வெள்ளி, ஜூன் 12, 2009

வெ.சாவுக்கு வலக்கர விளக்கம்

டந்த மாத இறுதியில் வெளியான திண்ணை (28.05.2009) இதழில் வெ. சா, 'பேராசிரியர் ஏ. எஸ். முகம்மது ரஃபி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்' வைத்திருந்தார்.

அங்கதம் என்று நினைத்துக் கொண்டு சே குவேரா, ஹோஸி மின், லெனின், சுபாஷ் சந்திர போஸ், வ. வே. சு ஐயர், ஆகியோரெல்லாம் நாகூர் ரூமியைப் போல் தைரியசாலிகள் அல்லர் என்று என்னென்னவோ எழுதியிருந்தார் வெ. சா. [சுட்டி-1].

அவற்றுக்கு பதில் சொல்வது என் வேலையல்ல. நாகூர் ரூமி என்ற தனிமனிதரைப் பற்றி எழுதிய வெ. சாவாச்சு; ரூமியாச்சு.

கடந்த வாரத் திண்ணை இதழில், குர் ஆன் வசனம் 023:006க்கான விளக்கத்தை வெ. சாவுக்குத் தருவதாக உறுதியளித்திருந்தேன். அதை இங்குக் காண்போம்.
இறைவணக்கத்தை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுகின்ற, வீணான பேச்சு/ செயல்களை விட்டு ஒதுங்கி விடுகின்ற,
தவறாது வளவரி செலுத்துகின்ற, தங்கள் மனைவியர் அல்லது தங்கள் வலக்கரம் உரிமையுடைய பெண்களைத் தவிர வேறெவரிடமும் உறவு கொள்ளாமல் கற்பொழுக்கம் பேணிக்கொள்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்து விட்டனர் - குர்ஆன் 023:001-006.
மேற்காணும் வசனத்தில் உள்ள 'வலக்கரம் உரிமையுடைய பெண்கள்' என்றால் போரில் கைது செய்யப் பட்ட அடுத்த வினாடி படுக்கையில் கிடத்தப் படுகின்ற பெண்கள் என்ற மிகத் தவறான கருத்துருவாக்கம் பரவலாக விதைக்கப் படுகிறது.

அந்தக் கருத்துருவாக்கம் எப்படித் தவறானது என்பதைப் பார்ப்போம். அதற்கு முன்னர் "வலக்கரம் உரிமையுடைய" என்ற இலக்கியச் சொல்லாக்கத்தை "பொறுப்பிலுள்ள" என்று நமது வசதிக்காக எளிமைப் படுத்திக் கொள்வோம். ஏனெனில், அரபியர் ஒருவர் ஒரு பெண்ணைப் பற்றி, "அவள் என் மடியில் தவழ்ந்து கொண்டிருப்பவள்" என்று அவரது மொழியில் குறிப்பிட்டால் அவரது மடியைத் தேடிப் பார்த்தலாகாது. அவரது கூற்றுக்கு, "அவள் என் வளர்ப்பு மகள்" என்பது எளிய பொருளாகும். 

போலவே,
வலக்கரம் உரிமையுடைய = பொறுப்பிலுள்ள.
இனிமேல் இங்கு எழுதப் படும் 'வலக்கரம் உரிமையுடைய' என்பதற்கு, 'பொறுப்பிலுள்ள' என்பது பொருளாம்.

போரில் கைது செய்யப்படும் பெண்கள் அனைவரையும் 'வலக்கரம் உரிமை' ஆக்கியே தீர வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது. மேலும், போரில் கைது செய்யப் படுபவர்களுள் பெண்களைவிட ஆண்கள்தாம் அதிகமிருப்பர். ஆண்களும் 'வலக்கரம்தான்' அதாவது வெற்றி பெற்ற போர்வீரர்களுடைய பொறுப்பின்கீழ் வருபவர்தாம்.

குவாண்டனாமோ, அபூகுரைப் போன்ற சிறைக்கூடங்களும் சித்திரவதைகளும் இஸ்லாத்தில் இல்லை. போர்க்கைதிகளைப் பொருத்த மட்டில் இஸ்லாத்தில் கீழ்க்காணும் மிக எளிய தீர்வுகளே பின்பற்றப் பட்டன:
  1. ஈட்டுத் தொகை எதுவுமின்றி விடுதலை செய்யலாம்.
  2. ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு விடுதலை செய்யலாம்.
  3. கல்வி கற்றுக் கொடுப்பவரைக் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு விடுதலை செய்யலாம்.
  4. மீந்திருப்போரை முஸ்லிம் வீரர்களுடைய கட்டுப்பாட்டுப் பொறுப்பளித்துப் பகிர்ந்தளிக்கலாம்.
இஸ்லாமிய வரலாற்றின் முதல் போரான பத்ருப் போரில் முஸ்லிம் வீரர்களால் கைது செய்யப் பட்டவர்களுள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் ஜைனப் (ரலி) உடைய கணவரும் நபிகளாரின் மருமகனுமான அபுல்ஆஸ் என்பவரும் இருந்தார். அவரை விடுவிப்பதற்காக நபியவர்களின் மனைவி கதீஜா (ரலி) அணிந்திருந்து, பின்னர் மகள் ஜைனபுக்கு அன்பளிப்புச் செய்த தங்கமாலை, பத்ருக்கைதி அபுல்ஆஸுடைய விடுதலைக்கான ஈட்டுப் பொருளாக வந்தது. அந்தத் தங்கமாலையைப் பார்த்த நபிகளாரின் உள்ளம் உருகியது. தங்கள் தோழர்களிடம் அபுல்ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்ய அனுமதி கேட்டார்கள். தோழர்களும் அனுமதி தர, "மகள் ஜைனப் (ரலி) அவர்களை மதீனாவிற்கு வர அனுமதிக்க வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் அவரை விடுதலை செய்தார்கள். முழுதும் படிக்க [சுட்டி-2].

ஹுனைன் போர்க்கைதிகளிடம் நபிகளார் கருணை காட்டி மக்காவில் வைத்து அவர்களை விடுதலை செய்தார்கள். கைதிகள் சுதந்திரமாக மக்காவின் தெருக்களில் சுற்றித் திரிவதைக் கண்ட நபித்தோழர் உமர் (ரலி), தமக்கு ஹுனைன் போரில் கிடைத்த இரு அடிமைப் பெண்களையும் விடுதலை செய்துவிடுமாறு தம் மகன் அப்துல்லாஹ்வுக்கு உத்தரவிட்டார் (புகாரீ - பாகம் 3, அத்தியாயம் 57, ஹதீஸ் எண் 3144) [சுட்டி-3].

தாயிஃப் போரில் முஸ்லிம்களால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களுள் ஷீமா பின்த் ஹாரிஸ் அல் ஸஃதியா என்ற பெயருடைய பெண்ணும் இருந்தார். அவர் நபிகளாரின் பால்குடிச் சகோதரியாவார். அவர் நபிகளாரிடம் அழைத்து வரப்பட்டார். அப்பெண்மணி நபிகளாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஓர் அடையாளத்தின் மூலம் அப்பெண்மணியை நபிகளார் அறிந்து கொண்டார்கள். அவருக்கு மரியாதை செய்யும் வண்ணம் தமது போர்வையை விரித்து அவரை அமர வைத்தார்கள். அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து அவரது கூட்டத்தாரிடமே திருப்பி அனுப்பி வைத்தார்கள் [சுட்டி-4].

ஆண்களும் பெண்களும் அடங்கிய அவ்தாஸ் போர்க்கைதிகளை ஈட்டுத் தொகையின்றி முஸ்லிம் வீரரகள் விடுவித்தது பற்றிய வரலாற்றுச் சுருக்கம்:
"எனக்கும் அப்துல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் சொந்தமான கைதிகளை நான் உங்களுக்கு வழங்கி விடுகிறேன். மேலும், உங்களுக்காக மக்களிடமும் கேட்கிறேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். அதைக் கேட்ட முஹாஜிர்களும் அன்சாரிகளும் "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சொந்தமானது உங்களுக்குச் சொந்தமானதுதான்'' என்று கூறினார்கள். ஆனால், அக்ரா இப்னு ஹாபிஸ் "நானும் தமீம் கிளையினரும் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறிவிட்டார். உயைனா இப்னு ஹிஸ்ன், "நானும் ஃபஸாரா கிளையினரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறிவிட்டார். இவ்வாறே அப்பாஸ் இப்னு மிர்தாஸ் என்பவரும் எழுந்து, "நானும் ஸுலைம் கோத்திரத்தாரும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என்று கூறினார். ஆனால், ஸுலைம் கூட்டத்தார் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குரியதை உங்களுக்குத் தந்துவிடுகிறோம்'' என்று கூறி தங்கள் தலைவன் பேச்சை மறுத்து விட்டனர். இவ்வாறாக அவ்தாஸ் போர்க்கைதிகளுள் பெரும்பாலோர் எவ்வித ஈட்டுத் தொகையுமின்றி விடுதலை செய்யப் பட்டனர். முழுதும் படிக்க [சுட்டி-5].
***
இஸ்லாத்தில் மரபுவழித் திருமணங்கள் என்பன மணமகனுக்கு அதிகச் செலவுக்குரியதாகும். மரபுவழித் திருமணங்களுக்கென்று நான்கு முக்கிய நிபந்தனைகள் இருக்கின்றன:
  1. மணமக்களின் ஒப்புதல்
  2. மணமகளுக்கு மணமகன் செலுத்த வேண்டிய மஹர் எனும் பரிசத் தொகை
  3. மணமளைத் திருமணம் செய்து தரும் பொறுப்பாளர்
  4. (குறைந்தது) இரு சாட்சிகள்
 இவற்றுள் இரண்டாவதான மஹர்த்தொகை என்பது, சுதந்திரமான மணமகள் முடிவு செய்யும் தொகையாகும். மஹர் கொடுத்து மணம் புரிந்து கொள்ளும் வசதி இல்லாத இளைஞர்கள், தவறான வழிகளைத் தேடலாகாது என்று இஸ்லாம் கட்டுப்பாடு விதிக்கிறது. கூடவே, ஒழுக்க வாழ்விற்கு வழிவகையும் செய்கிறது:
"அல்லாஹ் தன் அருளினால் வளமாக்கும்வரை (மரபுவழித்) திருமணம் செய்து கொள்ள(ப் பொருளாதார) வசதியற்றோர் ஒழுக்க வாழ்வு வாழட்டும் ..." - குர்ஆன் 024:033.
அல்லது,
"... உங்கள் வலக்கரம் உரிமையுடைய பெண்ணை (மணந்து) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும் ..." (குர்ஆன் 004:003).
சுதந்திரமான பெண்களைப் போன்றே 'வலக்கர'ப் பெண்களை மணப்பதிலும் உறவு முறைகள் பார்க்கப்படும். காட்டாக, தாயும் மகளும் ஒருவருடைய பொறுப்பில் இருந்தால், தாயை மட்டும் மணந்து கொள்ளலாம். அந்தத்தாயின் மகள் சொந்த மகள் போலாவார். எனவே, அவரை(யும்) மணக்க முடியாது. மகளை மணந்தால், அவளின் தாய் மாமியாராகி விடுவார். இஸ்லாத்தின் பார்வையில் மாமியாருக்குத் தாயின் நிகர்நிலை உண்டு. சுதந்திரமான இரு சகோதரிகளை ஏக காலத்தில் மணக்க முடியாது. போலவே, தம் பொறுப்பிலுள்ள 'வலக்கர' சகோதரிகள் இருவரை ஏக காலத்தில் மணக்க முடியாது (குர்ஆன் 004:023).

சின்னத்திரையின் சீரியல்கள் ஏற்படுத்தும் சீரழிவுகளால், அண்மைக் காலத்தில் திருமணமான பெண்கள் வேறொருவனோடு உடன்போக்குக் கொள்வது மிகப் பரவலாகி வருகின்றது. ஆனால் திருமணமாகி, கணவன் உயிருடனிக்கும் சுதந்திரமான பெண்களை மணப்பதற்கு இஸ்லாத்தில் தடை இருக்கிறது. ஆனால், 'வலக்கர'ப் பெண்களின் கணவன் போரில் கொல்லப் பட்டிருந்தாலும் தப்பியோடி இருந்தாலும் விடுதலையாகி சொந்த நாட்டுக்குத் திரும்பி உயிருடன் இருந்தாலும் 'வலக்கர'ப் பெண்ணுக்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் அவளைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டுள்ளது - இன்னொருமுறை - அனுமதிக்கப் பட்டுள்ளது. அதாவது, சூழலைக் கருத்தில் கொண்ட அனுமதிதான்; கட்டாயமன்று (குர்ஆன் 004:024).

மணந்து கொள்ள விருப்பமில்லாத அல்லது காலம் முழுக்க உரிய முறையில் பராமரிக்க இயலாத 'வலக்கர'ப் பொறுப்பாளருக்கும் இறைவசனம் தீர்வு சொல்கிறது:

" ... உங்கள் வலக்கரம் உரிமையுடைய பெண்களிடம் உரிமை விடுவதற்குரிய தகுதியைக் கண்டறிவீர்களாயின் அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்து விடுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் செல்வத்திலிருந்து (இயன்றதை) அவர்களுக்குக் கொடு(த்து அனுப்பிவிடு) ங்கள் ..." - குர்ஆன் 024:033.

பொறுப்பாளர் விரும்பினால் 'வலக்கர'ப் பெண்ணின் கணவன் உயிரோடு இருந்தாலும் அவளைச் சில நிபந்தனைகளின் அடிப்படையில் மணந்து கொள்ளலாம்; இதுவும் கட்டாயமில்லை.

" இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது தடுக்கப்பட்டுள்ளது ..." (குர்ஆன் 004:024). இந்த இறைவசனம் 'மணமுடிப்பது' என்று தெளிவாகப் பேசுவது இங்குக் குறிப்பிடத் தக்கது.

சிலர் நினப்பதுபோல் பெண்களைக் கைதியாகப் பிடித்தவுடன் படுக்கப் போடவெல்லாம் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. பெண் கைதியின் மாதவிடாய் அறியப்பட வேண்டும்; அவள் திருமணமானவளாக இருப்பின் அவளது கருவில் அவளின் கணவனது வாரிசு இருக்கிறதா என்பதை, அவளுடைய மாதவிலக்குத் தடைபட்டிருப்பது/தொடர்வதன் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்; அவள் கருவுற்று இருந்தால், குழந்தை பெற்று, தூய்மையடைந்த பிறகே அவள் இன்னொரு திருமணத்துக்குத் தகுதி பெறுவாள். இவ்வாறாக, சுதந்திரமான பெண்ணை மணந்து கொள்ள வசதி இல்லாதோர் இத்தனை சோதனைகளுப் பின்னரே தம் பொறுப்பிலுள்ள 'வலக்கர'ப் பெண்ணை மணந்து கொள்ளலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.

சுந்திரமான பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும் பொறுப்பாளர்/காப்பாளர் வரிசையில் அவளின் தந்தை/மாமன்/அண்ணன் ஆகியோர் வருவர். ஆனால், 'வலக்கர'ப் பெண்ணுக்கு எல்லாமே அவளது பொறுப்பாளர்தான்.

'வலக்கர'ப் பெண்ணுக்கு வழக்கிலுள்ளப் பரிசப் பணத்தில் (மஹர்) பாதி கொடுத்தால் போதும்.

"ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து, அவளுக்கு அவர் நன்கு கல்வி கற்பித்து, அவளுக்குச் சிறந்த முறையில் ஒழுக்கம் கற்பித்து, பிறகு அவளை விடுதலை செய்து, திருமணமும் செய்து கொண்டால் அவருக்கு இரண்டுவகை நன்மைகள் உண்டு ..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். இன்னோர் அறிவிப்பில்,

"அவளை அவர் விடுதலை செய்து, பின்னர் அவளுக்கு மஹ்ரும் கொடுத்(து மணமுடித்)தால் அவருக்கு இரண்டுவகை நன்மைகள் உண்டு" என்று காணப்படுகிறது. (புகாரீ - பாகம் 5, அத்தியாயம் 67, ஹதீஸ் எண் 5083; பாகம் 4, அத்தியாயம் 60, ஹதீஸ் எண் 3446) [சுட்டி-3].

'வலக்கர'ப் பெண்ணைத் தானே திருமணம் செய்து கொள்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதே தவிர அது கட்டாயம் என்ற சட்டமெல்லாம் இல்லை. அப்பெண்ணுக்கு அவர் முழுப் பொறுப்பாளர்; அவ்வளவே. ஒரு பொறுப்பாளர்/காப்பாளர்/தந்தை ஒரு பெண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தும் 'வலக்கரம்' சொந்தமாக்கிக் கொண்டவருக்கு உண்டு.

"உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாத(பெண்டிர், ஆட)வர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) நல்லொழுக்கமுள்ள உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் மணம் செய்து வையுங்கள் ..." (குர்ஆன் 024:032).

"... உங்களில் எவரும் 'என் அடிமை; என் அடிமைப் பெண்' என்று கூற வேண்டாம்; 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்' என்று கூறட்டும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ - பாகம் 3, அத்தியாயம் 49, ஹதீஸ் எண் 2552) [சுட்டி-3].

"தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைப்பவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரீ - பாகம் 3, அத்தியாயம் 29, ஹதீஸ் எண் 2544) [சுட்டி-3].

இவ்வாறெல்லாம் அறிவுறுத்திய எங்கள் தலைவர், போரில் தமக்குக் கிடைத்த பெண் கைதியை என்னதான் செய்தார்?

யூத இனத் தலைவன் ஹுயையின் மகள் ஸஃபிய்யா, கைபர் போரின்போது போர்க்கைதியானார். எல்லாக் கைதிகளும் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா இப்னு கலீஃபா (ரலி) என்ற தோழர் நபிகளாரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்'' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், "உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்!'' என்று கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யாவை அழைத்துச் சென்றார்.

அதைப் பார்த்த மற்றொரு தோழர் நபியவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! குரைளா, நளீர் ஆகிய இரண்டு கிளையினருக்கும் தலைவியான ஸஃபிய்யாவை நீங்கள் திஹ்யாவிற்கு கொடுத்தீர்களா? அப்பெண் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தகுதியானவரல்லர்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள், "அவரை ஸஃபிய்யாவுடன் திரும்ப அழைத்து வாருங்கள்'' என்றார்கள். திஹ்யா ஸஃபிய்யாவுடன் வரவே , நபிகளார் ஸஃபிய்யாவைப் பார்த்தார்கள். பின்பு திஹ்யாவிடம் "கைதிகளில் வேறொரு பெண்ணை நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்குப்பின் ஸஃபிய்யாவுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துக் கூற, அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை உரிமைவிட்டதையே அவருக்குரிய மஹராக (பரிசப் பணம்) ஆக்கினார்கள்.

நபிகளார் மதீனா திரும்பும் வழியில் ‘ ஸத்துஸ்ஸஹ்பா' என்ற இடத்தில் ஸஃபிய்யா (ரலி) மாதவிலக்கின்பின் தூய்மையடைந்தார். உம்மு ஸுலைம் (ரலி) என்ற நபித்தோழி, ஸஃபிய்யாவை அலங்கரித்து இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய் மற்றும் சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபிகளார் வலிமா (மணவிருந்து) அளித்தார்கள். மூன்று நாட்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபிகளார் தங்கினார்கள். முழுதும் படிக்க [சுட்டி-6].
***
இருநூறு ஆண்டுகளுக்கு முன்வரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் அடிமைச் சந்தைகள் சக்கைப் போடு போட்டதாக விக்கி சொல்கிறது. கி.பி. 1806 வரைக்கும் அடிமைக் கொள்முதலும் அவர்களைக் கொத்தடிமைகளாக நடத்தியதும் ஆங்கிலேயர்களிடம் வழக்கில் இருந்திருக்கிறது. கி. பி. 1807 இல் அடிமை முறையை நீக்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்து அதன் நினைவாக இரண்டு பவுண்டு நாணயமும் வெளியிட்டது [சுட்டி-7].

கருப்பின அடிமைப் பெண்களின் நிறவேறுபாட்டையும் மறந்து, "வெள்ளையர்கள் தங்களது காதல் பசியைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்தினர். அக்காலத்து வெள்ளையர்களின் காமவெறியைத் தணிப்பது கருப்பின அடிமைப் பெண்களின் தீராப் பொறுப்பாக இருந்தது. வெள்ளையர்களின் இரத்தம் ஓடாத கருப்பினப் பெண்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது" என்று அண்மைக்கால வரலாற்றை அபூமுஹை என்பார் பதிவு செய்திருக்கிறார் [சுட்டி-8].

அடிமைப் படுத்துவதற்கு மனிதர்கள் விலை கொடுத்து வாங்கப் பட்ட காலத்துக்கு ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அடிமைகளாக இருந்தவர்களை விடுதலை செய்வதற்கு முஸ்லிம்கள் விலை கொடுத்து வாங்கினர். ஏனெனில், அடிமைகளை விடுதலை செய்வதற்கு ஊக்கமளிக்கும் அல்லாஹ்வின் வசனங்கள் அருளப் பட்டன.

திண்ணை இதழில் 'சாகாத கருப்பு யானை' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையின் நாயகர் [சுட்டி-9] பிலால் (ரலி) என்பார் நபித்தோழர் அபூபக்ரு (ரலி) அவர்களால் விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்யப் பட்டவர்தாம். முழுதும் படிக்க [சுட்டி-10].

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பரீரா என்ற அடிமைப் பெண்ணை அவளது உரிமையாளர்களிடமிருந்து விலைக்கு வாங்கி விடுதலையளித்தார் (புகாரீ - பாகம் 2, அத்தியாயம் 34, ஹதீஸ் எண் 2168) [சுட்டி-3].

பிரபலமான ஹதீஸ் அறிவிப்பாளர் நாஃபிஉ என்பார் நபித்தோழர் இபுனு உமரால் விடுதலை செய்யப் பட்ட முன்னாள் அடிமையாவார். இபுனு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழர் விடுதலை செய்தவரது பெயர் இக்ரிமா என்பதாகும்.

இறைவசனம் 009:060இன்படி முஸ்லிம்களின் ஸக்காத் எனும் வளவரிக்கு உரியோரான எட்டு வகையினருள் அடிமைகளும் அடங்குவர். அடிமைகளை விடுதலை செய்ய வேண்டிய முஸ்லிம்களின் கடமை, இன்றும் வேறு வகையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாகன விபத்து ஏற்படுத்தி, அதில் உயிரிழந்தவர்களுக்கு ஈட்டுப் பணம் கொடுக்க முடியாமல் சிறையில் அடைக்கப் பட்ட ஆண்/பெண் கைதிகளை முஸ்லிம் செல்வந்தர்கள், தங்கள் வளவரிப் பணத்தின் மூலம் விடுவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் சில நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

இவை எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமாக, இஸ்லாத்தின் மீளெழுச்சிக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது முஹம்மது அவர்கள் நபியாக ஆவதற்கு முன்னர், தமக்குத் தம் துணைவி கதீஜா (ரலி) திருமணப் பரிசாக அளித்த ஜைத் என்ற அடிமையை உடனடியாக விடுதலை செய்து, உலகம் முழுதும் அப்போது வழக்கிலிருந்த அடிமை முறையின் சவப் பெட்டிக்கு முதல் ஆணியை அடித்தார். ஜைதை முஹம்மதின் மகன் என்றே மக்கா வாழ் அரபியர்கள் குறிக்கும் அளவுக்கு ஜைத் நபிகளாரிடம் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தார்.

இனி, பேசுபொருளுக்கு வருவோம்.
// கைது செய்யப்பட்ட பெண் ஏலத்திற்கு விடப்படலாம், பெண்டாடப்படலாம் அதை குரானே அனுமதிகிறது என்று நேசகுமார் சொல்கிறார். சு. ரா. 23.06 என்று ஆதாரமும் காட்டுகிறார்// என்று வெ. சா. குறிப்பிட்டு, நான் மேலே எழுதியுள்ள இறைவசனம் 023:006 இல் ஏலம் போடுவதற்கும் பெண்டாடுவதற்கும் ஆதாரம் ஏதும் இருக்கிறதா அல்லது நாகூர் ரூமி குறிப்பிட்ட, "நேசகுமார்களைப்போல பொய் பேசும், வெறுப்புமிழும் குழுவில் இப்போது வெ. சா" இருக்கிறாரா என்பதை முடிவு செய்ய வேண்டியது திண்ணை வாசகர்களின் பொறுப்பாகும்.

இன்னொன்று:
சான்றுகள் எதையும் தராமல் ஒற்றைச் சொல்லில் 'அவதூறு' என்று எதையும் வெறுமனே நான் சொல்வதில்லை. இது வெ. சாவுக்குத் தெரியாவிட்டாலும் திண்ணை வாசகர்களுக்கு நன்கு தெரியும்.

இல்லாததைச் சொல்வது/எழுதுவது என்பதை 'அவதூறு' என்று நான் விளங்கி வைத்திருக்கிறேன். அவதூறுக்கு வேறு சொல்லை வெ. சா எனக்கு அறியத் தந்தால் நன்றியுடையவனாவேன்.

கொசுறு:
லிங்கம், யோனி, கம்பம் எல்லாம் பலமுறை விளக்கம் சொல்லப் பட்டுள்ள பழஞ்சங்கதி. இன்னொரு முறையும் சொல்வதில் தவறில்லை. அதற்கு முன்னர் திண்ணையின் 13.07.2006 இதழில் வெளியான ஹமீது ஜஃபர் என்பவரின் கட்டுரையோடு படங்களையும் வெ. சா பார்த்து வைத்துக் கொள்ளவும் [சுட்டி-11]. முடிந்தால், "கஅபா என்ற அந்த கட்டிடம் இருந்தாலும் அல்லது அழிந்தாலும் அல்லது இடிக்கப்பட்டாலும் அல்லது சேதப்படுத்தப்பட்டாலும் அல்லது வெறும் நிலமாக இருந்தாலும் கஅபா என்று சொல்லப்படும் அந்த இடத்தை நோக்கியே முஸ்லிம்கள் தொழவேண்டும் என்பது இறைக் கட்டளை" என்று ஹமீது ஜஃபர் எழுதியிருப்பதன் உட்பொருளையும் சிந்தித்துப் பார்க்கவும்.

மீண்டும் சந்திப்போம், நன்றி!
ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=20906114&format=html 
சுட்டிகள் :
1 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905283&edition_id=20090528&format=html
2 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#52
3 - http://chittarkottai.com/bukhari/tamil/
4 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_third_phase.htm#11
5 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_third_phase.htm#15
6 - http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/madinah_second_phase.htm#34
7 - http://en.wikipedia.org/wiki/Slave_trade
8 - http://abumuhai.blogspot.com/2007/04/1.html
9 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=308092510&format=html
10- http://www.tamilislam.com/history/Raheequl_makthooom/second_stage.htm#6
11- http://www.thinnai.com/?module=displaystory&story_id=80607146&format=html

வெள்ளி, ஜூன் 05, 2009

செத்தும் கிழித்த கமலா சுரையா

கமலா சுரையா'மலாதாஸ்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகளும் 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாள மொழியில் சிறுகதைகளும் சுயசரிதமும் எழுதிய 75 வயதான கமலா சுரையா, புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் கடந்த 31.05.2009 அதிகாலை 2 மணியளவில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலையாள இதழ்களும் தொலைக்காட்சிகளும் அவரைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்தன. தன் மண்ணின் மகளுக்கு மலையாள உலகம் மரியாதை செய்வதில் வியப்பொன்றுமில்லை. அவருக்குத் தமிழ் இணைய உலகிலும் அஞ்சலிகள் செலுத்தப் படுவதைக் காணும்போது அவரது எழுத்தின் வலிமையை, பரவலை உணர முடிகிறது.
கேரளத்தில் தூக்குத்தண்டனை பெற்ற ஒரு கைதி, சிறையில் இவருடைய எழுத்தை வாசித்தார். பிறகு தண்டனைக்குறைவு பெற்று விடுதலையாகி மாதவிக்குட்டியின் வீட்டுக்கு வந்து 'அம்மயுட மடியில் தலைவைத்துக் கிடக்கணும்' எனக் கோரினார்; அது நிறைவேறியது
என்று 'மாதவிக்குட்டிக்கு அஞ்சலி' என்ற பதிவில் நாகார்ஜுனன் குறிப்பிடுகிறார். மேலும் மாதவிக்குட்டியைத் தான் சந்திக்க நேர்ந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லும்போது,
டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு அகஸ்மாத்தாக நான் சென்றபோது அங்கே காரில் இவர் ஏறிக்கொண்டிருந்தார். உளவுத்துறை விசாரணை பற்றிய யோசனையிலேயே நான் சென்றதால் என் மோட்டார் சைக்கிள் இவர் காரை உரசிவிட்டது. ஓட்டுநர் என்னை ஏதும் சொல்வதற்குள் 'எந்தா மோனே..' என்று வந்து என் தோளைத் தட்டிச் சிரித்தார். நிறைய நகை அணிந்திருந்தார். கைவளை ஒலி காதுவரை சென்று மீண்டும் சிலிர்த்தேன். அப்போதுதான் தொட்டது மாதவிக்குட்டி என உணர்ந்தேன். "ஓ, என் தப்புதான்.. ஸாரி.... உங்கள் கதைகளை வாசித்திருக்கிறேன்..." "எந்தினா ஸாரி மோனே, என் கதைகளை வாசித்ததற்காகவா.." என் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு சட்டென்று காரில் ஏறிச் சென்றார்
என்று குறிப்பிட்டு விட்டு, மாதவிக்குட்டியின் நினைவாக அவரது "நெய்ப்பாயாசம்" கதையைத் தமிழாக்கித் தந்திருக்கிறார் நாகார்ஜுனன் (நன்றி!). ஏற்கனவே கீற்று இதழில் குருமூர்த்தியும் நெய்ப்பாயாசத்தை, மெருகேற்றிய தமிழில் தந்திருக்கிறார். அச்சிறுகதையின் இறுதிப் பகுதியான, "அவர்கள் சாப்பிடட்டும்.... அவளுடைய கைப்பட்ட சமையல் இனிமேல் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லையல்லவா" என்று முடிவதைப் படித்தபோது இனிமேல் கமலா சுரையா எழுதப் போவதில்லை என்ற உண்மையின் ஒலியும் நமக்குள் அங்குப் பேசாமல் பேசுகிறது.
பொதுவாக, ஏறத்தாழ எல்லா இலக்கியவாதிகளுமே தங்களது குழந்தைப் பருவத்தைப் பற்றி எழுதும்போது, அது வறுமை நிறைந்த சூழலுடன் இருந்திருந்தாலும், தாங்கள் அனுபவித்த குழந்தைப் பருவத்தை ஒரு கனாக் காலமாகவே எழுதுவர். ஆனால், கமலாதாஸ் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி, 'Punishment in kindergarten' என்ற கவிதையில் எழுதும் அம்சம் முற்றிலும் மாறுபட்டது
என்று 'அஞ்சலியும் ஆசையும்' எனத் தலைப்பிட்டு 'குளோபன்' எழுதுகிறார். அந்தக் கவிதையில் கமலாதாஸின் உணர்ச்சிகள் ஆங்கிலப் புலமையோடு இரண்டறக் கலந்திருப்பதைக் காண முடிகிறது. மலையாளத்தில் அவர் எழுதிய சுயசரிதையான 'எண்ட கதா' (என் கதை) குமுதத்தில் தமிழில் தொடராக வெளிவந்தபோது தமிழகத்திலும் பெரும் அதிர்வலைகளை அது கிளப்பியது. "என் கதை"யை நீங்கள் எழுதியபோது மக்கள் அதிர்ந்து போயினரே? என்ற ரீடிஃப் ஷோபா வாரியர் விடுத்த கேள்விக்கு, "அதெல்லாமில்லை; அதிர்ந்ததுபோல் பாசாங்குதான் செய்தனர்" என்று தனது வெளிப்படையான எழுத்தை நியாயப் படுத்தினார் கமலா.
தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலாதாஸ் போல அடித்தவர்கள் யாரும் கிடையாது
என்று அவர் எழுதிய 'பொய்கள்' என்ற கதையை மேற்கோள் காட்டுகிறார் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் 'பொடிச்சி': பிள்ளையைத் தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?). அவர்கள் அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை. அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதைத் தன் தாயிடம் தன்னுடைய மொழியில் இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுப் பிள்ளை சொல்லும்போதெல்லாம், பிள்ளை 'பொய்' சொல்வதாகவும் வரவர அவன் பொய்கள் கூடுவதாகவும் தகப்பன் சொல்லுவார். பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய் அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, "ஏதேனும் கனவு கண்டியோடா?" என தடவிக் கொடுப்பாள். "உண்மையாத்தான்" என அழுவான் மகன் - கதையின் முடிவு வரை! *** "அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!" "நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை" "எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது" "நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், 'நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!' என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்தியமான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்தக் கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்" என்ற கமலா சுரையாவின் ஆசையை, தம் அஞ்சலிப் பதிவாக்கி இருக்கிறார் மரைக்காயர் என்ற முஸ்லிம் பதிவர். இதுவரைக்கும் எல்லாம் சரிதான். சுவையான 'நெய்ப்பாயாச'த்தில் கிடக்கும் பொடிக்கல்லைப்போன்ற ஒரு பதிவையும் படிக்க நேர்ந்தது. அது ஜெயமோகனின் பதிவு. கேரள சாகித்ய அகாடமி அலுவலகத்தில் கமலாதாஸைச் சந்தித்ததாகத் தொடங்கும் 'அஞ்சலி: கமலா சுரையா' என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதியுள்ள பதிவைப் படிப்பவர்களுக்கு அவர் கமலாதாஸைத்தான் சந்தித்தாரா அல்லது வேறு யாரையோவா என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் எழுதுகிறார்:
கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது
இதழ்கள், தொலைக்காட்சிகள் நமக்குக் காட்டுகின்ற இப்போதைய கிழவி கமலாவே ஜெயமோகன் குறிப்பிடும்படி 'அவலட்சணமாக' இல்லை என்பதால் அவரது அப்போதைய 'சந்திப்பு' நிகழ்வு என்பதே கற்பனையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்குக் கமலா சுரையாவின் படமும் இணைத்திருக்கிறேன். வாசகர்கள் முடிவு செய்யட்டும். இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் கைது செய்யப்பட்டபோதுமின்றி, அவரைத் தூக்கிலிட்டுக் கொன்ற பிறகும் "அவர் சத்தாம் அல்ல; அவரைப்போல் உருவம் கொண்ட டூப்ளிகேட்" என்று சொன்ன சில முஸ்லிம்களையும் அண்மையில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் "மாவீரர் தினத்தன்று தோன்றுவார்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களையும் காணும்போது, உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பிடிவாதமாக மறுக்கும் மனப்பான்மை அவர்களிடம் குடிகொண்டிருப்பதை உணர்கிறோம். அதேபோன்ற தன் உள்ளக்கிடக்கையில் ஒளிந்து கொண்டிருக்கும் 'அல்ப ஆசை'களை ஜெயமோகன் வெளிப்படுத்துகிறார்:
"... அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே 'பாதுகாப்பான துணை தேடி' மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார்.
செத்துப் போனவர் திரும்ப வந்து மறுக்கப் போவதில்லை என்ற தைரியத்தில், நாலாந்தர எழுத்தாளனைப்போல் ஜெயமோகன் எழுதியிருப்பதைப் படிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது! இவ்வாக்கத்தின் தலைப்பை ஒருமுறை படித்துக் கொள்வோம். 'செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளல்' என்று சொல்வதுபோல் செத்த பிறகும் ஜெயமோகன் என்ற எழுத்தாளனின் முகமூடியைக் கிழித்தார் கமலா சுரையா. 'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். "என்னைப் பற்றி அவதூறுகள் பரப்புபவர்களையும் தவறாக எழுதுபவர்களையும் பலவேளைகளிலும் சபிக்க வேண்டும் என்று தோன்றும். அந்த அளவுக்கு அவர்கள் என்னைத் துன்பப்படுத்துகின்றனர். என் மீது இந்த அளவிற்கு அவர்களுக்கு வெறுப்பு வர நான் அவர்களுக்கு என்ன தீமை செய்தேன்?. அன்பு அல்லாமல், யார் மீதும் நான் வெறுப்பு காட்டியதே இல்லை. என்னைக் குறித்துத் தவறான கதைகள் எழுதியதைக் கேள்விப்படும்போது 'நாசமாப் போக' என்று சபிக்கத் தோன்றும். இந்துவாக இருந்திருந்தால் அதைச் செய்திருப்பேன். ஆனால், இப்போது என்னால் முடியாது! துன்பம் இழைப்பவர்களுக்கும் இஸ்லாம் நன்மை செய்யுமாறு கூறுகிறதே! அவர்கள் நன்றாக எழுதட்டும். என்னால் அவர்களைச் சபிக்க இயலாது!" மேற்காண்பவை, புனாவிலுள்ள கமலா சுரையாவின் மகன் ஜெயசூர்யாவுடைய வீட்டில் வைத்து (சென்ற மாதம்) கைரளி தொலைக்கட்சிக்குக் கமலா சுரையா அளித்த பேட்டியின்போது அவர் கூறியவையாகும். கடந்த 02.06.2009 இரவு கைரளி மக்கள் தொலைக்காட்சி அதை ஒளிபரப்பியபோது அவர் கூறியதாக மளையாள நண்பர் ஒருவர் எனக்குத் தமிழாக்கித் தந்தவை. எழுதி இரண்டு நாட்களுக்குள் ஜெயமோகனின் முகமூடி கிழிபட்டது இப்படித்தான். 

மேலும், "பூனாவில் சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்குக் கையில் போதிய பணம் ஏதும் இல்லை. அந்த அளவுக்குச் சேமிக்கவில்லை. எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கணவருக்கும் தனியாக நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்ததால், எனக்கு எழுத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைந்தேன். அதற்கு என் கணவரும் எவ்வித எதிர்ப்பும் காட்டவில்லை. மற்றவர்களுக்கு உதவுவது என்பதே தனி ஒரு மகிழ்ச்சி தானே?. கிடைப்பதை எல்லாம் நமக்கே என்று சேர்த்து வைத்து நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம்? மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகமதிகம் கொடுக்க வேண்டும். ஒருவேளை நான் இஸ்லாத்திற்கு மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்குக் கொடுப்பதைச் சட்டமாக, கடமையாகவே ஆக்கி வைத்திருக்கும் மார்க்கம் அது. எவ்வளவு அழகான மார்க்கம்! வருமானத்தில் 2.5 சதவீதத்தைக் கட்டாயமாக சக்காத்தாக பிறருக்குக் கொடுக்க இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. முன்னரும் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது இன்னும் இன்னும் அதிகமதிகம் கொடுக்கிறேன். 2.5% அல்ல, என்னிடமுள்ளதில் பாதியைக் கொடுக்கிறேன்; இன்னும் காலம் செல்ல முக்கால் பாகம், ஏன் முழுவதையுமே நான் கொடுப்பேன். பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோசம், அது ஒரு தனி ரகம்; அனுபவித்தவர்களுக்கே அது புரியும்!" என்று மூச்சுக்கு மூச்சு, தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை நெறியான இஸ்லாம் குறித்துப் பெருமை பொங்கப் பேசும் கமலா சுரையாவை, "மீண்டும் குருவாயூரப்பன் பக்தை"யாக்கிப் பார்ப்பதற்கு ஜெயமோகனுக்கு அற்ப ஆசை!

கமலா சுரையாவுக்குக் கொலை மிரட்டல்கள்/கொலை முயற்சிகள் இருந்தன என்பது உண்மைதான். அவை எங்கிருந்து வந்தன என்பதை அவரே கூறுகிறார்: "கொலை மிரட்டல்கள் ... அது ஏராளம். இஸ்லாத்திற்கு மாறிய நாளிலிருந்து ஆரம்பித்தது அது. இதனால் யாருக்கு என்ன நஷ்டம்?. அவ்வப்போது காவல்துறையினர் வந்து ஆலோசனைகள் கூறிச் செல்வர். இப்போதும் சில நாட்களுக்கு முன்னர், இங்குத் தொலைபேசியை மாற்றி வைத்து, நேரடியாகக் காவல்துறை கண்ட்ரோல் அறையுடன் இணைத்துள்ளனர். அழைப்பவர்களின் எண்ணும் தெரிவதுபோல் காலர் ஐடி மெஷின் வைத்துள்ளனர்." "எழுத்தச்சன் விருது வழங்க, என்னை அழைத்தனர். நான் வீட்டை விட்டு இனி எங்கும் போவதில்லை எனக் கூறி விட்டேன். முக்கியமாக பப்ளிக் மீட்டிங்குகளுக்கு நான் வருவதில்லை என அனைத்தையும் ரத்து செய்து விட்டேன். என்னைக் கொல்ல நினைப்பவர்கள், அந்த இடத்தில் ஒரு குண்டைக் கொண்டு வந்து போட்டு விட்டால் போதும்தானே? நான் இந்த வயசுக்குப் பிறகு இறப்பதால் எனக்கொரு இழப்பும் இல்லை. ஆனால், வாழ வேண்டிய இன்னும் ஒரு நூறு பேர் எனக்காக இறப்பதை நான் விரும்பவில்லை"

"கொச்சியில் இருக்கும் போதும் அப்படித்தான். ஆனால், அங்குக் காவல்துறைக்கும் மேலாக எனக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பாக இருந்தனர். அப்படித்தான் சொல்வேன். கமாண்டோக்கள்தான். 8 பிள்ளைகள். என்னை உம்மா என்றுதான் அழைப்பார்கள். என்.டி.எஃபைச் சேர்ந்தப் பிள்ளைகள். யாராவது உணவு தந்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி என்னைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தனர். அதிலும் குறிப்பாகப் பெண்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். சில வேளைகளில் சில பெண்கள் வலுக்கட்டாயமாக என் வாயில் மிட்டாய்களைத் திணிப்பர். அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவர்களை எதிர்ப்பதில்லை. வாயில் வாங்கிக் கொண்டு அவர்களைக் காணாமல், குளியலறைச் சென்று துப்பி விடுவேன். அந்தப் பிள்ளைகள் கண்டால் கொதித்து விடுவார்கள். பின்னர் அவர்கள் சாப்பிட்டுப் பார்த்தப் பின்னரே என்னைச் சாப்பிட அனுமதிப்பர். ஒரு முறை அப்படித்தான், ஒரு பெண் கொண்டு வந்த மிட்டாயை உடனே சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள். சமது அதை வாங்கி முதலில் சாப்பிட்டுப் பார்த்தான். அதில் என்னைக் கொல்ல விஷம் வைக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேரம், பல மருத்துவர்கள் போராடி சமதைக் காப்பாற்றினர். இப்போதும் என்னால் அதை மறக்க முடியாது. மற்றொரு முறை, ஒரு பெண் பிரியாணி செய்து கொண்டு வந்திருந்தாள். அதையும் முதலில் சாப்பிட்ட சமது மீண்டும் ஒருமுறை அதே போன்று மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பினான். என்னைக் கொல்வதற்கு அப்படி என்ன நான் அவர்களுக்குத் துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. எனக்கும் இந்து மதம் தெரியும் தானே? அதில் அப்படி ஒன்றும் இல்லை." 

Kamala Das' son M D Nalapat, who has came to Kochi from Delhi, said that they had received a number of threatening telephone calls. The calls appeared to be from Hindu extremists, he added. One caller threatened that he would kill Kamala Das within 24 hours. Nalapat said that his mother had shown extraordinary courage in embracing Islam. 

*** 

'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருந்தேன். உயிரோடு இருந்தபோது கமலா சுரையா யாருடைய முகமூடியைக் கிழித்தார் என்று சொல்ல வேண்டுமல்லவா? 'முகமூடி கிழித்துக் கொண்ட வெ.சா' என்று தலைப்பிட்டு நாகூர் ரூமி கமலா சுரையாவைப் பற்றி, திண்ணை 29.09.2006 இதழில் எழுதியது:
"நான் கூறாத பலவற்றையும் அவர்கள் செய்தியாக்குகின்றனர். எனக்கு இஸ்லாம் மதம் மடுத்து என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். எதற்காக, யாருக்காக இதெல்லாம் செய்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. சில பத்திரிக்கையாளர்கள் இங்கு வந்து என் வீட்டின் சமையல்காரிகளிடம் பேசி விட்டுப் போவர். பின்னர் அவற்றையெல்லாம் நான் கூறியதாகக் கூறி செய்தியாக்குகின்றனர். பத்திரிகையாளர்கள் இத்தனை சதிகாரர்களாக மாறி விட்டனரே?" "எனக்கு வாழ்வில் தேடலின் தீர்வை அளித்த என் சமுதாயத்திற்கு நான் என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டேன். எனக்கு மதம் மடுத்து என்று நான் கூறாததைப் பரப்பியது போல் ஒவ்வொருவரும் என்னைப்பற்றி நாளுக்கொரு பொய்யைப் புனைந்து பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒரு எறும்பைக்கூட வேதனைப்படுத்த நினைக்காத என்னை எதற்காக இவர்கள் இப்படி துன்புறுத்துகின்றனர்? எனக்குத் தெரியவில்லை".

"இஸ்லாத்தை மதமாக ஏற்றுப் பின்னர் அதனை எனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டேன். ஒரு மதத்தில் இருந்து தேடலின் தீர்வாக மற்றொன்றை ஏற்றுக்கொண்ட நான் இந்த சமுதாயத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்" "எனது எல்லாக் கேள்விகளுக்கும் கடைசியில் கிடைத்த ஒரே பதில்தான் இஸ்லாம். ஏளனப்படுத்துபவர் ஏளனப்படுத்தட்டும். பிரபஞ்சத்தின் நாயனாகிய அல்லாஹ்வை நான் விசுவசிக்கின்றேன். எல்லாவற்றையும் அவன் நிச்சயிக்கட்டும்." (மொழிபெயர்ப்பு அபூ சுமையா, திண்ணை, 7 செப்டம்பர், 2006). "எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது." என்று 02-07-06 தேதியிட்ட ஆனந்த விகடனிலும் அவர் பேட்டி கொடுத்திருந்தார். நேசகுமார்களைப்போல பொய் பேசும், வெறுப்புமிழும் குழுவில் இப்போது வெ.சா.
***
கடந்த 28.05.2009 திண்ணை இதழில் குர்ஆன் வசனம் 023:006க்கான விளக்கத்தை நாகூர் ரூமியிடம் வெ.சா கேட்டிருந்தார். நாகூர் ரூமி இவ்விதழில் விளக்கம் தராவிடில் அடுத்த வாரம் நிச்சயம் நான் தருவேன் என்று வெ.சாவுக்கு உறுதி தருகிறேன். 

நன்றி!

திண்ணையில் : http://www.thinnai.com/?module=displaystory&story_id=20906046&edition_id=20090604&format=html

சுட்டிகள்: 1 - http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_31.html
2 - http://www.keetru.com/literature/short_stories/m_gurumoorthi_12.php
3 - http://globen.wordpress.com/2009/05/31/kamaladas/
4 - http://search.rediff.com/news/1996/3107edas.htm
5 - http://peddai.blogspot.com/2005_05_01_archive.html
6 - http://www.maraicoir.com/2009/05/blog-post_31.html
7 - http://jeyamohan.in/?p=2819
8 - http://www.rediff.com/news/1999/dec/13kamala.htm
9 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609221&format=html
10 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609081&edition_id=20060908&format=html

வெள்ளி, மே 22, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 22

ல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு உள்ளச்சத்தோடு கட்டுப்பட்டு, அவனுடைய மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநாட்டுவதற்காக ஒரு சின்னஞ்சிறு முஸ்லிம் கூட்டத்தினர் நிற்கின்றனர். அப்போது, அந்தக் கூட்டத்தினருக்குத் தலைமை வகித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடம் கையேந்தி, "யா அல்லாஹ்! எங்கள் இச்சிறுபான்மைக் கூட்டம் தகர்க்கப் படுமானால் உன்னை வணங்கி வழிபட இவ்வுலகில் எவருமே இல்லாமல் போய்விடுவார்களன்றோ?" என்று நெஞ்சுருக, கண்களில் நீர்மல்கப் பிரார்த்தித்து இறைவனின் உதவியை இறைஞ்சினார்கள். அவர்களுக்கு உதவுவதாக அல்லாஹ் நபிக்கு வாக்களித்தான். "வாக்களிக்கப்பட்ட உதவி நமக்கு வந்து விட்டது!" என்று அருகிலிருந்த அபூபக்ரு (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், "இந்த எதிரிகள் புறமுதுகிட்டு ஓடப் போகிறார்கள்" எனச் சொல்லிக் கொண்டே, குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளினார்கள். குறைஷிக் காஃபிர்கள் நின்றிருந்த திசையை நோக்கித் தன் கையை விரித்து மண்ணை ஊதிவிட்டு, "உங்கள் முகங்கள் கருகி விட்டன" எனக் கூறினார்கள். அம்மண், எதிரிகளின் திசையில் சிதறியது. எதிரிகளும் சிதறிப்போவதற்கு அல்லாஹ் பத்ருப்போரில் அற்புதமாக முஸ்லிம்களுக்குப் பேருதவி புரிந்தான்; முஸ்லிம்கள் வென்றார்கள்.

அல்லாஹ்வை அஞ்சி, அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து, அவனிடமே தவக்குல் வைத்து, அவனை நோக்கிக் கைகள் விரிகின்றபோது அந்தக் கைகளை வெறுமனே திருப்பி விடுவதற்கு நாணமுறுகிறவனாயிற்றே அவன்! அப்படிப்பட்ட அல்லாஹ், தன்னுடைய மார்க்கம் நிலைநிறுத்தப் படுவதற்கான ஓர் இக்கட்டான காலகட்டத்தில் தன்னுடைய தூதர் கையேந்துகின்றபோது கண்டு கொள்ளாமல் இருந்து விடுவானா? ஆகவே, தனது அடியார்களுக்குத் தனது உதவியைத் தங்கு தடையின்றி வழங்கி வெற்றியடையச் செய்தான். "பத்ரில் பெற்ற இந்த வெற்றி, தூதருடைய - தூதரின் வீரர்களுடைய சாகசத்தால் கிடைத்ததன்று; என்னுடைய உதவியைக் கொண்டு கிடைத்தது" என்பதை இந்த முக்கியக் கட்டத்தில் எல்லாருக்கும் நினைவு படுத்துவதற்காக அல்லாஹ்,
(முஸ்லிம்களே! பத்ருப் போரில் எதிரிகளான) அவர்களை நீங்கள் வெட்டவில்லை; அல்லாஹ்வே அவர்களை வெட்டினான். (நபியே! பகைவர் மீது மண்ணள்ளி) நீர் வீசியபோது நீர் வீசவில்லை; அல்லாஹ்வே வீசினான்" (அல்குர் ஆன் 008:017)
என்று கூறுகிறான். இதன் மூலம் "என்னை நம்பி, என்னிடம் அபயம் வைத்து, என்னை அஞ்சி வாழும் பொறுமையுடைய அடியாருக்குச் சோதனை ஏற்படும்போது, யாரும் எதிர்பாராத விதத்தில் நான் மகத்தான உதவி புரிந்து அவனை கவுரவிப்பேன்" என்ற பாடத்தைப் புகட்டுகிறான். வஹ்தத்துல் உஜூதுக்காரர்கள், நேரடியாகப் பொருள் தரும் குர்ஆன் வசனங்களுக்கெல்லாம், "இதனுடைய உட்பொருள் வேறு இருக்கிறது" எனத் திசை திருப்புவார்கள். ஆனால், மேற்காணும் 008:017 வசனத்துக்கு மட்டும் Literal meaningஐ அப்படியே எடுத்துக் கொள்வார்கள். விளக்கம் தேவையே இல்லாத தெளிவான வசனங்களுக்கு வேறு அ(ன)ர்த்தம் கற்பிப்பவர்கள், உவமித்துக் கூறும் இந்தக் குறிப்பிட்ட வசனத்தில் உணர்த்தப்படும் படிப்பினையைப் புறக்கணித்து விட்டு, அல்லாஹ்வே ஒவ்வொரு முஸ்லிம் வீரராக பத்ரில் வந்தான் என்பதுபோல அ(ன)ர்த்தம் கற்பிப்பார்கள். "எல்லாமே அல்லாஹ்தான்" என்ற இவர்களுடைய கோட்பாட்டின்படிப் பார்த்தால், அபூஜஹல் முஸ்லிம்களை வெட்டியபோது அபூஜஹல் வெட்டவில்லை; அல்லாஹ்தான் முஸ்லிம்களை வெட்டினான் எனக் கூறினாலும் கூறுவார்கள். இந்த வஹ்தத்துல் உஜூது எவ்வளவு பெரிய வழிகேட்டுக்கு இட்டுச் செல்கிறது பார்த்தீர்களா? இனி, வ.உக்காரர்கள் தங்கள் கோட்பாட்டுக்குச் சாதகமாக எடுத்து வைக்கும் ஒரு முக்கியமான ஹதீஸைப் பார்ப்போம். 

 - தொடரும் இன்ஷா அல்லாஹ்.

வியாழன், மே 14, 2009

பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!

நாகூர் ஹனீஃபா என்ற பாட்டுக்காரரைப் பற்றிக் கவிஞர் அப்துல் கையூம், 'நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம்' என்ற தலைப்பில் திண்ணையில் எழுதியிருந்தார் [சுட்டி-1].
.
பெரியார், இஸ்மாயீல் ஸாஹிப், பன்னீர் செல்வம், பட்டுக்கோட்டை அழகிரி, கருணாநிதி, அன்பழகன் போன்ற பிரபலங்களோடு நாகூர் ஹனீஃபாவின் நெருக்கம் அதில் பேசப்பட்டாலும் அண்ணாவைப் பற்றி பேசியது மலர் மன்னனுக்கு அவரது பழைய நினைவுகளை மலர வைத்தது. நாகூர் ஹனீஃபாவோடு அவருக்கு இருந்த நெருக்கத்தையும் திண்ணை வாசகர்களோடு மலர் மன்னன் பகிர்ந்து கொண்டார் [சுட்டி-2].

கவிஞர் அப்துல் கையூம் தனது திண்ணைக் கட்டுரையில், தாயிஃப் நகரில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கல்லடிபட்ட நிகழ்வுப் பூக்களைக் வெகு இயல்பாகச் சரம் தொடுத்திருந்தார்:
பூ-1 : "கல்லடிகள் பட்டபோதும் எங்கள் பெருமானே, கயவர்களைச் சபிக்கவில்லை எங்கள் பெருமானே
பூ-2 : "தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு தங்க நிலவைத் துரத்துகிறார். அருமை நபியை ஆருயிரை, அணையா விளக்கை வருத்துகிறார்"
பூ-3 : "கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்"
பூ-4 : "சொன்மாரி பொழிந்ததற்காய்க் கன்மாரி பெய்துவிட்ட வன்மனத்தார் திருந்துதற்கு வழிவகுத்த நாயகமே"
பூ-5 : "கல்லடி ஏற்று, கடுமொழி கேட்டு, உள்ளம் துடித்து, உதிரத்தை வடித்து"
பூ-6 : "தாயிப் நகரில் கல்லடிகள் தந்த தழும்பிலே இமைகள் தழுவதற்கும் அழுவதற்கும் கண்ணீர் பொங்குதே"
பூ-7 : "தாயிப் நகரத்து வீதியிலே - எங்கள் தாஹா இரசூல் நபி நடக்கையிலே - பாவிகள் செய்த கொடுமையினை - எண்ணிப் பார்த்தால் நெஞ்சம் பதைக்குதம்மா!"

இவற்றுள் மூன்றாவது பூவான, "கல்லின் மீது பூவை எறிபவர்கள், இப்போது பூவின் மீது கல்லை எறிகிறார்கள்" என்ற கவிக்கோ அப்துர் ரஹ்மானின் வரிகளைப் பற்றிச் சொல்லும்போதே, "வித்தியாசமான உவமைப் படிமம்" எனக் குறிப்பிடக் கவிஞர் மறக்கவில்லை. மலர் மன்னன் உட்பட எல்லாருக்கும் இயல்பாகத் தோன்றும் 'உவமைப் படிமம்' இயல்புக்கு மாற்றமான மனநிலையில் உள்ள ஒருவருக்கு மட்டும் விகாரமாகத் தோன்றுகிறது [சுட்டி-3].

திண்ணையில் உள்ள சொம்பை எடுத்து உள்ளே வைத்துக் கொள்வோம்; யோக்கியர் வரப் போகிறார்.
தனக்கு கீழ்ப்படிந்து தன்னிடம் ஆளும் உரிமையையும், நீதி வழங்கும் உரிமையையும், நிதி வசூல் செய்யும் உரிமையையும் ஒப்படைக்குமாறு கோர
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தாயிஃப் நகருக்குப் போனதாகத் திண்ணையில் எழுதும் நேசகுமார் என்பவரது மனநிலையை/வரலாற்று அறிவை எதில் சேர்ப்பது?
இந்துக்களை விவரிக்கும் வரிகளாக (கல்லின் மீது பூவை எறிபவர்கள்) புரட்டிய புண்ணியம் அப்துல் ரகுமானுக்கு சேரும் என்றால், அந்த மதக்காழ்ப்பை இங்கே அப்துல் கையும் சம்பந்தமில்லாத வகையில் இழுத்து வரத்தான் வேண்டுமா?
என்று 'கல்லின் மீது பூவை எறிபவர்கள்' என்ற உவமை புரிபடாத மாதிரி கேட்டு, அரபு நாட்டுப் பாகன்களான தாயிஃப்வாசிகளை அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டதைத் திசை திருப்பி, 'கல்லின் மீது பூவை எறிபவர்களை' இந்திய இந்துகளாகத் திருகுதாளம் செய்ய முயலும் நேசகுமாருக்கு சுருக்கமான ஒரேயொரு கேள்வி:
காந்திஜி பிறந்தநாள் முதல் தியாகிகள் நினைவுநாள்வரை அந்தந்தக் கற்சிலைகளுக்கு/நினைவுச் சின்னங்களுக்குச் சென்று பூ அள்ளிப் போடும்/எறியும் நமது பிரதமர் மன்மோகன் சிங் இந்துவா?
உவமை/உண்மை விளங்காமல், "கல்லின் மீது பூவை அள்ளிப் போடுபவர்/வீசுபவர் எல்லாரையும் இந்துக்கள்" என்ற அபத்தக் கருத்தை இங்கு வலிந்து புகுத்தினால், கி. வீரமணியை இந்து என்று சொல்ல வேண்டிய அபாயம் ஏற்படும். அதைவிடவும் அவர் வீசும் பூக்கள் போய் விழும் கல்லான பெரியாரை, "கடவுள்" என்று சொல்ல வேண்டிய பேரபாயம் ஏற்படும்.

இத்தனைக்கும் கவிக்கோவின் இருவரிக் கவிதை, விளங்க முடியாத அளவு கடினமாக இல்லையே! "சிலை வணங்கிகளான தாயிஃப் நகர பாகன்கள் மென்மையான குணம் கொண்ட நபிகளாரைக் கல்லால் அடித்து ஊரை விட்டுத் துரத்தினார்கள்" இதுதானே அந்த இருவரிக் கவிதை சொல்லும் செய்தி!
இது அநாகரிகமான கூற்று என்பது கூட இவர்களுக்கு புலப்படாமல் போனதுதான் தமிழ் சமுதாயத்தின் துரதிர்ஷ்டம், உலகின் துரதிர்ஷ்டம் என்று தோன்றுகிறது
என்று உலகளாவிய அளவில் மாய்ந்து போகிறார் நேசகுமார்.
எந்த நேசகுமார்?

ஸைபர் ப்ரம்மாவோடு சேர்ந்து அசிங்கமான 'கிச்சு-கிச்சு தாம்பாளம்; கிய்யா-கிய்யா தாம்பாளம்' விளையாட்டு [சுட்டி-4] விளையாடிய நேசகுமார். கிச்சு மானஸ்தன் போலும்; 'நேசகுமாருடன் ஒரு நேர்காணல்' என்ற தனது 25.05.2005 தேதியிட்ட பதிவைத் தூக்கி விட்டார் [சுட்டி-5]. நேசகுமார் நாகூருக்குப் போய் நன்னாரி சர்பத் குடித்ததாக வெட்கமின்றிக் கதை சொல்லும் அப்பதிவு இன்றுவரை வேறோர் இடத்தில் பாதுகாப்பாகப் படிக்கக் கிடைக்கிறது [சுட்டி-6].

தனி மனிதத் தாக்குதலை அனுமதிக்காத திண்ணையின் விதிகள் புரிந்து கொள்ளத் தக்கவைதாம். ஆனால், 100 கோடி இந்தியர்களுள் 20 கோடி முஸ்லிம்கள் - அதாவது ஐந்தில் ஓர் இந்தியர் - உயிரினும் மேலாக மதிக்கும் உலகளாவிய தலைவர் ஒருவரை அவமதித்து எழுதுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவரது காழ்ப்புக் கழிவுகளைத் திண்ணை ஏற்றுக் கொள்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இருப்பைக் 'காட்டி'க் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நேசகுமாருக்கு இருக்கலாம்; திண்ணைக்கு அப்படி இல்லையே!

சென்ற வாரம் திண்ணையில் அவர் கக்கியதைப் போல் நூறு மடங்கு காழ்ப்புகளுக்கு ஏற்கனவே பலரால் விளக்கங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன [சுட்டி-7]. குறிப்பாக நல்லடியார் என்பவர் நான்காண்டுகளுக்கு முன்னர் தமிழோவியத்தில் அசைக்க முடியாத சான்றுகளுடன் 9 வாரங்கள் தொடர் விளக்கம் எழுதியிருக்கிறார் [சுட்டி-8].
என்றாலும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய் மீண்டும்,
மத்திய காலத்தில், மத்திய கிழக்கில் பரப்பப்பட்ட கருத்துக்களை புரிந்தும் புரியாத நிலையில் வன்முறை மூலம் பெரும் கூட்டத்தின் மீது திணித்து, அவர்களுக்கு பணம், பதவி, பெண்கள் என்று ஆசை காட்டி அந்தக் கருத்துக்களைப் பற்றிய விமர்சனங்கள், கேள்விகள் எதுவும் எழுப்பாதவாறு அவர்களிடம் ஆசை, வெறுப்பு ஆகியவற்றை தூண்டிவிட்டு அந்தகூட்டங்களின் சக்தியை மற்றவர்கள் மீது திருப்பிவிட்டு கட்டப்பட்ட இந்த இறைக்கோட்பாடு
என்று இஸ்லாத்தின் மீது சேறுவாரி இறைப்பதன் மூலம் - அதிலும் நாகூர் என்ற பெயர் கேட்டாலே நடுக்கம் கூடிப் போய்விடுவதைக் காட்டி விடுவதன் மூலம் - தனக்கு மிரட்சி முற்றிப் போய்விட்டதை மறுபடியும் நிரூபிக்கும் நேசகுமார், "இந்தியாவில் இஸ்லாத்துக்கு எதிர்காலமில்லை" என்ற கிழடு தட்டிய கிளிசோதிட நம்பிக்கையிலேயே இன்னமும் மூழ்கிக் கிடக்கிறார்; கிடந்து விட்டுப் போகட்டும்!

"எல்லாப் புகழும் இறைவனுக்கு" என்பது நாகூர் ஹனீஃபா பாடிய பாடல்களுள் ஒன்று. அதே வரிகளை, ஹாலிவுட்டில் உள்ள கோடாக் அரங்கில் உலகமெங்கும் கேட்கும்படி உரத்துச் சொன்னவரது - அதாவது ஐந்து இந்தியரில் ஒருவரது - முன்னாள் பெயர் திலீப் குமார் என்று 'ஐ லவ் இண்டியா' தளத்தில் செய்தி போட்டிருக்கிறார்கள் [சுட்டி-9].

ஜெய்ஹோ!

ஃஃஃ

திண்ணையில் : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80905127&format=html
சுட்டிகள்:
1 - http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20904235&edition_id=20090423&format=html
2 - http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20904303&edition_id=20090430&format=html
3 - http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20905071&format=html
4 - http://wahhabipage.blogspot.com/2008/03/2.html
5 - http://kichu.cyberbrahma.com/?p=61
6 - http://copymannan.blogspot.com/2007/04/blog-post_19.html
7 - http://wahhabipage.blogspot.com/2006/09/blog-post.html
8 - http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=nalladiyar1&taid=1
9 - http://www.iloveindia.com/indian-heroes/ar-rahman.htm

புதன், ஏப்ரல் 29, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 21

ந்த ஸுஃபிச் சன்னியாசிகள்- தர்வேஷ்கள் வழியாகத்தான் சொர்க்கத்துக்கு நுழைவுச் சீட்டுப் பெற முடியும் என்ற எண்ணத்தைப் பாமரர்களிடம் பரப்பி வைத்தார்கள். இவர்களுடைய வாக்கை வேத வாக்காகக்கொள்ளும் முஸ்லிம்களும் பெருகினார்கள்.

ஸூஃபி்யான ரூமியின் 'மஸ்னவீ' எனும் நூலை, ஃபார்ஸீ மொழியில் அமைந்தக் குர்ஆன் எனச் சொல்லலானார்கள். இத்தகையப் பிஸ்தாக்களும் பிஸ்தாமிகளும் நாளடைவில் இஸ்லாத்தில் பெருகலானார்கள்.

துறவு நெறியில் வாழும் இத்தகைய ஞானிகளின் வாயிலாகத்தான் மறைஞானத் தத்துவமாகிய இறையிணைவு (Mysticism) இரகசியத்தைப் பெறமுடியும் என்றனர் ஸூஃபிகள். இந்த இறையிணைவு இரகசியம் என்பது இவர்களுக்கு முன்பு யாருமே அறியாத பெரிய விஷயமன்று. கிரேக்கர்கள் கூறிய 'இயல்வன யாவும் இறையுருவே' என்ற Pantheismதான் அது. வேதாந்தத்தின் உட்பொருளாகிய 'அத்துவைதம்' என்பதும் அதுவே.

இதையெல்லாம் மாற்றாரிடமிருந்து தத்தெடுத்துக் கொண்ட ஸூஃபிகள், மாற்றாரைப் பார்த்து, "உங்களிடம் வெறும் அத்துவைதம் மட்டும்தானே இருக்கிறது! எங்களிடமோ அத்துவைதத்துடன் ஏகத்துவமும் இருக்கிறதே" என்று மார் தட்டினர். அது எப்படி அத்துவைதமும் ஏகத்துவம் எனும் துவைதமும் சேர்ந்திருக்க முடியும்? இரண்டுமே வெவ்வேறான, ஒன்றுக்கொன்று முரண்பட்ட எதிரெதிர் சமயக் கோட்பாடுகளாயிற்றே எனக் கேட்டால், "பாமரர்களாகிய உங்களுக்கு அப்படித்தான் தெரியும். அத்துவைதமாகிய அனேகத்-துவத்தில் ஏக-ஒரு துவத்தைப் பார்ப்பதற்கு உள்ளொளி பெற்றிருந்தால்தான் முடியும்" என்பார்கள்.

உள்ளொளியாகிய அறிவைப் பெறுவது ஸூஃபிஸத்தின் முதற்படி என்றனர். அதாவது, ஒருவன் தன்னை அறியவேண்டும் என்றும் தன்னை அறிந்தவன் தன் ரப்பை (இறைவனை) அறிந்தவனாவான் என்றும் கூறினர். இந்தத் 'தன்னை அறியும்' கடுந்தவ முயற்சியில், மனைவி, மக்கள், குடும்பம், சமுதாயம் முதலியவை குறுக்கே நிற்பதால் உலகப் பற்றை விட்டு நீங்கித் துறவறம் மேற்கொண்டு தியான நிஷ்டையில் மூழ்க வேண்டும் என்றனர்.

அப்படி மூழ்கி முக்குளித்துத் தன்னிடத்தில் தன் ரப்பைக் கண்டவன் எவனோ அவனுக்குக் காண்பவை எல்லாம் ரப்புடைய திருக்காட்சியாகவே ஆகிவிடுகின்றன என்பதும் எல்லாப் பொருளுமே அல்லாஹ்வைத் தவிர வேறல்ல என்னும் கண்ணோட்டத்தில் எல்லாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதும் ஸூஃபிஸத்தின் நெறியாகும். இங்ஙனம் அறிவு, துறவு, அன்பு என்னும் மூன்றும் ஸூஃபிஸத்தின் முக்கியப் பண்புகள் எனப்பட்டன.

இப்படியாக, இயல்வன யாவும் இறையுருவே என்னும் அத்துவைதக் கோட்பாட்டைத் தன்மயமாக்கிக் கொண்ட ஸூஃபிஸம், அதற்கு ஒரு அரபுப் பெயரைச் சூட்டி அழகு பார்த்தது. அப்போதுதானே இஃது இஸ்லாத்தோடு தொடர்புடையது எனப் பறைசாற்ற முடியும்? ஸூஃபிகள் தம் கோட்பாட்டுக்குச் சூட்டிய அரபுப் பெயர் 'வஹ்தத்துல் உஜூது' என்பதாகும். அதாவது, 'உள்ளவை எல்லாம் ஒன்றே' என்பது இதன் பொருளாகும்.

இந்த வஹ்தத்துல் உஜூதுக் கோட்பாட்டுக்கு நியாயம் கற்பிப்பதற்காக அவர்கள் மேற்கோள் காட்டிய இறைவசனம்:
(முஸ்லிம்களே! பத்ருப் போரில் எதிரிகளான) அவர்களை நீங்கள் வெட்டவில்லை; அல்லாஹ்வே அவர்களை வெட்டினான். (நபியே! பகைவர் மீது மண்ணள்ளி) நீர் வீசியபோது நீர் வீசவில்லை; அல்லாஹ்வே வீசினான்" (அல்குர் ஆன் 008:017).

இந்த வசனத்தை வைத்துக் கொண்டு, அல்லாஹ்தான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமாக புவியில் அவதரித்தான் என்று கூறினார்கள் ஸூஃபிகள்.
இப்புவியில் ஊனுருவாய் நீ அஹ்மத் ஆவனனே (ஞானப் புகழ்ச்சி - பாடல் 134).
நீயே உனக்கு ஸுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய்
நீயே புவிக்குள் ரஸூலாக வந்தவன் (ஞானப் புகழ்ச்சி - பாடல் 118).
என்றெல்லாம் பீரப்பாவும் தன் பங்குக்கு இதனைப் பாடி வைத்தார்.

ஆனால், அந்த 008:017 இறைவசனம் அறிவித்திடும் உண்மையான பொருள் அதுவன்று.

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

புதன், பிப்ரவரி 18, 2009

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 20

ஸூஃபிஸம் என்ற போதை மருந்து
ஸூஃபித்துவக் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும்.
ஸூஃபித்துவம் என்பது பிளாட்டோவின் கருத்துக்களுடன் இந்து சமயத்தின் வேதாந்த சித்தாந்தங்கள் கலந்தது.
மேலும் ஸூஃபித்துவம், போதை தரும் விஷம் கலந்த மதுபானம்.
இக்கருத்துக்கள் குர்ஆனின் தெளிவான சட்ட திட்டங்களுக்கு முரண்பட்டது.
என்று பாடுகிறார் கவிஞர் அல்லாமா முஹம்மது இக்பால்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை எடுத்தோதுவதற்கு முன்னர் அரபு மண்ணில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலோர் எழுத்தறிவற்ற 'உம்மி' களாக இருந்தனர். மூதாதையர் நெறியிலையே வாழ்ந்தனர். மேலும் அரபு நாடு பாலை நிலமாக இருந்ததால் அம்மண்ணில் வாழ்ந்தவர்கள் நிரந்தரக் குடியிருப்பை உடையவர்களாக இருக்கவில்லை. அவ்வப்போது வெவ்வேறு ஊர்களுக்குப் போய்வரும் நாடோடிப் பிழைப்பை உடையவர்களாருந்தனர். வேற்று நாட்டவர் அதிகமாக அந்த மண்ணை விரும்பிப்போய் அங்கு நிரந்தரமாக வாழ்ந்ததில்லை.

இந்நிலையில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் வாழ்க்கைச் சட்டங்களை அம்மக்கள்முன் எடுத்து வைத்தபோது, அவர்கள் ஆரம்பக் காலத்தில் எதிர்த்த போதும் பின்னர் இஸ்லாத்தை முழுதுமாக ஏற்றுக்கொண்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலும் - அலீ (ரலி) அவர்களைத் தவிர்த்து - மூன்று குலஃபாயே ராஷிதீன்கள் காலத்திலும் மதீனாவே இஸ்லாத்தின் தலைநகராயிருந்தது. மட்டுமின்றி ஆட்சித் தலைமை யாரிடமிருந்ததோ அவர்களே சமயத்தலைமையும் உடையவர்களாயிருந்தனர்.

அவர்களது காலத்துக்குப் பிறகு உமைய்யாக்கள் காலத்தில் இஸ்லாமிய அரசின் தலைநகரமாக டமாஸ்கஸ்(சிரியா) திகழலாயிற்று. அதைத் தொடர்ந்த அப்பாஸிய கலீஃபாக்கள் காலத்தில் மெசபடோமியா, பாக்தாத் ஆகிய நகரங்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகர்களாக ஆயின. அந்தலூசியா(ஸ்பெயின்), குராஸான்(ஈரான்), பஸரா, கூஃபா(இராக்), இஸ்தன்புல்(துருக்கி) முதலிய பெரு நகரங்களிலும் இஸ்லாம் தழைத்தோங்கத் தொடங்கியது.

மக்கா-மதீனா எல்லைகளிலிருந்து பரவத்தொடங்கிய இஸ்லாம் இவ்வாறாக ஆசிய-ஆப்பிரிக்கக் கண்டங்களின் பல்வேறு நிலப்பரப்புக்களுக்கும் விரிந்து வியாபித்தது. பல்வேறு மண்ணின் மைந்தர்கள் இஸ்லாம் என்னும் கோட்டைக்குள் பிரவேசிக்கத் தொடங்கினர். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு அவர்களிடம் நிலவியிருந்த அந்தந்த நாட்டுச் சமயங்களின் தத்துவங்களிலிருந்து - மிகச் சிலரைத் தவிர - முழுதுமாக அவர்கள் விடுபட்டார்களில்லை.

அக்கால கட்டத்தில் மேலே கண்ட எல்லாப் பெரு நகரங்களிலும் அரிஸ்டாட்டில், பிளோட்டோ போன்றவர்களின் கிரேக்கத் தத்துவக்கல்வி ஓஹோ என்று கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஈரான் போன்ற நிலப்பரப்புக்களில் நிலவியிருந்த ஆரிய வேதாந்தக் கலாச்சாரத்தையும் இன்னமும் அங்கங்கே காணப்பட்ட புத்த-ஜொராஸ்டிர-யூத-கிறித்துவ- கலாச்சாரங்களையும் இஸ்லாம் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

இது ஒரு புறமிருக்க, உமைய்யாக்கள் காலத்திலும் அப்பாஸிகள் காலத்திலும் ஆட்சித்தலைமையை அனுபவித்தவர்கள் சமயத் தலைமைக்குரிய அருகதையுடையவர்களாகத் திகழ்ந்தார்களில்லை. விதிவிலக்குகளாக ஒரு சிலரே இந்த இரண்டு தலைமைப் பொறுப்புகளையும் ஒருங்கே பெற்றிருந்தனர்.

பெரும்பாலான ஆட்சியாளர்கள், ஆட்சித் தலைமையை மட்டும் ஏற்றுக் கொண்டு சமயத் தலைமையை முல்லாக்களிடம் ஒப்படைத்து விட்டனர். அதனால் இஸ்லாமியச் சமயத் தொடர்பிலிருந்து விடுபட்ட அந்த ஆட்சியாளர்கள் மனம் போன போக்கில் வாழத்தலைப்பட்டனர். கேளிக்கை, களியாட்டங்கள், சிற்றின்ப காம உணர்வைத் தூண்டும் கவிதைகள் முதலியவற்றில் அவர்கள் இலயிக்கத் தொடங்கினர். சில ஆட்சியாளர்கள், தாங்களே காமக் களியாட்டக் கவிதைகள் புனைபவர்களாகவும் திகழ்ந்தனர்.

இந்நிலையில், ஆட்சியாளர்களின் ஒழுக்கச் சீர்கேட்டையும் மக்களின் நிலைகுலைந்த வாழ்கையையும் கண்டு நொந்து போன முல்லாக்கள் சிலர் இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயத்தைத் தேடலானார்கள்.

கிரேக்க - ரோமானிய-ஆரிய-யூத-கிறித்தவ-கலாச்சாரங்களும் தத்துவங்களும் வேரோடிப் போயிருந்த பெருநகரங்களின் நாகரிகம் ஒரு புறம்; சமய ஒழுக்கங்களைப் பற்றிக் கவலைப்படாத இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை மறுபுறம்; இவற்றைச் சீர்திருத்த குர்ஆன் ஹதீஸை மட்டுமே முல்லாக்கள் கைக்கொண்டிருந்திருக்கலாம்.

மாறாக, இதற்கு அப்பாலும் சென்று கிரேக்கத் தத்துவங்களிலும் ஆரிய வேதாந்தங்கள் போன்றவற்றிலும் அடைக்கலம் தேடினார்கள். பிறமதச் சித்தாந்தங்கள் கூறும் கருத்துகள் குர்ஆன், ஹதீஸிலும் கூறப்பட்டிருப்பதாகச் சப்பைக்கட்டு கட்டினார்கள்.

ஒரு சில குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் தங்கள் கருத்துக்கிசைய அவர்கள் வளைத்துக் கொண்டார்கள். இதன் விளைவாகப் பிறந்த ஒரு புதிய வழிகேடுதான் ஸுஃபிஸம் ஆகும். அதாவது, கிரேக்கர்களின் கவைக்குவதவாத தத்துவங்களும் ஆரியர்களின் வெற்று வேதாந்தமும் திருச்சபை மடாலயங்கள் அளித்த நன்கொடைகளும் கலந்த ஒரு கலப்படச் சரக்காக-மிக்ஸராக- அமர்க்களமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு பழைய போதை மருந்தை, 'ஸுஃபிஸம்' என்னும் புதிய பாட்டிலில் இட்டு நிரப்பினார்கள். இந்த பாட்டிலின் மீது 'இஸ்லாமிய ஞானப்பாட்டை' என்னும் போலி லேபில் மிகச் சாதுரியமாக ஒட்டப்பட்டது.

ஸுஃபிஸத்தின் தேற்றத்துக்கு மற்றொரு காரணமும் இருத்தல் கூடும். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தின் ஆட்சித் தலைமையும் சமயத் தலைமையும் அலீ (ரலி) அவர்களுக்கும் அவர்களின் வழித்தோன்றலாருக்கும் மட்டுமே கிடைத்தல் வேண்டும் எனக் கூறிக் கொண்டு உதயமானது ஒரு கூட்டம். இக்கூட்டத்தினர் " ஷீஅத்து அலீ" என்னும் அலீயின் கட்சிக்காக உடல் பொருள் ஆவியைக் கொடுக்கச் சித்தமாயினர். இன்றும் ஷியாக்கள் நிறைந்து வாழும் நாடாகிய ஈரானிலிருந்து தான் ஸூஃபிஸம் ஊற்றெடுத்தது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

ஆட்சித் தலைமை உமையாக்களின் கைகளுக்குப் போனதும் சமையத் தலைமையையாவது தாங்களே தக்கவைத்துக் கொள்ளுவதற்கு ஷியாக்கள் சூழ்ச்சி செய்தனர். இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அலீ (ரலி) அவர்கள் பெயரால் பல புனைவுகளை இட்டுகட்டி, அவர்களுக்கு ஒப்புயர்வற்ற சிறப்பிடத்தை வழங்கத் தலைப்பட்டனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'பாத்தின்' ஆன -ரகசியமான அகமிய- விஷயங்களை அலீ (ரலி) அவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுத்தார்களாம்; அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வெளிரங்கமான இஸ்லாத்தைத்தான் அறிந்திருந்தார்களாம்; அலீ (ரலி) அவர்கள்தான் உள்ரங்கமான இஸ்லாத்துக்குச் சொந்தக்காரர்களாம்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இஸ்லாமியப் பட்டணத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமானால் அலீ (ரலி) அவர்களுடைய ஞானப்பாட்டையின் வழியாகத்தான் நுழைய முடியுமாம். இப்படியாகச் சொல்லிக் கொண்ட ஷியாக்கள் ஈரானிலிருந்து ஒரு ஞானப்பாட்டைத் தீட்டினார்கள். ஏற்கனவே ஸுஃபிஸச் 'சரக்கை'ப் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த ஞானப்பாட்டையில் உருளுவது பேரானந்தத்தைக் கொடுத்தது.

இந்த ஞான போதையைப் பெறுவதற்குக் கண்டிப்பாக 'பீர்' இருக்க வேண்டும். 'பீர்' என்னும் ஃபார்ஸிச் சொல்லுக்குக் குருநாதர் என்பது பொருளாகும். இவர்களை 'தர்வேஷ்' என்றும் அழைத்தனர். இந்த பீர் அல்லது தர்வேஷ் தங்கியிருந்த இடத்துக்கு ஒரு புனிதம் சேர்ந்தது, அது 'தக்யா' எனப்பட்டது. இந்த ஃபார்ஸிச் சொல் தமிழில் தைக்கா என மருவியது. ' தக்யா'வில் இருந்த 'தர்வேஷ்' தைக்கா சாயிபு எனப்பட்டார். இந்த தர்வேஷ் செத்துப்போன பிறகு அந்தத் தைக்கா 'தர்கா' ஆனது. இவ்வாறாக, ஸூஃபிஸம் தொடர்புடைய சொற்கள் எல்லாவற்றுலும் ஃபார்ஸி மொழியின் ஆதிக்கம்தான்.

செத்துப் போன ஸூஃபியின் தைக்காவில் கல்லைறகளைக் கட்டி, கப்ரு பூஜைகள் நடத்தும் தர்காக் கலாச்சாரத்தை இஸ்லாமிய உலகுக்கு அளித்த பெருமையும் ஸூஃபிஸத்தையே சேரும்.

பிறமதச் சித்தாந்தங்களின் தாக்கம், ஆட்சியாளர்களின் அலங்கோலம் ஆகியவை இந்த ஸூஃபிகளை வேறொரு பாதைக்கும் இட்டுச் சென்றன. அது துறவுப் பாதையாகும். ஸூஃபிஸம் வலியுறுத்தும் துறவு வாழ்க்கைக்கு, உண்மையான இஸ்லாத்தில் இடமே இல்லை. மோட்சம் பெறுவதற்கு சம்சாரத்திலிருந்து விடுபட்டு சன்னியாச வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தக் கருத்தாகும். இப்படி சன்னியாசி ஆனவர்களை, சம்சாரிகள் கடவுளுடைய இடத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். சன்னியாசிகளுடைய வாக்கை, வேதவாக்காகக் கருதி அதற்குக் கட்டுப் பட்டார்கள் அதைப் பார்த்த நம்முடைய ஆசாமிகளும் இஸ்லாத்தில் இதுபோல ஒரு சன்னியாச நெறியை ஸுஃபிஸத்தின் மூலம் அரங்கேற்றினார்கள்.

இந்த ஸுஃபிச் சன்னியாசிகள்- தர்வேஷ்கள் வழியாகத்தான் சொர்க்கத்துக்கு நுழைவுச் சீட்டுப் பெற முடியும் என்ற எண்ணத்தைப் பாமரர்களிடம் பரப்பி வைத்தார்கள். இவர்களுடைய வாக்கை வேத வாக்காகக் கொள்ளும் முஸ்லிம்களும் பெருகினார்கள்.

- தொடரும், இன்ஷா அல்லாஹ்

வெள்ளி, செப்டம்பர் 26, 2008

சாகாத கருப்பு யானை

முறம் போலென்றார் - இல்லை

முற்றிய வாழைத் தாரென்றார்

உரல் போலென்றார் - இல்லை, பாதி

உதிர்ந்த வாருகோலென்றார்


அண்ணலார் வழங்கிய உன்னதப் பதவியால்

வல்லானை வணங்க இந்நேரம் விடுக்கும்

"அல்லாஹு அக்பர்"அழைப்போசையின்

அடிநாதமாய் உயிர் வாழும் நான்,


சாட்சியாளர்களான ஆட்சியாளர்கள்

"சய்யிதுனா"என விளித்த

பிலால் என்ற கருப்பான முழுயானை.


ஃஃஃ
திண்ணையில் : http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=308092510&format=html

திங்கள், செப்டம்பர் 08, 2008

தினமலரைப் புறக்கணிப்போம்! (மீள் பதிவு)

மூக நல ஆர்வலர்களுக்கு அன்பான வேண்டுகோள்! இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்திய இறையாண்மைக்கும் பன்முக சகிப்புத்தன்மைக்கும் கேடு விளைவித்து, மக்கள் ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக மதசார்பற்ற நாட்டில் வர்ண ஆட்சியை அமைக்கும் சூழ்ச்சியோடு சங்கபரிவாரம் தேச விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு அரசு, அதிகாரம், காவல், இராணுவம், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் முதலான அனைத்து கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சங்கபரிவாரத்தினர் பலவகைகளிலும் உறுதுணை புரிந்து வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் மதவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்தி மக்களிடம் நிலவும் மனிதநேயத்தைச் சீர்குலைத்து வருகின்றனர். 

1995க்கு முன்பு வரை இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டும் மையம் கொண்டிருந்த இந்தப் பார்ப்பன மதவெறி செயல்பாடுகள் தற்பொழுது தென்னகத்திலும் குறிப்பாக தமிழகத்திலும் படுவேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளன. இதற்கான அடையாளமாக கோயம்புத்தூர் படுகொலைகள், தென்காசி குண்டுவெடிப்புகளைக் கூறலாம். இதற்காகச் சங்கபரிவாரத்தின் அறிவிக்கப்படாத தமிழக ஏஜண்டாக ஊடகத்துறையில் தினமலர் எனும் பார்ப்பன தினசரி ஈடுபட்டு வருகிறது.

எங்காவது ஒரு மூலையில் காவல்துறையால் அநியாயமாகப் பழி சுமத்தப்பட்டு ஒரு முஸ்லிம் கைது செய்யப்பட்டு விட்டால், ஊசி, நூல், வயர் துண்டு, சுத்தியல், ஆணி போன்ற 'அதி பயங்கர ஆயுதங்களின்' பட்டியலை முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து "இஸ்லாமிய தீவிரவாதி" என்ற பதத்தைத் தமிழக மக்களின் மனதில் ஆழப்பதிய வைத்தப் பெருமை தினமலருக்கு உண்டு. பிள்ளையார் ஊர்வலம் நடக்கும் வேளைகளில் சமூக விரோதிகளால் திட்டமிட்டுச் செய்யப்படும் கலவரங்களைக்கூட, காவல்துறையும் பதிவு செய்யாத "அருகிலுள்ள பள்ளிவாசலில் இருந்து கல் வீசப் பட்டதால் பதட்டம் ஏற்பட்டது" என திரித்து முஸ்லிம் சமுதாயத்தை மக்கள் மத்தியில் மோசமான சமுதாயமாகச் சித்தரிப்பதற்குத் தினமலரால் மட்டுமே இயலும்.

இவ்வாறு பல ஆண்டுகாலமாக தினமலர் நாளிதழ் செயல்பட்டு வந்தமையைச் சகித்துக் கொண்ட முஸ்லிம் சமுதாயத்தின் நெஞ்சில் சுடுகனலை வைப்பது போன்று, தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் இறைத்தூதரைக் கேலி செய்யும் விதமாக டென்மார்க் பத்திரிக்கை வெளியிட்டு உலகில் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்த கேலிச்சித்திரத்தைச் சம்பந்தமே இல்லாமல் தனது கணினிமலரில் வெளியிட்டுள்ளது. இது ஏதேச்சையாக நடந்த சம்பவம் என்று ஒதுக்கிவிட இயலாது.

உலக முஸ்லிம்களின் புனித மாதமாகிய ரமதான் மாதத் துவக்கத்தில் இந்த மதவெறி தாக்கதலை திட்டமிட்டே தினமலர் அரங்கேற்றியுள்ளது. எதையும் தாங்கும் முஸ்லிம்கள் தங்களின் இறைத்தூதர் இகழப்படுவதை மட்டும் ஒருபோதும் சகிக்க மாட்டார்கள். இதனை நன்றாக உணர்ந்தே இந்நாழிதழ் இத்தகைய கீழ்தரமான செயலில் ஈடுபட்டது. எதிர்ப்பு வந்தபொழுது தவறுதலாக நடந்தது எனக் கூறி தன் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டுமே முயல்கின்றது. அதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவோ இனி இதுபோன்ற செயல் தன்பக்கமிருந்து நடைபெறாது என்பதற்கு உத்தரவாதமோ அது கொடுக்கவில்லை. தவறுகூட ஒரு பிரசுரத்தில் நிகழ்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பிரசுரங்களில் அது பிரசுரிக்கப்பட்டது தவறுதலாக நடந்தச் சம்பவமாகப்படவில்லை. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், சுமூகமாக வாழும் சமூகத்தில் கலகம் விளைவித்து அதன் மூலம் இலாபம் பெற வேண்டும் என்ற சங்கபரிவாத்தின் செயல்திட்டத்தை வலுவான ஊடகம் மூலம் பரப்ப முனையும் தினமலர் பத்திரிக்கையை மேலும் தமிழகத்தில் வளரவிடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். 

செய்த தவறுக்கு நிர்வாகம் காரணமல்ல என்று கூறி வருத்தம் தெரிவித்து நழுவுவது தினமலரின் நிர்வாகச் சீர்கேட்டை பறைசாற்றுகிறது. தினமலரின் மதவெறி செயல்பாட்டை ஒழிக்க, மனித நேயத்தை வளர்க்க சமூக ஆர்வலர்களே முஸ்லிம் சமூகத்தின் இந்த எதிர்ப்புக் குரலுக்கு ஆதரவை அளியுங்கள். ஒன்றிணைந்து எதிர்ப்போம், மதவெறியை ஒழிப்போம், மனித நேயம் வளர்ப்போம்! 

செவ்வாய், ஜூலை 22, 2008

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 19

பூவுலகில் 'ஃபாத்திஹா வோதுங் காலை', வானுலகில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் பூமிக்கு வந்து, "வானவர்கள் எல்லாரையும் கூட்டி வைத்து, இன்றிரவு சுவனத்தை ஜோதி மயமாக அலங்காரம் செய்யுங்கள்; அத்துடன், வெற்றிமிகு வாளுக்குச் சொந்தக் காரரான அலீக்கும் செம்மைமிகு ஆபரணமணிந்த ஃபாத்திமாவுக்கும் திருஷ்டிச் சுற்றிப் போடுங்கள்" என்று இறைவன் கட்டளையிட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்களாம்:
இற்றையி னிரவிற் சோதி யிலங்கிய சுவன நாடு முற்றினுஞ் சிறப்பித் தன்பாய் முறை முறை வானோ ரியாரும் வெற்றிவா ளலிக்குஞ் செவ்வி விளங்கிழை தமக்குந் திட்டி சுற்றிவிட் டெறியு மென்னத் துய்யவ னுரைத்தான் மன்னோ (பாடல் 184).
திருஷ்டி சுற்றி எறிதல் என்பது இஸ்லாத்துக்கு முரணான செயலாகும். "அந்தச் செயலைச் செய்யுமாறு அல்லாஹ் சொல்லியிருந்தால் அது குர்ஆனிலோ ஹதீஸிலோ இடம் பெற்றிருக்க வேண்டுமே என்று யாரும் கேட்டு விடக் கூடாது. ஒலியுல்லாஹ் அவர்கள் அப்போது 'ஆலமுல் அர்வாஹ்' எனும் மேலுலகில் ஆஜராகி இருந்து அல்லாஹ் வானவர்களிடம் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என நல்லெண்ணம் கொள்ள வேண்டும்" என்பர் சில இலக்கியச் செவிடுகள்.

அல்லாஹ்வின் கட்டளையைக் கேட்டவுடன் வானவர்கள் என்ன செய்தனராம்?

சுவனத்திலுள்ள 'சிதுறத்துல் முன்தஹா' என்னும் இலந்தை மரத்தைச் சுற்றி இருளே இல்லாதவாறு ஒளிமயமாக அலங்கரித்தனராம். பின்னர் பெருமைக்குரிய அலீயின் பெயரையும் ஃபாத்திமாவின் பெயரையும் உச்சரித்துத் தங்களுடைய கரங்களினால் தீபமேற்றி, திருஷ்டியைச் சுற்றி விட்டெறிந்தார்களாம்:
மூதிருள் கடியுங் காந்தி சிதுறத்துல் முன்த ஹா வென் றோதிய தருவின் பாலி லுயரலி பெயரும் பாத்தி மாதிருப் பெயருங் கூறி வானவர் கரங்க ளாரச் சோதிநின் றெறியத் திட்டிச் சுற்றி நின் றெறிந்திட்டாரால் (பாடல் 128).
அல்லாஹ்வின் பெயரால் பொய் சொல்லக் கூடியவனைவிட அநியாயக்காரன் யார்? என்று இறைமறையில் அல்லாஹ் பலமுறை கேட்கிறானே! அந்த அநியாயக்காரர்களின் பட்டியலில் ஆலமுல் அர்வாஹில் ஆஜராகியிருந்த உமருப் புலவர் வருவாரா மாட்டாரா?

வானவர்கள் திருஷ்டி சுற்றி எறிந்த்தார்களல்லவா? அந்த திருஷ்டியின் சிதறல்களை வானுலகப் பெண்கள் பொறுக்கி எடுத்துப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்களாம். எதற்குத் தெரியுமா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொண்டு, அதன் காரணமாக மறுமையில் சுவனத்துக்கு வரவிருக்கும் ஆடவர்களுக்குத் தாங்கள் மனைவியராக வாய்க்கும்போது அந்த திருஷ்டிச் சிதறல்களை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்து மகிழ்வதற்காம் (பாடல் 190).

உமறுப் புலவரின் இந்த அருள்வாக்கை வேதவாக்காக ஏற்று மகிழும் சீறா நேசர்களுக்கோ மாறா மகிழ்ச்சிதான் போங்கள்!

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.