வெள்ளி, ஜூன் 23, 2006

பொருள் மயக்கம்

ஏக இறைவனான அல்லாஹ்வின் பல பெயர்களுள் ஒன்றுதான் 'வஹ்ஹாப்' எனும் பெயர். வஹ்ஹாப் என்ற அரபுச் சொல்லுக்கு நிகரற்ற பெருங் கொடையான் என்பது தமிழ்ப் பொருள். 'மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து ...' என்ற தலைப்பில் வெளியான எனது திண்ணைக் கடிதத்தின் [சுட்டி-1] மூன்று இறைவசனங்களின் மூலம் 'வஹ்ஹாப்' என்பவன் ஏக இறைவன்தான், மனிதர்களில் எவருமல்லர் என்று சான்றுகளின் அடிப்படையில் தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. 'நான் ஏன் வஹ்ஹாபி?' என்பதை எனது வலைப்பூவில் [சுட்டி-2] "வஹ்ஹாப்(நிகரற்றக் கொடையாளன்)ஐச் சார்ந்தவன் - வஹ்ஹாபி" என்று தெளிவாக அறிவித்து விட்டே எழுதத் தொடங்கினேன். "வஹ்ஹாப் என்றால் அல்லாஹ் என்று பொருள்" எனும் 'மொழியாக்க'த்தோடு நான் எங்கு-எப்போது மூன்று கால்களோடு நின்றேன் என்று 08.06.2006இல் திண்ணையில் எழுதிய ஹமீது ஜா.பர் [சுட்டி-3] சுட்டிக் காட்ட முடிந்தால் அவருடைய எழுத்து நேர்மையைப் பாராட்டலாம். குலாம் ரஸூல் எப்படி ரஸூல் ஆக முடியாதோ அதேபோல் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாபோ, அவருடைய தந்தை அப்துல் வஹ்ஹாபோ, பண்டாரி (அப்துல்)வஹ்ஹாபோ அந்த நிகரற்ற ஒரேயொரு பெருங் கொடையாளனான வஹ்ஹாப் ஆக முடியவே முடியாது. எனவே, மேலும் மயங்க வேண்டாம்; மயக்க நினைக்கவும் வேண்டாம். 'திண்ணை வாசகர்கள் எல்லாம் மாங்கா மடையன்கள்' என்று ஹமீது ஜ.பர் [சுட்டி-4] சொன்னதுபோல் நான் ஒருபோதும் நினைக்க மாட்டேன். ஸலாமைப் பொருத்தவரை சாந்தி,சமாதானம் எல்லாம் சரிதான். ஆனால், 'அஸ்லம' ( أَسْـلـَمَ சரணடைந்தான்) என்ற கடந்தகால வினையிலிருந்து பெறப் படும் சொல்லே இஸ்லாம் ஆகும். சான்று:
"... (எனக்கு முற்றிலும் வழிப்பட்டவராகச்) சரணடையும் என்று (இபுராஹீமிடம் அவருடைய இறைவன்) கட்டளையிட்டபோது அவர், அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோனாக, இதோ, சரணடைந்து விட்டேன் என்று கூறினார்" [002:131]
என்று தன் அருள் மறையில் வஹ்ஹாபு கூறுகிறான். இப்போது ஹமீது ஜா.பரின் ஊர்க்காரரான 'பண்டாரி வகாபோ', குலாம் ரஸூல் அடிக்கடி காட்டும் 'பூச்சாண்டி வகாபோ' வாசகர்களின் நினைவுக்கு வரார் என்று நம்புகிறேன்.
நல்லவேளை, சாமீ (சீன்+அலி· ப்+மீம்+யே) என்ற அரபு வார்த்தைக்கு உயர்ந்தவன் என்று பொருள். இதுவும் இறைவனின் திருநாமங்களில் ஒன்று. அதனால் சாமீ என்றால் இறைவன் எனவே சாமீ என்று சொல்வதில் தவறில்லை என்று ·பத்வா கொடுக்காமலிருந்தார் நம் வஹாபி
என்பவை ஹமீது ஜா.பரின் அருஞ்சொல் அகராதிப் பக்கத்திலுள்ளவை. இந்தச் சாமீ எங்கிருந்து பெறப் பட்டது என்று அவர் குறிப்பிட்டால் நன்றியுடையவனாவேன்.
என்றாலும், அஸ்-ஸாமிஃ (السامع = செவியுறுபவன்) என்று அல்லாஹ்வைச் சிலவேளை நான் அழைப்பதுண்டு - மிக்குயர்ந்த டிக்'ஷனரியின். சான்றின் அடிப்படையில்:
"(நபியே,) கூறுவீராக! நீங்கள் (அவனை) அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(இன்னும் பல) அழகிய பெயர்கள் [சுட்டி-5] உள ... " [017:110].
இன்னும் மயக்கம் தெளியவில்லையெனில் ... மீண்டும் திறக்கலாம், மிக்குயர்ந்த டிக்'ஷனரியை.
ஃஃஃ
சுட்டிகள்: 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606024&format=html 2: http://wahhabipage.blogspot.com/2006/01/blog-post.html 3: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606092&format=html 4: http://www.thinnai.com/?module=displaystory&story_id=80605263&format=html 5: http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=3851&doc=5

வியாழன், ஜூன் 22, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - 1

எது இஸ்லாமிய இலக்கியம்?

அல்லாஹ்விடமிருந்து பெற்ற அருள் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தம் சொல், செயல், அனுமதி மூலம் கற்றுத் தந்தவைகளே இஸ்லாமிய மார்க்கமாகும்.

இந்த 'தீனுல் இஸ்லாம்' என்னும் வழ்க்கை நெறிக்கான அனைத்துக் கோட்பாடுகளும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயே நிறைவு செய்யப்பட்டு அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இத்தகைய இஸ்லாமிய நெறி, இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் மெல்லப் பரவத் தலைப்பட்டது.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அக்காலத் தமிழர்கள், இலக்கியங்கள் மூலமாகவும் இஸ்லாமியக் கருத்துகளை வெளியிடலாயினர்.  

இலக்கியம் என்றால் என்ன? 

இலக்கியம் என்பதற்குப் பலரும் பலவாறாக விளக்கமளித்துள்ளனர். பல்வேறு வரைவிலக்கணங்களையும் ஒருங்கிணைத்து மிகச் சுருக்கமாகக் குறிப்பதாயின், "சொல்லின் அழகைப் புலப்படுத்தி, வாழ்க்கைக்குரிய உண்மை இலக்கினை இயம்புவது இலக்கியம்" எனலாம். கல்லின் அழகை வெளிப்படுத்தி ஒன்றை வடித்தெடுப்பதைச் சிற்பக் கலை என்று வழங்குவதுபோல், சொல்லின் அழகை வெளிப்படுத்தி வாழ்க்கை இலட்சியத்தைச் சுட்டுவது இலக்கியக் கலையாகும்.

உலகெங்கிலுமுள்ள எழுத்து வடிவமுடைய மொழிகள் அனைத்தும் ஏராளமான இலக்கியங்களைப் பெற்றுத் திகழ்கின்றன. அதற்கேற்ப, தொண்மையும் செம்மையும் உடைய நம் தமிழ் மொழியிலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பல்வகைப்பட்ட இலக்கியங்கள் தோன்றியுள்ளன. ஐரோப்பியத் தொழில் புரட்சியின் விளைவாக அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர்தான் உரைநடை வடிவம் புகழ் பெறலாயிற்று. அதுவரை இலக்கிய உலகில் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும் செய்யுள் வடிவம்தான் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. எனவே, கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன.

இலக்கியம் என்று சொன்ன மாத்திரத்தில், அது செய்யுள் அல்லது கவிதையைத்தான் குறிக்கிறது என்று எண்ணுமளவுக்கு இப்போக்கு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தது. வாழ்க்கை உண்மைகளை அழகுபடப் பாடிய இலக்கியங்கள் தமிழில் பல உள்ளன. அதேவேளையில் அழகுபடக் கூறவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக உண்மையைப் பலிபீடத்திற்கு அனுப்பி விட்டு, அழகையே ஆராதித்துக் கொண்டிருந்த இலக்கியங்களும் இங்கு ஏராளம் காணப்படுகின்றன.

உண்மைக்கு முரணான பொய்யும் புனைசுருட்டும் கற்பனையும் செவிவழிச் செய்திகளும் கண், காது, மூக்கு வைத்துப் புனையப்பட்ட கதைகளும் 'அழகியல்' என்னும் பெயர்தாங்கி இலக்கியத்தின் பாடுபொருளாகப் பவனி வரலாயின. உண்மையை இயம்ப வேண்டும் என்ற தலையாய இலக்கியப் பண்பு பின்னுக்குத் தள்ளப்பட்டது. பொய்யாயிருப்பினும் கவர்ச்சியோடு கூறினால் அது போதும், இலக்கியமாகிவிடும் என்னும் எண்ணம் படைப்பவனிடமும் படிப்பவனிடமும் பரவி ஊன்றலாயிற்று.

அல்குர்ஆன் அருளப்பட்டக் காலத்திலும் இந்நிலைதான் உலக இலக்கியங்கள் அனைத்திலும் மேலோங்கி இருந்தது. எனவே, இறைவன் 'இலக்கியப் படைப்பாளிகள்' என்னும் பொருள்படும் தலைப்பிலேயே ஓர் அத்தியாயத்தை வழங்கி வழிகாட்டிக் கொடுத்தான். அக்காலத்தின் இலக்கியம் என்பதே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை முன்னர் கண்டோம். எனவே, கவிதை அல்லது செய்யுள் வடிவில் இலக்கியம் படைப்பவர்கள் 'கவிஞர்கள்' என அழைக்கப்பட்டனர். இலக்கியப் படைப்பாளிகள் என்னும் பொருள் தரக்கூடிய 'கவிஞர்கள்' என்ற தலைப்பில் அமைந்த அல்குர் ஆனின் 26ஆவது அத்தியாயம், இலக்கியம் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது:
"ஷைத்தான்கள் யார் மீது இறங்குகிறார்கள் என்பதை (நபியே) உமக்கு அறிவிக்கட்டுமா?" "இட்டுக் கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும்" "ஒட்டுக் கேட்கும் அவர்கள் பெரும்பாலும் பொய்யர்களே!" "மேலும் கவிஞர்களை வழிகேடர்தாம் பின்பற்றுவர்." "நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலாகத் தட்டழிந்து திரிவதை நீர் பார்க்கவில்லயா?" "நிச்சயமாக அவர்கள் செய்யாதவற்றைச் செய்ததாகக் கூறுகின்றனர்" "(அவர்களுள்) நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (கவிப்)பழி தீர்த்துக் கொண்டோரைத் தவிர (மற்றோர் குற்றவாளிகளே!) தாங்கள் செல்லுமிடம் எதுவென அநீதி இழைத்தவர்கள் அதிவிரைவில் அறிந்து கொள்வார்கள். -அல்குர்ஆன் 026:221-227.
இஸ்லாம் இலக்கியங்களை ஏற்றுக் கொள்கிறது; வரவேற்கிறது. உண்மையை-யதார்த்தத்தை அழகுறப்பாடி, வாழ்க்கை இலட்சியத்தை எடுத்தியம்பும் இலக்கியங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. மாறாக, உண்மையை மொட்டையடித்துவிட்டு, அதன் தலையில் பொய்மை அல்லது அளவுக்கு மீறிய கற்பனை என்னும் சவுரிமுடியை வைத்து, பொய்க் கற்பனைச் செய்திகளையே அதிகமாக நீட்டிப்பின்னிடும் நச்சிலக்கியங்களை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. இப்படிப்பட்ட நச்சுக் கவிஞர்களை - பொய்யர்களை - அல்குர்ஆன், 'ஷைத்தான்கள்' என்றே அடையாளம் காட்டுகின்றது. 

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

ஞாயிறு, ஜூன் 04, 2006

நன்றி, இபுனு பஷீர் - 2

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது: 



1. "இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும்." என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு சொன்ன ஹெச்.ஜி. ரசூல் சென்ற வாரம், " திருகுரான் பிரதி கூறும் வகாப் என்ற சொல் அல்லாவைக் குறிப்பதாகும்.திண்ணையில் கடந்த சில மாதங்களாக விவாதிக்கப்பட்டு வரும் வகாப் என்ற பெயர் வகாபிச தோற்றமூலவரான முகமது இப்னு அப்துல் வகாபை குறிப்பதாகும். இரண்டும் வேறு வேறானதாகும் ." என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.  

இதையேதான் நான் எனது முந்திய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். வஹ்ஹாப் ஆகிய அல்லாஹ்வும் அப்துல் வஹ்ஹாப் என்ற பெயர் கொண்ட மனிதரும் வேறு வேறு என்பது தெளிவாக தெரியும் நிலையில், உருவகப்படுத்தலும், வரலாற்று மோசடியும் எங்கிருந்து வந்தது? எழுத்தாளர் வஹ்ஹாபி, அப்துல் வஹ்ஹாபை அல்லாஹ்வாக உருவகப்படுத்தி யிருந்தார் என்றால் அதை ஹெச்.ஜி.ரசூல் சுட்டிக் காட்ட முடியுமா? 

2. "அல்லாவின் வேதம் அல்குரான். இமாம் வகாபின் வேதத்தின் பெயர் கிதாப் அல் தவ்கீத்.இதன் வழி நடப்பதே வகாபிசம். இது கஷ்புஷ் ஷீபுஹாத்,முக்தஸ்ருல் இஸ்லாம்,நஸீகத்துல் முஸ்லிமீன்,உள்ளிட்ட நூல்களின் சாரத்தையும் கொண்டதாகும்." என்பது ஹெச்.ஜி.ரசூலின் கூற்று. நான் தெளிவு படுத்திக் கொள்வதற்காக கேட்கிறேன், அல்-குர்ஆனின் கொள்கைகளிலிருந்து இமாம் அப்துல் வஹ்ஹாபின் கிதாப் அல் தவ்ஹீத் எவ்வாறு வேறுபடுகிறது? ஹெச்.ஜி.ரசூல் விளக்குவாரா? 

-நன்றி: திண்ணை 

இனி, ‘திண்ணை’யில் வராத கடைசிப் பகுதி! 
3. திண்ணையில் வந்த கடிதம் ஒன்றை படித்ததன் விளைவாக எனக்கு தோன்றிய ஒரு சிறு கவிதை! 
ஆடுகள் முட்டிக் கொள்கின்றன,  
சில தூண்டி விடப்பட்டு.. 
சில தூண்டிலில் இடப்பட்டு.. 
நரிகளும் ஓநாய்களும் கூட்டணி அமைத்து காத்திருக்கின்றன, 
நாக்குகளை தொங்கப் போட்டுக் கொண்டு! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/06/02/hgrasool2/

சனி, ஜூன் 03, 2006

நன்றி, இபுனு பஷீர் - 1

சகோதரர் இபுனு பஷீர் அவர்களின் அனுமதி பெற்று, அவருடைய கடிதம் நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப் படுகிறது:

திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவர் ‘அல்லாவும் வகாபும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். (முன் குறிப்பு: ஹெச்.ஜி.ரசூல் வஹாபிசம் பற்றி முன்பு திண்ணையில் எழுதிய ஒரு கட்டுரைக்கு ‘வஹ்ஹாபி’ என்ற பெயரிலேயே ஒருவர் பதில் / விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து விவாதம் தொடங்கியது.) ரசூல் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
‘இஸ்லாத்தை வகாபிசமாகவும், வகாபை அல்லாவாகவும் உருவகப்படுத்தி எழுதும் திண்ணை எழுத்தாளர் வகாபியின் குரல் அப்பட்டமான ஒரு வரலாற்று மோசடியாகும். வகாபிகளின் தலைவரென முகமது நபியைச் சொல்வதும், வகாபுடைய கருத்துக்களே அல்குர்ஆன் என்று கூறுவதும் வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு தந்திர உத்தியாகும். தொடர்ந்து கருத்தியல் மோசடி நிகழ்த்தும் அவர் முதலில் இதை நிறுத்திக் கொண்டால் நல்லது. இல்லையெனில் வகாபிய மொழியில் இது மாபெரும் ஷிர்க். (இணை வைத்தல்) ஆகும். இணைவைப்பவர்களுக்கு மறுமையில் கொழுந்துவிட்டெரியும் பாழ்நரகம் தான் கதி.’ 
இஸ்லாத்தை வஹ்ஹாபிசமாகவும் வஹ்ஹாபை அல்லாஹ்வாகவும் உருவகப்படுத்துவது தவறா? இல்லவே இல்லை! குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைவனின் பெயர்களுள் ஒன்றே வஹ்ஹாப் என்பது! அத்தியாயம் 3 வசனம் 8 "இன்னக அன்தல் வஹ்ஹாப்" என இறைவனை குறிப்பிடுகிறது. இதன் பொருள் ‘நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!’ என்பதாகும். மேலும் இறைவசனம் 17:110 இவ்வாறு கூறுகிறது: "நீங்கள் (இறைவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன" குர்ஆனிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பெயரைக் கொண்டு இறைவனை அழைப்பது எப்படி மோசடியாகும் என்பதை ஹெச்.ஜி.ரசூல் தான் விளக்க வேண்டும். 

ஹெச்.ஜி.ரசூல் மேலும் சொல்கிறார், ‘அல்லாவும், வகாபும் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதை இனி கவனிப்போம். அல்லாவிற்கு பிறப்பு கிடையாது. வாப்பா, உம்மா கிடையாது. வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்.' 

இதைத் தொடர்ந்து, வஹ்ஹாபிசத்தை தோற்றுவித்தவர் என இவர்களால் ‘குற்றம் சுமத்தப்படும்’ முகம்மது இப்ன் அப்துல் வகாப் என்ற மனிதரைப் பற்றி தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் ரசூல். 

இங்குதான் அவரது அசட்டு வாதம் வெளிப்படுகிறது. இறைவனின் பெயர்களுள் ஒன்று வஹ்ஹாப் (பெரும் கொடையாளி) என்பதை முன்பு பார்த்தோம்.அப்துல் வஹ்ஹாப் என்பது மனிதர்கள் வைத்துக் கொள்ளும் பெயர். இதற்கு ‘வஹ்ஹாபின் அடிமை’ என்பது பொருள். ரசூல் குறிப்பிடும் மனிதரின் பெயரும் அப்துல் வஹ்ஹாப் தான்! இறைவனின் பெயர்களோடு ‘அப்துல்’ என சேர்த்து ‘இறைவனின் அடிமை’ என பொருள் வரும்படியாக பெயர் வைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ள பழக்கமே. அப்துல்லா, அப்துர் ரஹ்மான் என இதற்கு பல உதாரணங்களை தரலாம். இது எப்படி ‘ஷிர்க்’ இணைவைத்தலாகும் என்பதையும் ஹெச்.ஜி.ரசூல்தான் விளக்க வேண்டும். 

இவர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பக்கம் தப்பித்தவறிகூட போகாமல் இருப்பது நல்லது. அங்கு ‘Chief Minister’ என்றும் ‘PA to Chief Minister’ என்றும் இரு பெயர்ப்பலகைகளை பார்த்தார் என்றால், ‘முதலமைச்சருக்கு கீழே பணிபுரியும் நீ எப்படி Chief Minister என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்?’ என்று அந்த PA மீது பாய்ந்தாலும் பாய்ந்து விடுவார்! 

பின்குறிப்பு: "இன்றைக்கு தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் சிறந்த சிந்தனையாளர்களுள் ரசூல் முதன்மையானவர் எனலாம்." - நேசகுமார். நல்ல ஜோக்! 

நன்றி - http://ibnubasheer.blogsome.com/2006/05/17/hgrasool/

வெள்ளி, ஜூன் 02, 2006

மிக்குயர்ந்த டிக்'ஷனரியிலிருந்து ...

கடந்த வாரத் திண்ணை (25.05.2006) இதழில் 'அறிவு ஜீவிகள் .........?!' என்ற தலைப்பில் ஒரு ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. அதில்,
"இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல் வெறும் ஏட்டறிவை அதையும் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் தனக்குத் தோன்றியபடி விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்"
என்று கடிதம் எழுதிய ஹமீது ஜா· பர் என்பார் யாரைப் பற்றியோ குறைப் பட்டுக் கொண்டிருக்கிறார். 'இஸ்லாம் என்றால் என்ன பொருள்?' என்பதை அவராவது சொல்லித் தந்திருந்தால் அவரது கடிதம் முழுமை பெற்றிருக்கும். போகட்டும்.
"எந்த டிக்ஷனரியில் இருக்கிறது வஹ்ஹாப் என்றால் இறைவன்/அல்லாஹ் என்று?"
என்ற கேள்வியை அவர் திண்ணையில் முன்வைத்திருக்கிறார். 'சொன்னால் பிழையாகும்' என்ற அய்யப்பாடோ 'சுருட்டி மறைக்க' வேண்டிய கட்டாயமோ எனக்கில்லாததால் அவருடைய கேள்விக்கு பதில் - மிக்குயர்ந்த டிக்'ஷனரியான அல்குர்ஆனிலிருந்து:
'வ-ஹ-ப' என்ற வேரடி வினையிலிருந்து பிறந்த சொல் 'வஹ்ஹாப்' என்பதாம். பார்க்க: 003:008, 006:0084, 014:038, 019:049, 019:050, 021:072, 021:090, 026:021, 029:027, 038:30, 038:043.
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியை அறிவித்ததன் பின்னர், எங்களுடைய உள்ளங்கள் தடம் புரண்டு விடுமாறுச் செய்து விடாதே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்]" 003:008.
"அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியான உங்கள் இறைவனின் [ரப்பிக்கல் அஸீஸில் வஹ்ஹாப்] அருட் கிடங்கு அவர்களிடம்தான் இருக்கின்றதா?" 038:009.
"என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி [இன்னக்க அன்த்தல் வஹ்ஹாப்] என்று (ஸுலைமான்) பிரார்த்தனை செய்தார்." 038:35.
[...] குறிகளுக்குள் உள்ளவை அரபுமொழி உச்சரிப்பாகும். இங்கு 'வஹ்ஹாப்' என்பவன் யார் என்று சான்றுகளின் அடிப்படையில் மெய்ப்பிக்கப் பட்டு விட்டது.
இனி, 'தெரியவில்லை'களில் பட்டியலிடப்பட வேண்டிய பெயர் எதுவென முடிவு செய்ய வேண்டியது திண்ணை வாசகர்களின் பொறுப்பு.
***
அடுத்து, ஓட்டைப் பானை எதுவெனெ இனங் கண்டு கொள்ளக் கூடிய இன்னொரு கூடுதல் பொறுப்பையும் திண்ணை வாசகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"சமாதிகள் தரைமட்டமாக்கப் படவேண்டும்" என்ற தன் தலைவரின் கட்டளைக்கானத் தாரகைச் சான்றுகளைத் திண்ணையில் வைத்து, எல்லாப் பானைகளிலும் ஒருவர் நீர் வார்க்கிறார் - ஓட்டைப் பானை உட்பட.

முக்கால்வாசி கருகிப் போன பின்னரும் தம் சமாதிக் காதலைக் கைவிட முடியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார் இன்னொருவர்.

தானாகப் புலம்பிக் கொண்டிருக்கட்டும்; ஆனால், புலம்பலுக்கு ஏன் " நபி முகமது முன் வைத்த அறவியல் கொள்கைகள்" என்ற பொய்ப் பெயர்?

சிறியதென்று எண்ணி ஏமாறிப் போனேன். பானையின் ஓட்டை இவ்வளவு பெரிதா?
ஃஃஃ

வியாழன், மே 18, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - முன்னுரை (சுருக்கம்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்! அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! மனித குலம் இம்மண்ணில் நல்லவண்ணம் வாழவேண்டும் என்பதற்காக, மனிதனைப் படைத்த இறைவன் வழங்கிய வாழ்வியல் நெறியே அல்குர்ஆன் ஆகும். இந்த வாழ்வியல் நெறிக்கேற்ப எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துப் பெருவாழ்வு வாழ்ந்து சென்றவர் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களாவர். இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் அல்குர்ஆன் என்னும் இறைமறையும் ஹதீஸ் என்னும் நபி நெறியுமேயாம். இலக்கியம் உள்ளிட்ட மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் அழகிய வழிகாட்டுதல்களை இஸ்லாம் வழங்கியுள்ளது. இலக்கியத் தளத்தில் நின்று தூய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை மேலோங்கச் செய்கின்ற நூல்கள் உலகெங்கும் தோன்றியுள்ளன. தமிழ் மண்ணில் இஸ்லாம் பரவிய ஆரம்பக் காலகட்டங்களில் 'இஸ்லாமியக் கொள்கைகளை எடுத்தியம்புவதற்காக' எனச் சொல்லிக் கொண்டு, தமிழ் இலக்கியங்கள் பல புனையப் பட்டன. இஸ்லாமியப் பழந்தமிழ் இலக்கியம் எனச் சொன்ன மாத்திரத்தில், உமறுப் புலவரின் சீறாப்புராணமும் குணங்குடி மஸ்தானின் ஞானப்பாடல்களும் உடனடியாக நினைக்கத் தக்க அளவுக்கு முதலிடம் வகிக்கின்றன. தக்கலை பீர்முஹம்மது ஸாஹிபு, கோட்டாறு ஞானியார் ஸாஹிபு போன்ற ஸூஃபிப் புலவர்களின் பாடல்கள் அந்தந்த வட்டாரங்களில் சிறப்பாகப் போற்றிப் பயிலப் படுகின்றன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் என அறியப் படுகின்ற இந்த நூல்கள், இஸ்லாம் காட்டுகின்ற இலக்கிய நெறிப்படி அமைந்திருக்கின்றனவா? இஸ்லாமியக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இந்த இலக்கியங்கள் எந்த அளவுக்கு மேம்படுத்திப் பாடியுள்ளன? திருமறை-நபிநெறி வெளிச்சத்துடன் இந்த இலக்கியக் கழனியில் 'இறங்கி'ப் பார்க்கிற போது, பயிர்கள் அளவுக்குக் களைகளும் மலிந்துள்ளமையைக் காண முடிகின்றது. இன்னும் சொல்லப் போனால் பயிர்களை விடக் களைகளே மிகுதி எனலாம். இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காப்பிய மரபும் சைவசித்தாந்த மரபுகளுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றுக்கு இஸ்லாமியச் சாயம் பூசும் முயற்சியிலேயே முஸ்லிம் புலவர்கள் சிரத்தை எடுத்துள்ளனர். உமறுப் புலவரின் விபரீதக் கற்பனையில் இஸ்லாமிய மாண்புகள் மலினப் படுத்தப் பட்டுள்ளன. ஓரிறைக் கொள்கையைக் கொச்சைப் படுத்துகின்ற அத்துவைதச் சீழ்வடியும் கவிதைகளைப் பாடிப்பாடி, ஞானக் கவிஞர்கள் இலக்கியத் தாகம் தணித்துள்ளனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் குணம் நாடி, அவற்றைப் பாராட்டுகின்ற வகையில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் குணத்தைக் காட்டிலும் மலிந்து காணப் படும் குற்றங்களைப் பேசுகின்ற முழுநூல் எதுவும் இதுவரை வெளிவந்ததில்லை. முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் மீது முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் கொண்டிருக்கும் பாசத்திரையானது, உண்மையைப் புலனாய்ந்திடும் முயற்சிக்குத் தடை போட்டிருக்கலாம்!.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத்திருங்கள். உங்களுக்கோ (உங்களின்) பெற்றோருக்கோ (உங்களின்) நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்காளாக இருங்கள் ..."
என இறைமறை குர்ஆன் [004:135] எடுத்துரைத்துள்ளது.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எனப் பெயர் பண்ணிக் கொண்டு, தூய இஸ்லாத்திற்கு அநீதி இழைத்துள்ளன பல இலக்கியங்கள். இவற்றைப் பாடியோர் நமது புலவர் பெருமக்களாகிய 'அப்பா'மார்களாக இருக்கலாம். இந்த இலக்கிய அநீதியை எடுத்துரைப்பது, அந்தப் புலவர் பெருமக்களுக்கு விரோதமிழைப்பது போலிருந்தாலும் கூட, அல்லாஹ்வுக்காக நாம் உண்மை சாட்சியுரைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை முன்னிருத்தியே 'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்னும் இந்நூல் எழுதப் பட்டுள்ளது.

இஸ்லாத்துக்கு விரோதமாகப் "பொய்யையும் புனைசுருட்டையும் பாடுகின்ற கவிஞர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர்" என இறைமறை குர்ஆன் எச்சரிக்கிறது.

இஸ்லாத்துக்கு அநீதி இழைத்து இலக்கியம் பாடிவந்த ஒரு கவிஞனை 'ஷைத்தான்' என்றும் அவனது கவிதையை 'நாற்றமெடுத்த சீழ்' என்றும் நபி (ஸல்) அவர்கள், கடுமையான சொற்களால் வைதுள்ளனர்.

அப்பழுக்கற்ற இஸ்லாமியத் தடாகத்தில் அப்பாமார்களின் பாடல்கள் நஞ்சைக் கலந்துள்ளன. இதைக் காணும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நெஞ்சம் கொதிப்பது இயல்பே! அந்த நெஞ்சக் கொதிப்பு, இந்நூலில் சில இடங்களில் வெம்மையான சொற்களில் வெளிப் பட்டிருக்கலாம். அதுவுங்கூட நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றியதே என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வார்களாக!

இம்முயற்சியில் எம்மை ஈடுபடச் செய்த எல்லாம் வல்ல இறைவனுக்குச் சிரம் பணிந்து நன்றி பாராட்டுகிறேன்.

- ஹஸ்ஸான்

யாருக்குச் சொந்தம்?

சென்ற வாரத் திண்ணை [11.05.2006] இதழில் வெளியான மூன்று கடிதங்களுக்கு இங்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். முதலாவதாக,
"ஏகப்பட்ட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய சமய வழக்கிலுள்ள சொற்களைப் போட்டு விளக்கங்கள், அல்லது இஸ்லாமிய உட்பிரிவுகள் பற்றிய சண்டைகள் - ஒரு தமிழ் வாசகனுக்கு இதனால் என்ன பயன்?? ஒவ்வொரு திண்ணை இதழிலும் இந்த இஸ்லாமியக் கருத்துத் தீவிரவாதத்திற்கு ஏன் இடமளிக்க வேண்டும்?"
என்று ஒரு கண்டனக் குரல். வேற்றுமொழிப் பெயர்ச் சொற்களை அப்படியே குறிப்பதால் திண்ணையில் தீவிரவாதம் எப்படி ஏற்படும் என்று எனக்கு விளங்கவே இல்லை. தாய்மொழிப் பற்று ஒவ்வொரு தமிழனுக்கும் தேவையே. அதற்காக, 'மிஸ்ஸிஸ்ஸிப்பி' என்ற ஊரின் பெயர்ச் சொல்லை "சிப்பி என்பவள் செல்வி" என்று தமிழில் எழுதினாலோ 'மிடில்ஸெக்ஸ்'ஐ "நடு இனம்" என்றோ வேறு ஏதாவது தமிழ்ச் சொல்லால் எழுதினாலோ நன்றாகவா இருக்கும்? திண்ணையில் 'கடித இலக்கியம்' எழுதுபவரின் பெயரை, 'அவைத் தலைவர்' என்று நாம் தமிழில் எழுதுவது சபாநாயகம் அவர்களுக்குப் பெருமை சேர்க்குமா? அதுவும், 'மஹாத்மா'வைக் குறித்து 'பரமாத்மா'வின் 'ஜீவாத்மா'க்கள் திண்ணையில் சொல்லாடிக் கொண்டிருக்கும் 'தமிழ்ச் சூழ'லில் 'பாவாத்மா'க்களைக் குறை சொல்வதற்கு, 'ஜடாயு'வின் 'அந்தராத்மா'வுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ!.
***
இரண்டாவதாக,
"தமிழில் தொழுகை நடத்துவதற்கு வகாபி மறுப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஒருவேளை இப்படியான திருக்குர்ஆனிய சில வசனங்களை எப்படி வெளியே எல்லோருக்கும் தெரியும்படி சொல்வது என்ற தயக்கமாக இருப்பின் அல்லாவின் வார்த்தைகள் தான் அவை என்ற வகையில் அந்த தயக்கத்தை விட்டொழிக்க முயல வேண்டும் இவ்வசனங்கள் சொல்லப்பட்ட சூழலையும் கருத்திற்கொள்ள வேண்டும். என்பதே எனது வேண்டுகோள்"
என்று சூபி எனக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். குர்ஆன் பிரதிகளை யாராவது பதுக்கி வைத்துக் கொண்டு அஞ்சியஞ்சி விற்கிறார்களா என்ன? இத்தனை விரைவில் காலம்தான் எப்படி மாறிப் போய்விட்டது பாருங்கள்! சூபிகளே குர்ஆனுடைய 'சில' வசனங்களை எடுத்தெழுதுவது மகிழ்வுக்குரிய மாற்றம்தான்! - நோக்கம் எதுவாக இருப்பினும். அஃதென்ன 'சில வசனங்கள்'? அனைத்து வசனங்களையும் உள்ளடக்கிய குர்ஆன் பதிப்புகள், தமிழ் உட்பட உலகின் எல்லா மொழிகளிலும் மூலைக்கு மூலை கிடைக்கிறதே! காசு கொடுத்து வாங்கிப் படிக்க இயலாதவர்களுக்கு இப்போது வலைத் தளங்களிலும் குர்ஆன் 'வெளியே தெரியும்படி' திறந்துதான் கிடக்கிறது! திறந்து கிடந்ததைப் படித்துத்தான் கேட் ஸ்டீவன்ஸ், யூஸுஃப் இஸ்லாமாக மாறிதாகக் கூறுகிறார்:
Following a bout of TB early in his career he undertook an ongoing search for peace and ultimate spiritual truth. After almost drowning in the Pacific Ocean at Malibu he received a translation of the Qur'an as a gift from his elder brother, David. His spiritual quest for answers was fulfilled and he embraced Islam in December, 1977. Six months later he changed his name to Yusuf Islam, walked away from the music business to start a new life and raise a family.
முழுச் செய்தியையும் இங்குப் படிக்கலாம்: http://www.yusufislam.org.uk/biodata.htm உள்ளேயே பூட்டி வைக்காமல், எல்லாருக்கும் வெளியே தெரியும்படி உள்ள குர்ஆனினால் ஈர்க்கப் பட்டோரின் பட்டியல் வெகு நீளம் என்பதும் அதில் குலசையைச் சேர்ந்த தமிழ் வலைப் பதிவர் http://iniyaislam.blogspot.com/ ஒருவரும் அடக்கம் என்பதும் சூபிக்குத் தெரியாமலிருக்க வாய்ப்புண்டு. கனவுலக முகமூடியைக் கழட்டி விட்டு, நனவுலகிற்கு சூபி வரவேண்டும் என்பதே என் அவா.
***
இறுதியாக, 'அல்லாவும் வகாபும்' என்ற தலைப்பில் ஒரு கடிதம். அதிலுள்ள 'வகாபு' என்ற பெயரைப் பற்றிப் பல குழப்பமான செய்திகளுக்கு விளக்கமளிக்கும் முன், நான் என்ன எழுத வேண்டும், அதை எப்படி எழுத வேண்டும் என்று நான்தான் முடிவு செய்ய முடியும்; வேறு யாரும் முடிவு செய்ய முடியாது - குறிப்பாக, குலாம் ரசூல் செய்யக் கூடாது. இனி,
"அல்லாவின் 99 திருநாங்களில் வகாப் என்று திருத்தல்வாதம் செய்தாலும் இச்சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொள்ள முடியாது"
என்று கடிதம் எழுதிய குலாம் குறிப்பிடுகிறார். பாவம், அவருக்கு என்ன சூழ்நிலையோ? இவர் ஏற்றுக் கொண்டாலும் மறுத்தாலும் உண்மை, உண்மையில்லை என்றாகி விடுமா என்ன?. மீண்டும் சில பெயர்ச் சொற்களையும் உரிச் சொற்களையும் ஆகு பெயர்களையும் வேற்று மொழியில் பயன் படுத்துவதற்காக ஜடாயு அவர்கள் என் மீது கோபம் கொள்ளக் கூடாது. அவற்றைப் பயன் படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப் பட்டுள்ளேன் - அறியாமையை அகற்றும் விளக்கத்திற்காக. bin / ibn என்ற அரபுச் சொல் s/o என்று ஆங்கிலத்தில் பயன் படுத்தப் படும் சொல்லுக்கு ஒப்பானதாகும். மு.க. ஸ்டாலின் என்ற பெயர்ச் சொல்லை அரபியில், 'ஸ்டாலின் bin கருணாநிதி bin முத்துவேல்' என்று குறிப்பிடுவர். 1. "அப்துல்வஹ்ஹாபின் மகன் பெயர் முஹம்மது", அதே "முஹம்மதின் தந்தை பெயர் ஷெய்க்", "அந்த ஷெய்க் உடைய தந்தை அப்துல்வஹ்ஹாப் ஆவார்". எனில், முஹம்மது என்பாருக்கு அப்துல்வஹ்ஹாப் தந்தையா தாத்தாவா? குழப்பந்தானே! குழப்புவது நானல்ல; குலாம்:
"வகாபி கி.பி.1703-ல் மத்திய அரேபியாவின் நஜ்து பகுதியில் பனுதமீம் குலத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் முகம்மது இப்ன் அப்துல் வகாப். இவரது வாப்பாவின் பெயர் ஷெய்க் இப்ன் அப்துல் வகாப்"

இங்குக் குழப்பப் பட்டவர், முஹம்மது s/o அப்துல்வஹ்ஹாப் s/o ஸுலைமான் என்பவராவார். உறுதிப் படுத்திக் கொள்வதற்கும் கூடுதல் தகவல்களுக்குமான சுட்டி : http://www.ahya.org/amm/modules.php?name=Sections&op=viewarticle&artid=180 . மேற்படி முஹம்மது என்பார் தனெக்கென ஒரு கொள்கையைப் புதிதாக ஏற்படுத்திக் கொண்டு அதை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் போராடவில்லை. இறைமறையும் நபிவழிமுறையுமே தமது உயிர் மூச்சு என்றார். கடிதம் எழுதியவரின் அதிமுக்கியக் கவலைக்கும் ஆத்திரத்திற்கும் காரணம் என்னவென்றால், வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியின் மறைவுக்குப் பிறகுக் கொஞ்சங் கொஞ்சமாக அரபு குலாம்களால் புதிதாக ஏற்படுத்தப் பட்ட சமாதி வழிபாட்டையும் வழிபாடு நடந்த சமாதிகளையும் முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் தரைமட்டமாக்கினார் என்பதே. அந்தத் தரைமட்டச் சேவையையும் தமது தலைவரின் கட்டளைப்படியே செய்தார் என்பதுதான் சான்றுகளின் அடிப்படையில் அமைந்த வரலாறு. இதோ ஒரு ஹதீஸ் - ஒன்பது சான்றுகளுடன்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ என்ற நபித்தோழர் கூறுகிறார்: "அல்லாஹ்வின் தூதர் என்னை நியமித்த அதே பணிக்காக உன்னை நான் நியமிக்கிறேன். உயர்(த்திக் கட்டிக் கண்ணியப் படு)த்தப் பட்ட எந்தச் சமாதியையும் தரைமட்டமாக்காமல் விட்டு வைக்காதீர் ..." என்பது அலீ அவர்களால் எனக்கு இடப் பட்டக் கட்டளையாகும். [முஸ்லிம் 1609, திர்மிதீ 970, நஸயீ 2004, அபூதாவூத் 2801, அஹ்மது 622; 703; 1012; 1111; 1175]. தரைமட்டச் சேவைக்கான/தேவைக்கான இன்னும் கூடுதல் சான்றுகள் திண்ணை இதழின் 24.02.200 பதிப்பில் எனது கடித இறுதியில் கிடைக்கும். இனி வஹ்ஹாபிஸத்துக்கு வருவோம். நேபாளத்தின் சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளை அவ்வரசு விடுதலை செய்யப் போவதாக அண்மைச் செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸத்தைப் பின்பற்றுபவர்களே மாவோயிஸ்டுகளாவர். சீனப் புரட்சித் தலைவர் மாவோ ஸெடுங்கின் கொள்கை-கோட்பாடுகள்தாம் அவருடைய முதற் பெயரால் மாவோயிஸம் என்று வழங்கப் படுகிறது. முஹம்மது [bin அப்துல்வஹ்ஹாப்] என்பவருடைய தனித்த கொள்கை-கோட்பாடு என்று ஒன்றிருந்து, அதை இஸத்தோடு இணைத்து வழங்குவதென்றாலும் 'முஹம்மதிஸம்' என்றல்லவா சொல்ல வேண்டும்? மாறாக, ஏன் வஹ்ஹாபிஸம் என்று சொல்லுகின்றனர்/எழுதுகின்றனர்? இந்த இடத்தில்தான் மேற்கத்திய பூர்ஷ்வாக்களின் நரித்தனம் ஒளிந்திருக்கிறது. முஹம்மதிஸம் என்று சொல்லி விட்டால் நபி முஹம்மதின் கொள்கை என்று உலக மக்கள் புரிந்து கொண்டு விடுவர் என்ற அச்சமும் முஸ்லிம்களைக் கூறு போட வேண்டிய தந்திரமும் சேர்ந்து உருவானதே 'வஹ்ஹாபிஸம்' என்ற சொல். கார்ல் மார்க்ஸின் பெயரால் மார்க்ஸிஸம், விளாடிமீர் லெனினின் பெயரால் லெனினிஸம், ஜோஸஃப் ஸ்டாலினின் பெயரால் ஸ்டாலினிஸம் ஆகியவற்றைப் போல் இரண்டாவது பெயரில் ஓர் இஸத்தை இணைத்து வழங்குவதென்றாலும் நியாயப்படி, 'அப்துல்வஹ்ஹாபிஸம்' என்றுதான் வழங்க வேண்டும்.

ஏனெனில், அப்துல்வஹ்ஹாப் என்பது இரண்டு பெயர்கள் அல்ல; ஒரு பெயர்தான் [அப்த்+அல்லாஹ்= அல்லாஹ்வின் அடிமை என்பதுபோல், அப்த்+அல்வஹ்ஹாப்=பெருங் கொடையாளனின் அடிமை]. பலவேளைகளில் தந்திரங்கள் வெற்றி பெற்றாலும் சிலவேளைகளில் உண்மைகளின் முன் தந்திரங்கள் தோற்றுவிடும். மொழியறிவின்றி, தந்திர நோக்கோடு தவறாகக் கொடுக்கப்பட்டிருப்பினும், இறைவனின் பண்புப் பெயர்களுள் ஒன்றான அல்வஹ்ஹாப் [பெருங்கொடையாளன்] என்ற பெயராலேயே அவனுடைய மார்க்கமான இஸ்லாமை 'வஹ்ஹாபிஸம்' என்று வழங்குவதிலும் அந்தப் பெருங்கொடையாளனைச் சார்ந்து நிற்பவரை 'வஹ்ஹாபி' என்று அழைப்பதிலும் நபிகளாரை 'வஹ்ஹாபிகளின் தலைவர்' என்று குறிப்பிடுவதிலும் குழப்பமேதுமில்லை என்பதை அறிவுடையோர் புரிந்து கொள்வர் - குலாமுக்கு வேண்டுமானால் குழப்பமாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

கேள்வி: 'வஹ்ஹாபி' என்று அழைக்கப் படுவோர் யார்? பதில் : இஸ்லாமிய மார்க்கத்தை அதன் பழைமையான தூய வடிவில் கடைப் பிடிப்போர்.
மேற்காணும் வினாவும் விடையும் எந்த வஹ்ஹாபியும் புதிதாகக் கண்டு பிடித்துச் சொன்னதன்று. மாறாக, +2 வகுப்பிற்கான 'வரலாறு, நவீன உலகம்' என்ற பாடத்திற்கான தினமணி நாளிதழின் மாதிரி வினா-விடைப் பகுதியில் வெளிவந்ததாகும். நாள்: 19 மார்ச் 1984. 'பழைமையான தூய வடிவு' என்றாலே முந்நூறு ஆண்டுகளுக்கே முன்னர் பிறந்த, புதியவரான முஹம்மது அப்துல்வஹ்ஹாப் ஸுலைமான் என்ற 'முழுப் பெயரை' உடையவருக்குப் பழையதில் எவ்விதப் புதிய ஆளுமையும் இல்லை என்பது தெளிவு. [bin நவீனத்துவம் முடிவுக்கு வந்து அதிநவீனத்துவம் ஆரம்பித்து விட்டதால் இப்போதெல்லாம் யாரும் bin போட்டு எழுதுவதில்லை]. என்னுடைய ஆக்கங்களுக்கான 'வஹ்ஹாபிஸ'ச் சான்றுகள் அனைத்தும் வஹ்ஹாபுடைய வேதமான அல்குர் ஆனிலிருந்தும் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபியவர்களின் வழிமுறைகளிலிருந்துமே எடுத்தாளப் படுகின்றனவேயன்றி, முஹம்மது bin அப்துல்வஹ்ஹாப் என்பவரின் 'கிதாபுத் தவ்ஹீத்' என்ற நூலிலிருந்தன்று. 2. அன்னார் எழுதியவற்றுள், நஸீஹத்துல் என்றும் முஸ்லிமீன் என்றும் இரு நூல்களைக் குறிப்பிடுகிறார் குலாம். 'நஸீஹத்துல் முஸ்லிமீன்' [முஸ்லிம்களுக்கு அறிவுரை] என்பது ஒரேயொரு தலைப்பாகும்; இரண்டன்று. தெரியாதவற்றைத் தெரிந்தவர்கள் யாரிடமாவது கேட்டெழுதுவது குற்றமன்று; தெரியாதவற்றைத் தெரிந்ததுபோல் பாசாங்கு செய்து கொண்டு எழுதுவதே குற்றம்.
3. "இமாம் வகாப் அறுநூறுபேர் கொண்ட படையுடன் நேரடியாகப் பங்கேற்று உமர் பின் அல்கதாபின் சகோதரர் அஸ்வரின் சமாதி மக்பராவை இடித்து தள்ளி நிர்மூலமாக்கினார்"

இதுவும் 'அரபு வகைப் பட்ட' வரலாற்று ஆசிரியராகத் தன்னைத் திண்ணைக்கு அறிமுகப் படுத்த முயன்றுள்ள குலாம் எழுதியதுதான். அண்ணல் உமருக்கு அஸ்வர் என்றொரு சகோதரர் இருந்தார் என்பதை மட்டும் சான்றுகளோடு குலாம் நிரூபித்து விட்டால், அவரைப் பேராசிரியர் என்றே அழைக்க நான் தயார். சரி, இல்லையெனில்?

"அப்பட்டமான முட்டாள்தனமும், சமகால வரலாற்று மோசடியாகும்"

இவைதாம் குலாமின் திண்ணைக் கடிதத்தின் இறுதிச் சொற்கள்.

அவை 'யாருக்குச் சொந்தம்?' என்று முடிவுக்கு வர வேண்டியது வாசகர்களின் பொறுப்பு.

மயிலாஞ்சி எல்லையோடு நிறுத்திக் கொண்டிருந்தால் 'சவை நடுவே நீட்டோலை வாசியா' வரிசையில் வந்து நிற்க வேண்டிய நிலை குலாமுக்கு ஏற்பட்டிருக்காது!

ஃஃஃ

வெள்ளி, மே 12, 2006

இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள் - அறிமுகம்

'இஸ்லாத்தை மறந்த இலக்கியங்கள்' என்ற பெயரில், இஸ்லாமியக் கல்வி வெளியீட்டு நிறுவனத்தாரால் 1999இல் ஓர் ஆய்வு நூல் வெளியிடப் பட்டது. மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியில் பணியாற்றியத் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எனது அன்புக்குரியவருமான சகோதரர் 'ஹஸ்ஸான்' என்ற ஜமாலுத்தீன் அவர்களின் தெள்ளு தமிழ் நடையில் வெளிவந்த இவ்வாய்வு நூலை, வலைப்பூவில் பதிக்க வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை! என் ஆசைக்கு இரு காரணங்கள் உள. 1. அன்னாரின் பேச்சிலும் எழுத்திலும் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. 2. அன்னார் மறைந்து விட்டார்; அவர் எழுத்து மறையக் கூடாது. எனவே, அவருடைய மகனாரின் அனுமதி பெற்று என்னாசையை நிறைவேற்றும் முகமாக, இவ்வாரம் முதல் இங்குப் பதிக்கத் தொடங்குகிறேன். இந்நூலுக்கு 'இஸ்லாத்துக்கு எதிரான இலக்கியங்கள்' என்ற தலைப்பே மிகப் பொருத்தமானது என்பது என் கருத்து.  

பேரா. ஹஸ்ஸானோடு பணியாற்றிய முனைவர் 'AMSA' கபீர், M.A. PhD அவர்கள், இந்நூலுக்கு வழங்கிய அணிந்துரையின் சுருக்கம்: 
லக்கிய வளமையும் இலக்கணச் செழுமையும் எண்ணவியலாத் தொன்மையுங் கொண்ட நம் தாய்மொழித் தமிழை, சமயங்களே வளர்த்தன எனலாம். அந்தளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் சமயங்களின் பங்களிப்பு அமைந்திருக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களாயினும் நீதி நூல்களாயினும் சிற்றிலக்கியங்களாயினும் அவை சமயம் சார்ந்தே அல்லது சமயச் சார்பார்ளாராலே இயற்றப் பட்டுள்ளன. சமணரும் பெளத்தரும் சைவரும் வைணரும் வழங்கிய அளவுக்கு முஸ்லிம்களும் எண்ணிலா இலக்கியங்களைப் படைத்துத் தமிழுக்கு அணி சேர்த்தனர்.  

பதினான்காம் நூற்றாண்டின் 'பல்சந்த மாலை' முதல் இன்று வரை இஸ்லாமியர் வழங்கிய - வழங்குகின்றத் தமிழ் இலக்கியங்கள் ஏராளம்; ஏராளம். இவற்றைப் பிறருக்கு அறிமுகப் படுத்தி, தமிழுக்கு எங்கள் பங்களிப்பும் எவருக்கும் குறைந்ததன்று என்று காட்ட, "இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி" என்ற முழக்கத்துடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் பல நடத்தப் பட்டன. நம் தமிழரும் இவற்றோடு அறிமுகம் பெற்றனர்; இவைதாம் இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்களின் தொகுப்பு என எண்ணத் துவங்கினர்; முஸ்லிம்களில் பலரும் இப்பாடல்களையே இஸ்லாத்தின் ஆதாரமாகக் காட்டத் தலைப் பட்டனர். 

தமிழகத்தில் எண்பதுகளில் ஏற்பட்ட 'ஏகத்துவ மறுபுரட்சி'க்குப் பின், இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் நாம் ஆய்வு செய்தபோது, 'ஐயகோ, கைசேதமே!' என்றெல்லாம் துயருறும் அளவுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான - அடிப்படையையே தகர்க்கின்ற அளவுக்கு அபத்தங்களும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செய்திகளும் பொய்களும் அவற்றில் மலிந்திருப்பதைக் கண்டோம்!. எவற்றை "ஆஹா, பாரீர் எம் இலக்கியங்களை" என்று பெருமையுடன் காட்டினோமோ அவற்றையே, "ஐயோ, தொடாதீர்! இஸ்லாத்தையே தகர்கின்றன இவை" என அடையாளம் காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டோம்.  

