புதன், டிசம்பர் 02, 2020

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 37

சென்னை திரிபுர சுந்தரி விலாசம் அச்சகத்தில் 1905ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 'குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்' நூலில், புலவனின் பெயருக்கு முன்னால்  இடப்பட்டுள்ள அடைமொழிகளைப் பாருங்கள்:

அலா நிய்யத்தி சுல்தான் அப்துல்காதிறு லெப்பை ஆலிம், ஆரிபு பில்லா, சாகிபு ஒலியுல்லா என்னும் இயற்பெயருடைய குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடற் றிரட்டு.

இந்த அடைமொழிகளுக்கு அருகதையானவன்தானா இந்த அம்மணப் புலவன் என்பதை, இப்புலவனுடைய தரம் தாழ்ந்த கற்பனையின் துணை கொண்டு இதனைப் படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இது மட்டுமல்ல. இன்னும் மிகமிகக் கொச்சையான வருணனைகளும் புலவனின் பாடல்களில் ஏராளம் காணப்படுகின்றன. "அவையெல்லாம் உள்ளர்த்தம் பேசிடும் அகமிய ஞானங்கள்" எனக் கூறுவோரின் பிதற்றல்களையும் இனித் தொடர்ந்து காணலாம் ...

கருத்துகள் இல்லை: