வெள்ளி, ஜூன் 26, 2009

இன்னும் கொஞ்சம் ... நட்புடன்!


வெ.சாவுக்கான வலக்கர விளக்கம் என்ற எனது கட்டுரைக்குப் பின்னர், தாம் குறிப்பிட்ட, "023:006 இறைவசனத்தில் பெண்களை ஏலம் போடுவது இல்லைதான்" என்று வெ.சா ஒப்புக் கொண்டிருக்கிறார் [சுட்டி-1]. அவருக்கு நன்றி!
"குர்ஆன் என்ன எங்கும் கிடைக்காத ஒன்றா? யாருக்கு தைரியமிருக்கு என்று தொடை தட்டுவதற்கு முன் '23:6' என்று இண்டெர்நெட்டில் ஒரு தட்டுத் தட்டியிருந்தா கிடைத்திருக்குமே" என்று திண்ணை வாசகனான என் நண்பன் என்னைக் கேட்டான்.
"அப்படிச் சொல்லாதே! பிழையை ஒப்புக் கொள்வதற்குப் பெருந்தன்மை வேண்டும். அது வெ.சாவிடம் இருக்கிறது. அதற்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும்" என்று நண்பனின் வாயை அடைத்து விட்டாலும் அடிமைச் சந்தையை இஸ்லாம் ஆரம்பித்து வைத்ததைப்போல் //ஆனால் இதில் தேர்வு, ஈட்டுத் தொகை என்றெல்லாம் பேசப்படும் இடத்தில், 7-நூற்றாண்டு அரேபியாவில் இன்றைய ஏலத்தின் ஆரம்பங்களைத் தானே பார்க்கிறோம்?// வெ.சா எழுதியிருப்பதைப் படித்ததில் என் நண்பனுக்கு நான் கூறியதில் எனக்கே ஐயம் ஏற்பட்டு விட்டது.

ஏனெனில்,
//முகம்மது நபி, ஸ·பியாவைத் திரும்ப அழைத்து வரச்செய்து, அவளைப் பார்த்ததும், தோழர் சரியாகத்தான் சொல்கிறார் என்று தெரிந்து ஸ·பியாவை தனக்கு என வைத்துக் கொள்கிறார். திஹ்யாவின் ஏமாற்றத்தைத் தவிர்க்க, திஹ்யாவைப் பார்த்து கருணை கூர்ந்து "உனக்குப் பிடித்த வேறொரு பெண்ணை எடுத்துக்கொள்" என்று சொல்கிறார். (புடவைக் கடையில் "இந்தக் கலர் எனக்கு இருக்கட்டும், அதை வேணா நீ எடுத்துக்கோ" ங்கற மாதிரி)//என்று வெ.சா. குறிப்பிடுவதில், யூதமதத் தலைவனின் மகளைத் திருமண உறவில் இணைப்பதை, இரு சாராரிடையே இணக்கம் வளரும் வாய்ப்பாக எம் தலைவர் முஹம்மது (ஸல்) கருதியது மறைக்கப் பட்டிருப்பதோடு வேறு உள்நோக்கமான திசைதிருப்பலும் நடந்திருக்கிறது.
கைபர் போர் முடிந்தவுடன், "பெண் கைதிகள் எல்லாரையும் அழைத்து வந்து வரிசையாக நிறுத்துங்கள்; எனக்குப் பிடித்த புடவையை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன்" என்று வெ.சா. குறிப்பிடுவதைப்போல் ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால் அந்த அரசாணைக்கு மறுப்பேதும் இருந்திருக்குமா? அப்படி ஏதும் நடக்கவில்லையே? கைபர் போரின் போது அண்ணலாரின் வயது 60. அன்னை ஸஃபிய்யா ஏற்கனவே இருமுறை திருமணமானவர். கைபர் போருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் எம் தலைவரின் ஆட்சியின் கீழ் மதீனாவில் வசித்து வந்தவர். நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி அன்னை ஸஃபிய்யா கூறுகிறார்:
"I was my father's favorite and also a favorite with my uncle Yasir. They could never see me with one of their children without picking me up. When the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) came to Medina, my father and my uncle went to see him. It was very early in the morning and between dawn and sunrise. They did not return until the sun was setting. They came back worn out and depressed, walking with slow, heavy steps. I smiled to them as I always did, but neither of them took any notice of me because they were so miserable. I head Abu Yasir ask my father, 'Is it him?' 'Yes, it is.' 'Can you recognize him? Can you verify it?' 'Yes, I can recognize him too well.' 'What do you feel towards him?' 'Enmity, enmity as long as I live.'
The significance of this conversation is evident when we recall that in the Torah of the Jews, it was written that a Prophet would come who would lead those who followed him to victory (இபுனு கஸீர்).
நமது பேசுபொருளான 'வலக்கரம்' குறித்து வெ.சா. எழுதியிருப்பதற்கான 'இன்னும் கொஞ்சம்' மட்டுமே மேற்காண்பவை. இவை தவிர, குர்ஆனைப் பற்றி அவர் எழுதியிருப்பதிலிருந்து அதுகுறித்து அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதை அவரே பெருந்தன்மை மாறாமல் ஒப்புக் கொள்கிறார்.
மற்றபடி, உருதுக் கவிதை, ஸூஃபி இசை, ஷேக் சின்ன மவ்லா கச்சேரி ஆகியவற்றுக்கும் நமது பேசுபொருளுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று எண்ணுகிறேன்.
***
இந்தவாரக் கொசுறுகள்:
"வலக்கரம் உரிமையுடைய என்ற இலக்கியச் சொல்லாக்கத்தை, பொறுப்பிலுள்ள என்று நமது வசதிக்காக எளிமைப் படுத்திக் கொள்வோம்" என்று எனது கட்டுரையில் குறிப்பிட்டதை மறுப்பதற்காக வேண்டி, "வசதி போலப் பொருள் கொள்ளவா சொற்கள்?" [சுட்டி-2] எனக் கேட்டு மலர் மன்னன் சென்ற வாரம் திண்ணையில் எழுதி இருக்கிறார்.
என் மனைவியின் உரிமையாளன் நான். அவருக்குத் தேவைப்படும் அத்தனையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இந்த எளிய கருவைப் புரிய முடியாமல் மலர் மன்னன் என்னென்னவோ எழுதி நிரப்பி இருப்பதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது!
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற நம் முன்னோரின் வாக்கு உண்மைதான். அதற்காக முழங்காலைச் சுற்றி மூக்கைத் தொட முயல்வது அறிவுடமையா எனத் தெரியவில்லை.
எனது வலக்கர விளக்கம் சிரிப்பை வரவழைத்தாக நரேன் என்பவர் [சுட்டி-3] குறிப்பிட்டிருக்கிறார்.
சிரிப்பது உடம்புக்கு நல்லதுதானே!
இப்படித்தான், தெளிந்த தமிழ் என்று நம்பிக் கொண்டு 'குழந்தைப் பிறப்பை'ப் பற்றித் திண்ணையில் முன்னர் நான் எழுதியபோது, புரியாத மொழியில் நான் ஏதோ எழுதியிருந்ததாகவும் அது தன்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்ததாகவும் ஒருவர் எதிர்வினை செய்தார்.
"புரியாமலே எப்படிச் சிரிச்சீங்க?" என்று அடுத்த வாரம் கேட்டு வைத்தேன்.
அதற்குப் பிறகு அவர் சிரித்ததாகத் தெரியவில்லை.
நன்றி!
ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=80906254&format=html
சுட்டிகள்:

கருத்துகள் இல்லை: