திங்கள், நவம்பர் 09, 2009
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 25
செவ்வாய், ஜூலை 22, 2008
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 19
இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு முற்றினுஞ் சிறப்பித் தன்பாய் முறை முறை வானோ ரியாரும் வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ (பாடல் 184).திருஷ்டி சுற்றி எறிதல் என்பது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். "அந்தச் செயலைச் செய்யுமாறு அல்லாஹ் சொல்லியிருந்தால் அது குர்ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டுமே என்று யாரும் கேட்டு விடக் கூடாது. ஒலியுல்லாஹ் அவர்கள் அப்போது 'ஆலமுல் அர்வாஹ்' எனும் மேலுலகில் ஆஜராகி இருந்து அல்லாஹ் வானவர்களிடம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என நல்லெண்ணம் கொள்ள வேண்டும்" என்பர் சில இலக்கியச் செவிடுகள்.
மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹா வென் றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச் சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றி நின் றெறிந்திட்டாரால் (பாடல் 128).அல்லாஹ்வின் பெயரால் பொய் சொல்லக் கூடியவனைவிட அநியாயக்காரன் யார்? என்று இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே! அந்த அநியாயக்காரர்களின் பட்டியலில் ஆலமுல் அர்வாஹில் ஆஜராகியிருந்த உமருப் புலவர் வருவாரா மாட்டாரா?
வெள்ளி, ஏப்ரல் 04, 2008
அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்
"எல்லா மகவுகளும் (இஸ்லாம் என்ற) இயற்கை நெறியில்தான் பிறக்கின்றன. அவற்றின் பெற்றோர்தாம் யூதராகவோ, கிருத்துவராகவோ தீவணங்கியாகவோ அவற்றை வளர்த்து விடுகின்றனர்..." (புகாரீ 6110).
Islam has surpassed Roman Catholicism as the world's largest religion, the Vatican newspaper said Sunday. "For the first time in history, we are no longer at the top: Muslims have overtaken us," Monsignor Vittorio Formenti said in an interview with the Vatican newspaper L'Osservatore Romano. Formenti compiles the Vatican's yearbook.
The Da Vinci Code is a novel, a work of fiction. It does not present facts about Jesus's (as) life in a serious and respectful manner. It has fictionalized his life and story, and in this sense it has downgraded this great messenger of Allah. The author of The Da Vinci Code took some historical facts and then spun a mystery story to thrill and chill his readers. Allah's prophets and messengers should not be treated in this manner. They are entitled to receive utmost honor and respect from us. It is for this reason that Islam forbids making pictures of Allah's prophets and messengers and also forbids creating fictitious stories and movies about them. We as Muslims do not want to be known as people who react only when something wrong is done to the blessed name of our Prophet Muhammad(Peace be on him) We stand for the respect of all religious figures of all religions. Furthermore, Jesus (as) is also a blessed prophet for us. We believe in him and honor him. We also have something to say about this novel and movie.
In their recent books entitled Mary: The Mother of Jesus and Mary: A Dogmatic Journey, two "Catholic" writers, the journalist Jacques Duquesne and the theologian Dominique Cerbelaud, display an overt disbelief in the virginity of Mary the mother of Jesus Christ. Mr. Duquesne argues that it is a belief that is "not compatible with science." Mr. Cerbelaud asserts that the faith in the virgin birth came about "for reasons that spring from collective psychology." I believe both arguments to be inconsistent and based on a flawed understanding of science. Before explaining these, however, let me elaborate on why the virgin birth matters for me—since some non-Muslims might wonder why a Muslim cares about this controversy at all. The Virgin Birth According to the Qur'an As a Muslim, I am a passionate defender of the virgin birth of Christ, and all Muslims should be so. Why? Because this is one of the very important themes in the Qur'an. The Qur'an tells a great deal about the birth, works, and miracles of Jesus (`Isa in Arabic). His story starts with the angels' call to Mary (Maryam in Arabic) by which they declare the miracle of God—a son without a father. Mary is surprised: [She said, "My Lord! How can I have a son when no man has ever touched me?" He said, "It will be so. God creates whatever He wills. When He decides on something, He just says to it, 'Be!' and it is."] (Aal `Imran 3:47) There are many passages in the Qur'an in which Mary is highly praised. We read that angels said to her, ["Maryam, God has chosen you and purified you. He has chosen you over all other women"] (Aal `Imran 3:42). These verses make clear that Mary—along with Jesus himself—is a sacred figure for all Muslims.
இறையில்லத்தைக் கட்டுவதற்காக அவர் நின்ற இடத்தருகில் ஹஜ்ஜுக்குச் செல்லும் முஸ்லிம்கள் வணக்கம் புரிய வேண்டும் என்பது [002:125] இறைக் கட்டளையாகும். இறைதூதர்களில் பலர் இவருடைய வழித்தோன்றி வந்ததால் 'நபிமார்களின் மூலத்தந்தை' என்று முஸ்லிம்களால் போற்றப் படுபவர்.
அவர்தாம் உலக வரலாற்றில் முதல் சிலைவணக்க எதிர்ப்பாளார். நன்றி!
சனி, ஜனவரி 26, 2008
இரண்டில் ஒன்று
"எந்தவொரு விஷயம் குறித்தும் ஒருவரிடம் விசாரித்து விவரங்களைப் பொது நலன் கருதி மக்களுக்குத் தெரிவிக்கும் கடமையும் உரிமையும் ஊடகத்தாருக்கு உண்டு"என்ற அறிவுரையை எழுதியவரே மலர் மன்னன்தான். போகட்டும். சம்பந்தப் பட்டவர்களிடம் நேரடியாகச் சென்று, கேட்டு முடிவு செய்ய முடியாத நிலை மலர் மன்னனுக்கு இருக்கக் கூடும். அவருக்கு மட்டுமின்றி, திண்ணை வாசகர்களுக்காகவும் கென்னெத் வில்ஸனின் 'The Columbia Guide to Standard American English' அகராதியின் MUHAMMADAN பகுதி:
MUSLIM, MOHAMMEDAN, MOSLEM, MUHAMMADAN (adjs., nn.) A Muslim (variously pronounced, but most commonly MUHZ-luhm, MUHZ-lim, or MUZ-lim) is an adherent of Islam. Moslem (MAHZ-luhm or MAHS-luhm) is a variant of Muslim. Muhammadan and Mohammedan are based on the name of the prophet Mohammed, and both are considered offensive. Muslim, as both noun and adjective, seems to be the most acceptable to all concerned.முகமதியர்/முகமதியம் ஆகிய இரு சொற்களும் முஸ்லிம்களைக் காயப் படுத்துவதற்காக ஆளப்படும் (both are considered offensive) சொற்கள் என்பதுதான் உண்மை. இதற்குப் பின்னரும் முஸ்லிம்களைக் 'காயப் படுத்துதல்' தொடர்வதையோ முடிவுற்றதையோ மலர் மன்னனின் எதிர்கால எழுத்துகளால் வாசகர்கள் இனங் கண்டு கொள்வார்கள். ***
"நான் பழகியவரை வட மாநிலங்களில் முகமதியர் என்றோ முகமதியம் என்றோ குறிப்பிடுவதை எவரும் ஆட்சேபிப்பதில்லை. ஹிந்தி என இக்பால் குறிப்பிட்டது ஹிந்துஸ்தானத்தவர் நாம் என்பதாக என்கிற விஷயத்தைத்தான் நினைவூட்டினேன். அன்பர் வஹ்ஹாபி சவூதிக்குப் போனால் அவரை ஹிந்தி என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்தியன் என்றல்ல!"என்று மலர் மன்னன் தன் கடிதத்தை முடிக்கிறார். இறுதிச் சொற்றொடரில் அவர் குறிப்பிடும் ' ஹிந்தி' பற்றி நான் விசாரித்து அறிந்து கொண்டவை யாவையெனில், ஒருவேளை நானும் மலர் மன்னனும் சவூதிக்குப் போனால் எனது தேசியத்தைக் குறிக்கும்போது هندي என்று அரபியிலும் Indian என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். இஸ்லாமியச் சமயச் சார்பினால் என்னை مسلم என்று அரபியிலும் Muslim என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். மலர் மன்னனாயிருப்பின், தேசியத்தைக் குறிக்கும்போது هندي என்று அரபியிலும் Indian என்று ஆங்கிலத்திலும் சமயம் என்பதில் هندوسي என்று அரபியிலும் Hindu என்று ஆங்கிலத்திலும் குறிப்பார்களாம். மலர் மன்னனுக்கும் திண்ணை வாசகர்கள் பலருக்கும் சவூதியில் வாழும் நண்பர்கள் இருக்கலாம். விசாரித்து உறுதிப் படுத்திக் கொள்க! அப்படியே, காந்திஜி வடநாட்டுக்காரர்தானா? என்று உள்ளூரிலும் விசாரித்து உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய புதுக் கட்டாயமும் நமக்கு இப்போது ஏற்பட்டு விட்டது! ஏனெனில், (1) முஸ்லிம்களைத் தனது பேச்சிலும் எழுத்திலும் Muslims, முஸல்மான் என்று முறையே ஆங்கிலத்திலும் ஹிந்தி மொழியிலும் குறிப்பிட்ட காந்திஜி, வடநாட்டுக்காரார் அல்லர். (2) "முஸ்லிம்களை வேண்டுமென்றேதான் முகமதியர் என்று எழுதுகிறேன்" என்று கூறுவதற்குச் சொல்லாண்மை இல்லாத மலர் மன்னன், வடநாட்டுக் கதையளக்கிறார். இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அந்த ஒன்று எதுவெனத் திண்னை வாசகர்கள்தாம் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.
ஞாயிறு, டிசம்பர் 09, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 17
சிற்றிடை யொசியச் சிறுநுதல் லெயர்ப்ப வாய்ந்த முற்றிழை முலைகண் விம்ம முருகயின் றளிக ளார்ப்ப வெற்றிவா ளலியென் றோதும் வேந்தர்கோன் பவனி போந்து பொற்கொடிக் காந்தட் செங்கை மடந்தையர் புகல லுற்றார். (பாடல் 141).அலீ (ரலி) அவர்களுடைய பேரழகைக் கண்டு மயங்கி நின்ற எழுவகைப் பருவப் பெண்களின் நிலையை, அடுத்து வரும் பாடல்களில் புலவர் காமச்சுவை சொட்டச் சொட்ட வருணித்துச் செல்கிறார்.
வியாழன், ஆகஸ்ட் 02, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 15
"இந்த நபி, முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராகத் திகழ்கிறார். மேலும், அவருடைய மனைவியர் அவர்களுடைய அன்னையராய்த் திகழ்கின்றனர்..."[033:006].என்ற இறைமறையின் வசனங்களை முஸ்லிம்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.
சனி, ஜூலை 28, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 14
பாவையர் உரைத்த வண்ணம் பச்சைக் கடுதாசின் கண் மேவரக் கனகமையால் வரிபட விளங்கத் தீட்டிச் சேவையின் நினைவு மாறாச் செவ்விய ஜிபுறயீல் பால் ஈவது ஈது என்னவோதி இறையவன் அளித்திட்டானால் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 55)
வரத்தினில் உயர்ந்த பேறே! மகுசறு வெளியில் என்றன் கரத்தினில் அளிக்க வேண்டும் காரணம் அதனால் ஈதை ஒருத்தரும் தீண்டாவண்ணம் உயிரென ஓம்பி ஓர்பால் இருத்தும் என்று இறசூலுல்லா இளந்தளிர் கையில் ஈந்தார் (பாத்திமா திருமணப் படலம் - பாடல் 62).
வியாழன், மார்ச் 08, 2007
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 9
பானலங் கடந்து சேலெனப் பிறழ்ந்து பரந்து செவ் வரிக்கொடி யோடி மான்மருள் விழியா ராமினா விருந்த வளமனைத் திசையினை நோக்கி நானிலம் புகலுங் ககுபத்துல்லாவி னாலுமூ லையுமொரு நெறியாய்த் தூநறை கமழ வொளிதிகழ் தரவே சுஜூதுசெய் தெழுந்தன வன்றே
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவ னென்றனை யின்றே நிறைதரப் புனித மாக்கினா னென்ன நிகழ்த்திய தொருமொழி யன்றே
ஞாயிறு, அக்டோபர் 08, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 5
"உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" புகாரீ-5688.இஸ்லாமியத் தமிழ்க் கவிதைகளைக் குர்ஆன்-ஹதீஸ் முன்னால் நிறுத்தி நுணுகி ஆராயும்போது - ஸ்கேன் செய்து பார்க்கும்போது - அவற்றினுள்ளே எந்த அளவுக்குச் சீழ் மண்டியுள்ளது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. ஒருவருடைய உடலில் எங்கேனும் சீழ் கட்டியிருப்பது அவருடைய முழு ஆரோக்கியத்துக்கும் உயிருக்கும் ஊறு விளைவிப்பதாகும். எனவே, எத்துணை வேதனையாலும் தாங்கிக் கொண்டு, சீழை அப்புறப் படுத்தி, நலம் பெறுவதையே எவரும் விரும்புவர். இப்படியிருக்க, நம் உயிரினுமினிய இஸ்லாத்தின் மீது சீழ் நிரம்பியுள்ள எத்துணையோக் கவிதைக் கொப்புளங்கள் கிளம்பிப் புரையோடிப் போயுள்ளதை நம்மில் பலர் கண்டும் காணாது போகின்றனர். இந்தச் சீழ் வடியும் கவிதைகளைப் பிதுக்கிக் காட்டும்போது, இவர்கள் வேதனையால் துடித்துப் போகின்றனர். இவ்வேதனை எந்த விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளத் தக்கதுவே என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர். இஸ்லாத்தைப் புண்படுத்தும் கவிதைகளை அடையாளம் காட்டுவோரை இவர்கள் புண்படுத்தத் தொடங்குகின்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மார்க்கத்துக்கு முரணான கவிதையைச் "சீழ்" என்று குறிப்பிட்டதோடு மட்டுமின்றி, அத்தகையக் கவிதைகளைப் புனையும் கவிஞனை "ஷைத்தான்" எனவும் வெறுத்துக் கூறியுள்ளனர். அல்குர் ஆனின் 026:221ஆவது வசனத்தில் பொய் புனைபவர்களை ஷைத்தான் என அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி ஒன்றும் அமைந்துள்ளது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் 'அர்ஜ்' என்ற ஊருக்கு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது, கவிதை இயற்றிக் கொண்டிருந்த ஒரு கவிஞர் தென்பட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்; உங்களில் ஒருவரின் உள்ளத்தில் கவிதை நிரம்பி இருப்பதைவிட, அவருடைய உள்ளத்தில் சீழ் நிரம்பி இருப்பது மிகச் சிறந்தது" என்று கூறினார்கள் - முஸ்லிம் 4193.தொடரும், இன்ஷா அல்லாஹ்.
வியாழன், மே 18, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - முன்னுரை (சுருக்கம்)
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருங்கள். உங்களுக்கோ (உங்களின்) பெற்றோருக்கோ (உங்களின்) நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்காளாக இருங்கள் ..."என இறைமறை குர்ஆன் [004:135] எடுத்துரைத்துள்ளது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனப் பெயர் பண்ணிக் கொண்டு, தூய இஸ்லாத்திற்கு அநீதி இழைத்துள்ளன பல இலக்கியங்கள். இவற்றைப் பாடியோர் நமது புலவர் பெருமக்களாகிய 'அப்பா'மார்களாக இருக்கலாம். இந்த இலக்கிய அநீதியை எடுத்துரைப்பது, அந்தப் புலவர் பெருமக்களுக்கு விரோதமிழைப்பது போலிருந்தாலும் கூட, அல்லாஹ்வுக்காக நாம் உண்மை சாட்சியுரைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை முன்னிருத்தியே 'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்னும் இந்நூல் எழுதப் பட்டுள்ளது.
இஸ்லாத்துக்கு விரோதமாகப் "பொய்யையும் புனைசுருட்டையும் பாடுகின்ற கவிஞர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர்" என இறைமறை குர்ஆன் எச்சரிக்கிறது.
இஸ்லாத்துக்கு அநீதி இழைத்து இலக்கியம் பாடிவந்த ஒரு கவிஞனை 'ஷைத்தான்' என்றும் அவனது கவிதையை 'நாற்றமெடுத்த சீழ்' என்றும் நபி (ஸல்) அவர்கள், கடுமையான சொற்களால் வைதுள்ளனர்.
அப்பழுக்கற்ற இஸ்லாமியத் தடாகத்தில் அப்பாமார்களின் பாடல்கள் நஞ்சைக் கலந்துள்ளன. இதைக் காணும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நெஞ்சம் கொதிப்பது இயல்பே! அந்த நெஞ்சக் கொதிப்பு, இந்நூலில் சில இடங்களில் வெம்மையான சொற்களில் வெளிப் பட்டிருக்கலாம். அதுவுங்கூட நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதே என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வார்களாக!
இம்முயற்சியில் எம்மை ஈடுபடச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்குச் சிரம் பணிந்து நன்றி பாராட்டுகிறேன்.
- ஹஸ்ஸான்
வெள்ளி, மே 12, 2006
இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - அறிமுகம்
'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்ற பெயரில், இஸ்லாமியக் கல்வி வெளியீட்டு நிறுவனத்தாரால் 1999இல் ஓர் ஆய்வு நூல் வெளியிடப் பட்டது. மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியில் பணியாற்றியத் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எனது அன்புக்குரியவருமான சகோதரர் 'ஹஸ்ஸான்' என்ற ஜமாலுத்தீன் அவர்களின் தெள்ளு தமிழ் நடையில் வெளிவந்த இவ்வாய்வு நூலை, வலைப்பூவில் பதிக்க வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை! என் ஆசைக்கு இரு காரணங்கள் உள. 1. அன்னாரின் பேச்சிலும் எழுத்திலும் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. 2. அன்னார் மறைந்து விட்டார்; அவர் எழுத்து மறையக் கூடாது. எனவே, அவருடைய மகனாரின் அனுமதி பெற்று என்னாசையை நிறைவேற்றும் முகமாக, இவ்வாரம் முதல் இங்குப் பதிக்கத் தொடங்குகிறேன். இந்நூலுக்கு 'இஸ்லாத்துக்கு எதிரான இலக்கியங்கள்' என்ற தலைப்பே மிகப் பொருத்தமானது என்பது என் கருத்து. " குவிபெருந்தானை நாப்பண் கூண்டவை அலீயென்றோதும் பவனியின் தருவை நோக்கிப் பல கொடி படர்ந்ததன்றே"(ஃபாத்திமா திருமணப் படலம், பாடல்: 135) நபித்தோழியராம் ஸஹாபிப் பெண்களை இவ்வாறு தரக்குறைவாகப் புலவர் வருணித்துச் செல்வதை இந்நூலாசிரியர் விளக்கமாக எடுத்தெழுதியுள்ளார். இந்துமதச் சித்தாந்தத்தின் 'ஜெராக்ஸ் காப்பி'யாகவே குணங்குடி மஸ்தானின் பாடல்கள் காணக் கிடைக்கின்றன என்பதை இந்நூல் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளது.
"ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நான்காம் ஓதிய ஷரீஅத்தென்றும் உவந்திடும் தரீகதென்றும் நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால் ஆதியைக் காணலாம் என்று அகுமதர் அருளிச் செய்தார்" (ஞானமணி மாலை, பாடல் : 11)போன்ற பீரப்பாவின் பாடல்கள் மெய்யான ஹதீஸுக்கு வெளிப்படையாகவே முரண்பட்டு அமைந்துள்ளன. 'அல்லாஹ்தான் முஹம்மது நபியாக அவதரித்தான்' என்ற கேடுகெட்ட அவதாரக் கொள்கையைப் பீரப்பா இஸ்லாத்தின் பெயரால் இட்டுக் கட்டிப் பாடியுள்ளார்.
"இப்புவியில் ஊனுருவாய் நீ அகுமது ஆனவனே"(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 134)
"நீயே உனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் நீயே புவிக்குள் ரசூலாக வந்தவன்"(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 118) இம்மாதிரிப் பாடல்களை மாபெரும் ஸூஃபிஸ இலக்கியங்களாக இஸ்லாமியர் போற்றிப் பயிலுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற இந்த இலக்கிய முரண்பாடுகள் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. மாறாக, இவற்றையே இஸ்லாமியக் கொள்கைகள் எனப் பெரும்பாலான முஸ்லிம்களும் மற்றோரும் நம்பியிருந்தனர்; நம்பியிருக்கின்றனர். அந்தத் தவறான நம்பிக்கையை இந்நூல் தகர்த்து விடும் என்பதில் ஐயமில்லை.
