ஞாயிறு, செப்டம்பர் 08, 2024

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 42

’அகத்தீசன் சதகம்’ என்பது குணங்குடியார் எழுதியுள்ள ஒரு பாடல் நூல். இதில் நூறு பாடல்கள் உள்ளன. பத்து நிலைகளின் கீழ் பத்துப் பத்துப் பாடல்களாக இவை பாடப்பட்டுள்ளன.

குருவருள் நிலை, தவ நிலை, துறவி நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை ஆகியன பத்து நிலைகளாகும். இந்நூலின் பாடல்கள் அனைத்திலும் கடைசி வரி ஒன்று போலவே அமைந்துள்ளது. 

மா குணங்குடி வாழும் என் அகத்தீசனே! மவுன தேசிக நாதனே! என்பது அந்த வரியாகும்.

அகத்தீசன் சதகத்தில் ‘குருவருள் நிலை’யின் கீழுள்ள ஏழாவது பாடலை மட்டும் இங்கு ஒருசோற்றுப் பதமாகப் பார்ப்போம்:

முத்துநவ ரத்தினமே, முழுவயிர மலையே, என் முன்னின்றுனருள் புரியவும்

முச்சுடர் பரப்பு செம்பொற் கமலடியை நான் முத்தமிடவருள் புரியவும்

சித்தனே சித்தன் தொழு முத்தனே செவியுலுப தேசமெற் கருள் புரியவும்

தெட்சிணா மூர்த்தமே படம்வைத் திக்கணஞ் சின்மயமருள் புரியவும்

அத்தனே யப்பனே ஐயனே யுய்யவென யடிமை கொண்டருள் புரியவும்

ஆனந்தமான பரமானந்த திருநடனமாடி நின்றருள் புரியவும்

வைத்த கருணைக்குரிய தவராஜ சிங்கமே வரவேண்டு மென்றனக்கருகே

மா குணங்குடி வாழும் என் அகத்தீசனே! மவுன தேசிக நாதனே! 

இப்படி அமையும் குணங்குடிப் பாடல்களில் சுட்டப்படும் ‘மவுன தேசிகன்’, தாயுமானவருடைய மௌனகுரு சுவாமிகளின் என்லார்ஜ் ஸைஸ் போலவே காணப்படுகின்றார்.

- தொடரும்

கருத்துகள் இல்லை: