வியாழன், ஜூன் 10, 2021

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 38

 இஸ்லாமியத் தாயுமானவர்

புராண இதிகாசக் கதையளப்புகள் ஒவ்வொன்றுக்கும் எப்படி எப்படியெல்லாமோ ஸிம்பாலிக்கான உள்ளர்த்தங்களை அவரரும் அவரவர் மனம்போன போக்கில் கற்பித்துச் சொல்வார்கள். அதுபோலத்தான் குணங்குடி மஸ்தான் போன்ற ஸூஃபிக் கவிஞர்களின் பிதற்றல் கவிதைகளுக்கும் சில 'மார்க்க மேதைகள்' என்பவர்கள் உள்ளர்த்தம் கற்பிப்பார்கள். அவை பாமர வாசகனுக்குப் பிடிபடாத 'முதஷாபிஹாத்'தான சமாச்சாரங்கள் எனச் சரடு விடுவார்கள்.

வேசி என்று பேர் படைத்து வெளியில்
                           புறப்பட்டவளை
தாசி என்று சொல்லத் தகாதோ மனோன்
                           மணியே

என்று அல்லாஹ்வை விளித்துக் "குணங்குடி மஸ்தான் பாடுவதெல்லாம் அகமிய விஷயங்களாகும். இதில் குறுக்குக் கேள்வி கேட்பவன் குதர்க்கவாதி" எனக் கூறித் திரிவர் ஸூஃபிஸ விசிறிகள்.

இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான இந்த ஸூஃபிசச் சரக்கு இங்குத் தமிழ்நாட்டுக்கு இறக்குமதியான போது, கூடுதலாகப் பல்வேறு கலப்படங்களுக்கு உள்ளானதை அப்பட்டமாக அறிந்துகொள்ள முடிகின்றது. குணங்குடி மஸ்தான் எனும் இந்த ஸூஃபிக் கவிஞரை இந்தக் கலப்படம் எங்ஙனம் பாதித்துள்ளது என்பதைச் சற்று அலசிப் பார்ப்போம் ...


கருத்துகள் இல்லை: