன், சந்திரன், இரவு, பகல் குறித்து இறைமறை குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்துவிட வேண்டியுள்ளது. ஏனெனில் அது தெரியாவிட்டால் அல்-நஜ்ஜார், தன் விருப்பத்திற்கு ஏற்ப விஞ்ஞானக் கருத்துகளைக் கூறுகிறாரா? அல்லது குர்ஆன் கூறுவதை ஆய்ந்து விளக்குகிறாரா? என்பது நமக்குத் தெளிவாகாது.

சூரியனும் சந்திரனும்
"சூரியன், தனக்கு விதிக்கப் பட்ட காலம்வரை அதற்கென வரையறை செய்யப் பட்ட வழியில் ஓடிக் கொண்டிருக்கிறது ..." And the sun runs on its fixed course for a term (appointed) ....;
"மேலும் உலர்ந்து வளைந்த பழைய ஈச்சைமட்டையைப் போல் மீளும்வரை சந்திரனுக்கு நாம் பல படிநிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்" And the moon, We have decreed for it stages, till it returns like the old dried curved date stalk;
"சூரியன், சந்திரனை எட்ட முடியாது. இரவு, பகலை முந்த முடியாது. அனைத்தும் (வரையறை செய்யப் பட்ட) தம் வழிகளில் நீந்திச் செல்கின்றன" [036:038-040] It is not for the sun to overtake the moon, nor does the night outstrip the day. They all float, each in an orbit.
"இரவுவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் அவன்தான் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தம் வரையறை வழிகளில் நீந்திச் செல்கின்றன" [021:033] (and the sun and the moon,) the sun with its own light and its own path and orbit and allotted time, and the moon which shines with a different light and travels on a different path and has its own allotted time.
நமது சூரியக் குடும்பத்தில், இரவு-பகல் மாறிமாறி வரும் பூமி உட்பட அனைத்தும் நீந்திக் கொண்டிருக்கின்றன. அதாவது தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்தையும் சூரியன் இழுத்துக் கொண்டு எங்கோ சென்று கொண்டு இருக்கிறது என்றும் அனைத்துக்கும் விதிக்கப் பட்டுள்ள காலம்வரை இந்த 'இழுவை இயக்கம்' நிற்காது என்றும் விளங்குகிறது. பால்வளிப் பயணம் எனும் இந்த இழுவை இயக்கத்துக்கு உள்ளேயே சூரியன், சந்திரன், பூமி ஆகிய அனைத்தும் தன்னுள் சுழன்று கொண்டும் இன்னொன்றைச் சுற்றிக் கொண்டுமிருப்பதன் அடிப்படையின்தான் நாள், மாதம், ஆண்டுகளை நாம் கணக்கிடுகிறோம். இரவும் பகலும் பிறையும் கிரகணங்களும் சுழற்சி-சுற்றல்களால் ஏற்படுபவையே.

அப்துல் அஸீஸ் என்ற பெயரில் எழுதிய கட்டுரையாளர், "பாம்பு கவ்விக் கொள்வதால் கிரகணம் ஏற்படுகிறது" எனும் பாட்டிக் கதையை இஸ்லாத்தோடு இணைத்து எழுதாதது ஆறுதல் அளிக்கிறது!.

கிரகணம்

நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகன் இபுறாஹீம் எனும் பாலகன் இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. "அல்லாஹ்வின் தூதரின் மகனது இறப்புக்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்கிறது" என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். தன் பாலகனை இழந்திருந்த அந்த வேளையிலும் மக்கள் பேச்சை மறுத்து, அதைத் திருத்தும் விதமாக, "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு சான்றுகளாகும். எவருடைய பிறப்புக்காகவோ இறப்புக்காகவோ அவை ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அது விலகும்வரை தொழுங்கள்" என்று நபிகள் நாயகம் கூறினார்கள் [புகாரீ 1060].
"இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் அவனுடைய படைப்பாற்றலுக்கான சான்றுகளாகும். எனவே, நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை வணங்குபவர்களாயின் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸுஜூது செய்ய வேண்டாம். அவற்றைப் படைத்தவனான அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்" [041:037] And from among His signs are the night and the day, and the sun and the moon means, He created the night with its darkness and the day with its light, and they alternate without ceasing. And He created the sun with its shining light, and the moon with its reflected light. and He allotted their stages and gave them separate orbits in the heavens, so that by the variations in their movements man may know the stages of night and day, of weeks, months and years, and time periods related to people's rights, acts of worship and various transactions. Moreover, because the sun and moon are the most beautiful of the heavenly bodies that can be seen in both the upper and lower realms, Allah points out that they are created entities which are in a state of enthrallment to Him, subject to His dominion and control. (Do not prostrate yourselves to the sun nor to the moon, but prostrate yourselves to Allah Who created them, if you (really) worship Him.) meaning, `do not associate anything in worship with Him, for your worship of Him will be of no benefit to you if you worship others alongside Him, because He does not forgive the association of others in worship with Him.
இரவும் பகலும்
"திண்ணமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான் ..." [031:029] See you not that Allah merges the night into the day, and merges the day into the night ... "...
அவன்தான் பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான் ..." [039:005] He makes the night to go in the day and makes the day to go in the night.) means, He has subjugated them and He causes them to alternate without ceasing, each seeking the other rapidly. "...
அவன்தான் இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; பகலைக் கொண்டு இரவை மூடுகிறான் ..." [007:054] He brings the night as a cover over the day, seeking it rapidly, meaning, the darkness goes away with the light, and the light goes away with the darkness. Each of them seeks the other rapidly, and does not come late, for when this vanishes, the other comes, and vice versa.
"... சந்திரனின் மீதாணை! பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதாணை! (அதனால்) வெளிச்சம் பெறும் விடிகாலை மீதாணை! ..." [074:032-034] ... And by the moon. And by the night when it withdraws And by the dawn when it brightens).
மேற்காணும் வசனங்களில் உள்ள, "புகுத்துவது", "சுருட்டுவது", "மூடுவது" ஆகிய சொற்கள் ஆழ்ந்து நோக்கத் தக்கன. ஏனெனில் அவைதாம் இரவு-பகல் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைத் தெளிவு படுத்துகின்றன.

பகலாக இருக்கும் இடத்தை இரவு மறைத்தாலே அந்த இடம் இரவாக மாறும். எனவே, பகலாக இருக்கும் இடத்தை இரவாக மாற்றுவதற்காக அப்பகலை இரவு மறைத்தல் வேண்டும்.

கட்டுரையாளரின் கருத்துப்படி, சூரியன் பூமியைச் சுற்றுவது என்றால் அதன் ஒளி முழுமையும் சேர்ந்து பூமியைச் சுற்ற வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகல் நகர்ந்த இடத்தை இரவும் இரவு நகர்ந்த இடத்தைப் பகலும் பிடித்துக் கொள்ளும்.

சூரியன் பூமியைச் சுற்றி வருமானால் பூமியின் மீது விழுந்து நகரும் அதனுடைய ஒளி பூமியின் மீதும் அதற்கு வெளியிலும் நகரும். அவ்வாறு சூரிய ஒளி நகர்ந்தால் அந்த ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். ஒளி நகரும் வேகத்தில் ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். எனவே சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் ஒளியும், இருளும் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று சம வேகத்தில் நகர்ந்து கொண்டே செல்வதால் அவ்விரண்டும் ஒன்றையொன்று சுருட்டாது.

ஆனால், பகலுக்குள் இரவு புகவேண்டுமென்றால் பகல் நகராமல் இருக்க வேண்டும். அவ்வாறே இரவுக்குள் பகல் புகவேண்டுமெனில் இரவும் நகராமல் இருக்க வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவுக்குள் பகல் புக முடியாது; போலவே, பகலுக்குள் இரவு புக முடியாது.

குர்ஆனுடைய உயர்ந்த விரிவுரை எவ்வாறு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும்போது, "முதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்" என்று தனது கட்டுரையில் அப்துல் அஸீஸ் என்பார் குறிப்பிட்டிருந்தார்.

அதே அடிப்படையில்தான் பேரா. அல்-நஜ்ஜார் தமது ஆய்வுகளை முன்வைக்கிறார். காட்டாக, இறைவசனம் 017:012இல் "இரவையும் பகலையும் நாம் இரு சான்றுகளாக ஆக்கியிருக்கிறோம்" என்று அல்லாஹ் கூறுவதை, ஆண்டுக் கணக்கில் ஆய்வு செய்ததாகக் கூறுகிறார். அவரது ஆய்வுகள் கட்டுரையாளரின் "உயர்ந்த தஃப்ஸீர்" மதிப்பீட்டுக்கு உரியனவாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லையெனில் மறுத்து விடலாம்.
"... எச்சொல்லை யாரிடமிருந்து கேட்பினும் அவற்றில் நற்சொல்லை மட்டும் ஏற்றுப் பின்பற்றுபவர்களைத்தாம் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான் ... அவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்" [039:017].
மறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).

ஃஃஃ 

திண்ணையில் ... http://www.thinnai.com/?module=displaystory&story_id=80910095&format=html

ஞாயிறு, அக்டோபர் 04, 2009

அறிவியலும் அரையவியலும்

"றிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் தலைப்பில் அப்துல் அஸீஸ் என்ற பெயரில் கடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில் ஒரு பதிவு வெளியானதைப் படிக்க நேர்ந்தது.

அறியாமையினாலோ அறிந்துகொண்டோ மிகத் தவறாக அவர் விளங்கிய/விளக்கிய இறைமறை வசனங்களின் உண்மை நிலையை இங்கு விவரிப்பதற்கு முன்னர் ஒரு பழித்துறப்பு (Disclaimer):

புதிதாக ஏதேனும் ஓர் அறிவியல் தகவல்/கண்டுபிடிப்பு வெளியானவுடன் அது நிறுவப்பட்டதா ஆய்வில் உள்ளதா என்பதைக்கூட அறிந்து கொள்ளும் பொறுமையின்றி, அந்தத் தகவல்/கண்டுபிடிப்பு "ஏற்கனவே குர்ஆனில் இன்னின்னவாறு சொல்லப்பட்டு இருக்கிறது" என்று தங்கள் விருப்பப்படி பரப்புரை செய்வதற்குப் படித்த முஸ்லிம்களில் ஒரு சிறு கூட்டம் இருக்கிறது. அவ்வாறு அவசரகோல பரப்புரையைச் செய்து முடித்து விட்டு, இஸ்லாத்துக்குப் பெரிய சேவை செய்து விட்டதாக எண்ணி மகிழும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான் அல்லன் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைமறை குர்ஆன் அருளப் படுவதற்கு ஏறத்தாழ 750 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் அரிஸ்டாட்டில் (கி.மு. 370-286) என்ற அறிவியல் மேதை, புவிமையக் கோட்பாடு (Earth Centre Theory) என்பதாக இரு முடிவுகளை அறிவித்தார். அவையாவன:

(1) நாம் வாழும் பூமி உருண்டையானது.
(2) ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்கும் பூமியை, சூரியன் சுற்றி வருவதால் இரவு-பகல் ஏற்படுகிறது.

பூமியின் வடிவத்தைப் பற்றி, "அது தட்டையாக இருக்கிறது" என்றோ "முட்டையாக இருக்கிறது" என்றோ குர்ஆன் எங்குமே சொல்லவில்லை. ஆனால், "... கடலில் பயணிக்கும் கப்பல்களிலும் ... சிந்தித்துப் பார்ப்போருக்கு சான்றுகள் இருக்கின்றன" [ 002:164] என்று கூறுகிறது.

பூமி எவ்வாறு இருக்கிறது என்று குர்ஆன் கூறுவதைப் பின்னர் பார்ப்போம்.

"பூமி ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது" எனும் அரிஸ்டாட்டிலின் இரண்டாவது முடிவை, "... அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன" [021:033] எனக் கூறி, குர்ஆன் முற்றாக மறுத்தது.

குர்ஆனின் மறுப்புக்குப் பத்து நூற்றாண்டுகள் கழித்து, 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய கோப்பர் நிக்கஸ் (Coper Nicus, 1473 – 1543), கெப்லர் (Kepler, 1571 – 1630) ஆகிய இரு அறிவியல் மேதைகள் அரிஸ்டாட்டிலின் புவியியல் கோட்பாட்டின் இரண்டாவது முடிவை மறுத்து, "பூமி நகர்ந்து செல்கிறது" எனக் கூறினர்.

இதன் மூலம் நாம் விளங்க வேண்டியது யாதெனில், அறிவிக்கப்படும் எல்லா அறிவியல் முடிவுகளுக்கும் தோதாக இறைமறை வளையாது. நிரூபிக்கப் பட்ட அறிவியலுக்கு எதிராக எதுவும் இறைமறையில் இருக்காது என்பதே.

***

இனி,

மறுப்பு 1 - அறிவியலை அடிப்படையாகக் கொண்டு இறைமறைக்கு எவரும் விரிவுரை எழுதவில்லை
"அறிவியலை அடிப்படையாகக் கொண்டு இறைமறைக்கு விரிவுரை எழுதுவது ஆபத்து" என்பதாகக் கட்டுரையாளர் கவலை தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் தொடக்கத்தில் சுட்டுவது டாக்டர் மாரிஸ் புகைல் 1976இல் எழுதிய In 'La Bible le Coran et la Science' (அறிவியல் ஒளியில் பைபிளும் குர் ஆனும் -The Bible, the Qur'an and Science) என்ற நூலாகும்.

ஆறாயிரத்திற்கும் அதிகமான வசனங்களைக் கொண்ட இறைமறையில், டாக்டர் மாரிஸ் புகைல் அவரது ஒப்பீட்டு ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எனவே, இறைமறைக்கு இதுவரை யாரும் அறிவியலை அடிப்படையாக வைத்து முழு விரிவுரையையும் எழுதிவிடவில்லை என்பதை இங்கு அழுத்திச் சொல்ல வேண்டியதாகிறது.

ஏனெனில்,

இறைமறை அல்குர்ஆன் என்பது ஒரு புவியியல் நூலன்று; வானியல், கடலியல் இன்ன பிற அறிவியல் நூலுமன்று. பள்ளியிலோ கல்லூரியிலோ மாணவர்களுக்குப் புவியியலையும் வானியலையும் கடலியலையும் இன்னபிற அறிவியல்களையும் கற்றுக் கொடுக்குப்பதற்காக இறைவன் அதை அருளவில்லை. மாறாக, "மனிதர்களுக்கு இது தெளிவான நேர்வழியைக் காட்டும்" [002:185] என்று அறிமுகப் படுத்துகிறான். ஆனால் இறைமறை கூறியிருக்கும் எந்த இயலும் நிரூபிக்கப் பட்ட அறிவியலோடு மோதாது; மாறாக, "சிந்தித்துப் பாருங்கள்" எனக்கூறி மேற்கொண்டு ஆய்வுக்குத் தூண்டும். முற்றாக நிரூபிக்கப் படாத "டார்வின் தியரி" என்ற பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு பல்லாண்டு கொண்டாடப்பட்ட காலகட்டம் நெடுகிலும் குர்ஆனின் நிலைபாட்டை வளைத்து, "குரங்கிலிருந்து மனிதன் என்று குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கிறது" என்பதாக எவரும் "அறிவியல் விரிவுரை" எழுதவில்லை. நமது சமகாலத்தில் டார்வின் தத்துவம் பொலபொலத்துப் போனது. "மனிதனைப் பொருத்தவரை படைப்புதான் சரி; பரிணாம வளர்ச்சி என்பது அறிவியலுக்கு ஏற்புடையதன்று" என்பதைத்தான் டாக்டர் மாரிஸ் புகைல் தனது "மனிதனின் மூலம்" எனும் நூலில் விளக்குகிறார்.

மறுப்பு 2 - "பூமி தட்டையாக இருக்கிறது" என்று குர்ஆன் கூறவில்லை
"அரபி மொழியில் தட்டை என்ற பொருளில் எத்தனை வார்த்தைகள் உண்டோ அத்தனை வார்த்தைகளையும் உபயோகித்து அல்லாஹ் அல்குர்ஆன் வசனங்களை இறக்கியுள்ளான்" என்று எழுதி கட்டுரையாளர் தம் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தம் கருத்தை வலியுறுத்த அவர் மேற்கோள் காட்டும் அரபுச் சொற்கள்: (1)ஃபிராஷா, (2)மத்த, (3)மதத்னாஹா, (4)மஹ்தன், (5)தஹாஹா, (6)ஸுடிட், (7)மிஹாதா, (8)பிஸாடா, (9)ஃபரஷ்னாஹா ஆகியன.

மேற்கண்ட 9 சொற்களிலும் 1ம் 9ம் ஒரே சொல்லோடு இணைந்த உரியும் வினையுமாகும்; 2ம் 3ம் படர்க்கையும் தன்னிலையும் இணைந்த சொற்களாகும்; 4ம் 7ம் ஒரே சொல்லின் இருவகை உரிகளாகும்; 6இலும் 8இலும் கட்டுரையாளர் பயன் படுத்தியிருக்கும் 'ட'கரங்கள் அரபு மொழியிலேயே இல்லாதவையாகும்.
கட்டுரையாளர் எழுதிய சொற்களுக்கு அகராதிப் பொருள்கள்:

ஃபிராஷ் : படுக்கை.
மஹ்து : தொட்டில்.
மத்த/மதத் : விரிவு.
பிஸாத் : தரை விரிப்பு.
ஸுத்திஹத் : பரந்துபட்ட.

மேற்காணும் அகராதிச் சொற்களில்கூட "தட்டை" என்று தமிழாக்கக் கூடிய எச்சொல்லும் இல்லை.

புகழ் பெற்ற இறைமறை விரிவுரையாளர் இமாம் இபுனு கஸீர் 700 ஆண்டுகளுக்கு முன்னர் "சரியாக" எழுதி வைத்த விரிவுரையைப் படித்திருப்பதாகப் புகழ்ந்துரைக்கும் கட்டுரையாளரின் பார்வைக்கு இமாம் இபுனு கஸீரின் சொல் விளக்கங்கள் ஆங்கிலத்தில் (மூலமொழியில் வேண்டுமெனக் கேட்டாலும் தருவேன்):
ஃபிராஷ் : "Who has made the earth a resting place for you, and the sky as a canopy, and sent down water (rain) from the sky and brought forth therewith fruits as a provision for you. ... ".

"And We have made the earth a Firash, meaning, We have made it a resting place for the created".

மஹ்து : "Who has made earth for you like a bed; and has opened ways for you therein, and has sent down water (rain) from the sky ...".

"Mahdan, which means a place of rest that you settle down upon. It also may mean that which you stand upon, sleep upon or travel upon its back".

"Who has made for you the earth like a bed, means, smooth, stable and firm, so that you can travel about in it, and stand on it and sleep and walk about, even though it is created above water, but He has strengthened it with the mountains, lest it should shake" 043:010.

"Have We not made the earth as a bed, meaning, an established, firm and peaceful resting place, that is subservient to them" 078:006.

மத்த : "And it is He Who spread out the earth, and placed therein firm mountains and rivers and of every kind of fruit He made Zawjayn Ithnayn (two in pairs). He brings the night as a cover over the day. Verily, in these things, there are Ayat (signs) for people who reflect" 013:003.

"And We have spread out the earth, and have placed firm mountains in it, and caused all kinds of things to grow in it, in due proportion" 015:019.

"And the earth! We have spread it out, means, We made it spacious and spread it out" 050:007.

தஹாஹா : "By the earth and Ma Tahaha, Mujahid said, Tahaha means He spread it out''.

"And after that He spread the earth, He explains this statement by the statement that follows it" 079:030.

பிஸாத் : "And Allah has made for you the earth a wide expanse meaning, He spread it out, leveled it, settled it, and stabilized it with firm and lofty mountains" 071:019.

ஸுத்திஹத் : "And at the earth, how it is outspread meaning, how it has been spread out, extended and made smooth ..." 088:020.

மேற்காணும் ஏதேனும் ஒரு வசன விளக்கமாவது "பூமி, தட்டை" என்று சொல்கிறதா?

"பூமி தட்டை வடிவத்தில் இருக்கிறது என்று குர்ஆன் சொல்கிறது" என ஏதோ ஓர் உள்நோக்கத்தோடு கூற முயல்வதாகத்தான் கட்டுரையாளரைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஏனெனில், கட்டுரையாளர் இணையத்தில் கட்டுரை எழுதும் அளவுக்குப் படித்தவராக இருக்கிறார்.

அவர் பள்ளியில் படித்த காலத்தில், "கடலில் இருந்து கரையை நோக்கி வரும் கப்பலின் பாய் மரத்தின் நுனி முதலாவதாக நம் கண்களுக்குத் தெரிவதும் கரையிலிருந்து கப்பல் [ 002:164] புறப்பட்டுச் செல்லும்போது முதலாவதாக அதன் அடித்தளமும் இறுதியாகப் பாய்மரமும் மறைவதும் ஏன்?" என்ற கேள்விக்கு பதிலைத் தெரிந்து சரியாகத்தான் எழுதியிருப்பார்.

"சூரிய-சந்திர கிரகணங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன?" என்ற கேள்விக்கும் பதில் எழுதி இருப்பார். "முதல் பிறை வளைவாகப் பிறப்பதேன்?" என்றும் "ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எப்படிக் கணக்கிடப் படுகிறது?" என்றுங்கூட தெரியாத அறிவிலியாகக் கட்டுரையாளரை நினைக்க முடியவில்லை.

பிற மறுப்புகள் பின்னர் (இன்ஷா அல்லாஹ்).

ஃஃஃ

புதன், செப்டம்பர் 09, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 23

னி, வ.உக்காரர்கள் தங்கள் கோட்பாட்டுக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் ஒரு முக்கியமான ஹதீஸைப் பார்ப்போம். புகாரீயில் இடம் பெறும் கீழ்க்காணும் முழு ஹதீஸில் தங்களுக்குச் சாதகமான பகுதியை மட்டும் அவர்கள் மேற்கோளாக எடுத்துப் பேசி, அத்துவைதக் கொள்கைக்கு வக்காலத்து வாங்குவார்கள். அந்த முழு ஹதீஸையும் நாம் பார்ப்போம்:
"என்னுடைய தோழன் ஒருவனோடு பகைமை பாராட்டுபவனோடு நான் பகையாகவே இருப்பேன். என்னுடைய அடியான் என்பவன், நான் அவன் மீது கடமையாக்கி இருக்கின்ற கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமாகவே அல்லாமல் வேறெதையும் கொண்டு என்னை நெருங்க முடியாது. இன்னும் நஃபிலான செயல்களைச் செய்வதன் மூலம் நான் அவனை உவக்கும் காலமெல்லாம் அவன் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். நான் அவன் மீது அன்பு கொண்டு விட்டால் அவன் செவியுறும் செவியாக, பார்க்கின்ற கண்ணாக, பிடிக்கின்ற கையாக நான் ஆகிவிடுகின்றேன். அவன் என்னிடம் கேட்பானேயானால் அதனை நிச்சயம் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் அடைக்கலம் தேடினால் அதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுக்கின்றேன்"
என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எடுத்துச் சொன்ன செய்தியை அபூஹுரைரா (ரலி) வழியாக புகாரீ (6502) பதிவில் பார்க்கிறோம். இந்த ஹதீஸின் முன்-பின் பகுதிகளை மறைத்து விட்டு, "அல்லாஹ்வே அடியானின் காதாக, கண்ணாக, கையாக ஆகிவிடுகிறான் அல்லவா?" எனக் கேட்கும் ஸூஃபிகள், "அல்லாஹ்வும் அடியானும் ஒன்றிக் கலந்து விட்டதைத்தானே இது காட்டுகிறது?" எனக் கேட்டு இணைவைப்புக் கொள்கைக்கு நியாயம் கற்பிப்பார்கள். மேற்காணும் ஹதீஸில் துண்டுப் பார்வை செலுத்தியதால் வந்த வினை இது. இதன் மீது முழுப் பார்வையைச் செலுத்தி இருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்காது.

அதே பத்ருப் போர் நிகழ்ச்சிகளுடன் இந்த ஹதீஸைப் பொருத்திப் பார்ப்போம். இஸ்லாத்தின் விரோதிகள் அல்லாஹ்வின் நேசர்களாகிய முஸ்லிம் வீரர்களுடன் பகைமை பாராட்டுகிறார்கள். தன்னுடைய நேசர்கள் மீது எவர் பகைமை பாராட்டுகிறாரோ அவர்களுக்கு அல்லாஹ்வே பகைவனாக ஆகிவிடுகின்றான். பத்ரு வீரர்கள் அல்லாஹ்வின் நேசர்களானது எப்படி என்பதையும் மேற்காணும் ஹதீஸ் வரிசையாகச் சொல்லி வருகிறது.

அல்லாஹ் அந்த முஸ்லிம் வீரர்கள் மீது எவற்றையெல்லாம் கடமைகளாக ஆக்கினானோ அவற்றையெல்லாம் அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றனர். அல்லாஹ்வுக்காகத் தங்கள் பிறந்த மண்ணையே பிரிந்து வந்திருக்கின்றனர்.

இவ்வாறாக அல்லாஹ் இட்ட கட்டளைகளை நிறைவேற்றித்தான் அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருங்கிய நேசர்களானார்கள். அதுமட்டுமின்றி, மென்மேலும் உபரி(நஃபில்) ஆன நற்செயல்களையும் செய்து அவர்கள் அல்லாஹ்வின் முழுப் பொருத்தத்தையும் பெற்றிருந்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படிப் பட்ட இறைப் பொருத்தத்தைப் பெறுவதில் முதலிடம் வகித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போர் வீரர்களுக்குத் தலைமை தாங்கி, வெற்றிக்காக இறைவனிடம் கையேந்தினார்கள். அவர்கள் எந்த வெற்றிக்காகக் கையேந்தினார்களோ அந்த வெற்றியை இறைவன் அவர்களுடைய கைகளில் வாரிக் கொடுத்தான்.

பகைவர்கள் தோற்று, அவல ஓலமிட்டபோது அந்த ஓசையைத் தன் தோழர்களின் செவிகளுக்கு விருந்தாக அல்லாஹ் ஆக்கி வைத்தான்; எதிரிகள் புறமுதுகிட்டு ஓடிய காட்சியைத் தன் நேசர்களைக் கொண்டு கண்ணாரக் காண வைத்தான்; தன்னுடைய நேசர்களின் சிறிய கூட்டமொன்று பெரியதொரு வெற்றியைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து அந்தச் சின்னஞ் சிறிய கூட்டத்தினரின் கைகளுக்கும் கால்களுக்கும் ஓர் அற்புத ஆற்றலை வழங்கினான். அல்லாஹ்வே அவர்களுக்கு உற்ற துணையாயிருந்து வெற்றி புரிந்திருக்கிறான்.

இந்த வெற்றி, முழுக்க முழுக்க பத்ரு வீரர்களுடைய அவயங்களின் ஆற்றலால் ஈட்டியதன்று என்பதைச் சுட்டிக் காட்டுவதாகத்தான் "அவனுடைய காதாக, கண்ணாக, கரமாக நான் ஆகி விடுகிறேன்" என்றான் அல்லாஹ். "நம்மோடு காதாக, கண்ணாக, கரமாக அல்லாஹ் இரண்டறக் கலந்து விட்டான்; இனி நாம் வேறு அவன் வேறு என்றில்லை. நாம்தான் அல்லாஹ்; அல்லாஹ்தான் நாம்" என்று அந்த முஸ்லிம் வீரர்கள் எண்ணினார்களா? அப்படி எண்ணத்தான் முடியுமா? அப்படிப் பட்ட எண்ணத்துக்கு இடமேயில்லை என்பதை அதே ஹதீஸின் பிற்பகுதி தெளிவு படுத்துகிறது.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்.