அடையாளத்துக்காகச் சில சான்றுகளைக் காட்டுவது இங்குப் பொருத்தமாக அமையும் எனக் கருதுகிறேன். பெருமானாரின் மனைவியராம் முஸ்லிம்களின் அன்னையரைப் பற்றியும் பெருமானாரின் அன்பு மகளார் ஃபாத்திமா அவர்களைப் பற்றியும் உமருப் புலவர் வரம்பு கடந்து வருணித்துள்ளார். அலீ-ஃபாத்திமா திருமணத்தின்போது, அலீ அவர்கள் திருமண உலா வரும் வேளையில் எழுபருவப் பெண்களும் அலீ அவர்களின் அழகைக் கண்டு காதல் கொண்டு நின்றனர் என்பதாக உமருப் புலவர் பாடிச் செல்கிறார்:
" குவிபெருந்தானை நாப்பண் கூண்டவை அலீயென்றோதும் பவனியின் தருவை நோக்கிப் பல கொடி படர்ந்ததன்றே"
(ஃபாத்திமா திருமணப் படலம், பாடல்: 135) நபித்தோழியராம் ஸஹாபிப் பெண்களை இவ்வாறு தரக்குறைவாகப் புலவர் வருணித்துச் செல்வதை இந்நூலாசிரியர் விளக்கமாக எடுத்தெழுதியுள்ளார். இந்துமதச் சித்தாந்தத்தின் 'ஜெராக்ஸ் காப்பி'யாகவே குணங்குடி மஸ்தானின் பாடல்கள் காணக் கிடைக்கின்றன என்பதை இந்நூல் தக்க ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளது. 

'அஞ்ஞானக் குணங்குடி', 'சன்னியாசியின் சல்லாபம்', 'இஸ்லாமியத் தாயுமானவர்', 'ஜெதிபு யோகம்' ஆகிய தலைப்புகளின்கீழ் ஆசிரியர் இதனை நன்கு ஆராய்ந்துள்ளார்.
"ஆதியை அறிய வேண்டில் அழகிய நிலைமை நான்காம் ஓதிய ஷரீஅத்தென்றும் உவந்திடும் தரீகதென்றும் நீதி சேர் ஹகீகத் தென்றும் நெறியுள்ள மஃரிபத்தால் ஆதியைக் காணலாம் என்று அகுமதர் அருளிச் செய்தார்" (ஞானமணி மாலை, பாடல் : 11)
போன்ற பீரப்பாவின் பாடல்கள் மெய்யான ஹதீஸுக்கு வெளிப்படையாகவே முரண்பட்டு அமைந்துள்ளன. 'அல்லாஹ்தான் முஹம்மது நபியாக அவதரித்தான்' என்ற கேடுகெட்ட அவதாரக் கொள்கையைப் பீரப்பா இஸ்லாத்தின் பெயரால் இட்டுக் கட்டிப் பாடியுள்ளார்.
"இப்புவியில் ஊனுருவாய் நீ அகுமது ஆனவனே"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 134)
"நீயே உனக்கு சுஜூது செய்தாய் பின் நினைந்துருவாய் நீயே புவிக்குள் ரசூலாக வந்தவன்"
(ஞானப் புகழ்ச்சி, பாடல் : 118) இம்மாதிரிப் பாடல்களை மாபெரும் ஸூஃபிஸ இலக்கியங்களாக இஸ்லாமியர் போற்றிப் பயிலுகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற இந்த இலக்கிய முரண்பாடுகள் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. மாறாக, இவற்றையே இஸ்லாமியக் கொள்கைகள் எனப் பெரும்பாலான முஸ்லிம்களும் மற்றோரும் நம்பியிருந்தனர்; நம்பியிருக்கின்றனர். அந்தத் தவறான நம்பிக்கையை இந்நூல் தகர்த்து விடும் என்பதில் ஐயமில்லை. 
 
- தொடரும், இன்ஷா அல்லாஹ்.

வெள்ளி, மே 05, 2006

தொடரும் வெளிச்சம் - பளீரென்று

"முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர்ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல" என்ற எனது விளக்கத்துக்குப் பதிலாக,
"பிராமணர்கள் கருவறை மொழியாக சமஸ்கிருதத்தை புனிதப்படுத்தி வைத்திருப்பதுபோல் வகாபிகள் அரபு மொழியையும் புனிதப்படுத்தி சொர்க்கத்தின் மொழி அரபு என்று புனைவுபடுத்தியும் வைத்துள்ளார்கள்"
என்று இம்முறை தனது தலைச்சோற்றை இங்குப் புதுக் கூட்டுக் கறி சகிதம்
பரிமாற முனைந்துள்ளார் சூபி. வஹ்ஹாபிஸத்தின் (அல்லது இஸ்லாத்தின்) பார்வையில் மொழி எதுவாக இருப்பினும் அது, தகவல் பரிமாறிக் கொள்ளக் கூடிய ஒரு கருவி; அவ்வளவுதான் - அவ்வளவேதான். அதனாற்றான் ரோமாபுரிக் காரரான ஸுஹைப் அவர்களும் பாரசீக ஸல்மான் அவர்களும் ஆப்பிரிக்க பிலால் அவர்களும் வஹ்ஹாபிகளின் தலைவருக்கு உற்றத் தோழர்களாகத் திகழ முடிந்தது. 

வஹ்ஹாபுடைய வார்த்தைகளைப் படித்தாலே சூபிகளுக்குத் தானாகவே பொங்கும் - அலுப்பும் சலிப்பும். புழுத்துப்போன புத்திகட்கு எட்டுகின்றவரை இறைவசனம் குறித்த வஹ்ஹாபிகளின் அலுத்துப்போன விளக்கங்கள் திரும்பத் திரும்பச் சொல்லப்படத்தானே வேண்டும்? முக்கால்வாசி அலுத்து விட்டார் சூபி; முழுமையாக்க எனக்கு மனமில்லை என்றாலும் 'வஹ்ஹாபை வணங்குவதற்கு அரபுமொழி எதற்கு?' என்ற எனது மிகச் சிறு முன்விளக்கத்தைத் திண்ணை வாசகர்கள் ஒப்பிட்டு நோக்குவதற்காக: 

1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

5- உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும்.

குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறதாம். அதனால் தமிழ்த் தொழுகைதான் வேண்டுமாம். தமிழில் மட்டுமின்றி உலகமொழிகள் பெரும்பாலானவற்றில் குர்ஆன் மொழி பெயர்க்கப் பட்டு விட்டது என்பதையும் இங்குச் சொல்லி வைக்க வேண்டியதாகி விட்டது. மொழித் தழுவல்கள் நூறைத் தாண்டினாலும் மூலம் ஒன்றுதான் - அன்றிலிருந்து இன்றுவரை. 

வஹ்ஹாபுடைய கட்டளையைப் புறந்தள்ளி விட்டு, தன் தலைச் சோற்றுச் சவால் பந்தியில் 'வஹ்ஹாபி எப்படி வந்து உட்காருவான்?' என்பதைப் பரிமாறும்போதுகூட எண்ணிப் பார்க்கவில்லை சூபி. வஹ்ஹாபிகளின் தலைவருடைய திருமணத்தைப் பற்றி சூபி குறிப்பிட்ட பின்னரும், 'சோறு இன்னும் குழைந்து விடுமே' என்பதற்காக அவருக்கு நான் பதில் சொல்லாவிட்டால் - அது நன்றாகவாயிருக்கும்? "... இச்சலுகை நாம் உமக்களித்திருக்கும் சிறப்பாகும் ..." அல் குர் ஆன் 033:050. 

கொசுறு - அன்னை ஹதீஜா அவர்களைத் திருமணம் செய்யும்போது அண்ணலார் வெறும் அப்துல்லாஹ்வின் மகன்தாம் - அல்லாஹ்வின் தூதரல்லர்; வஹ்ஹாபிகளின் தலைவருமல்லர். "வரலாற்று ரீதியான உண்மை" என்று பரிமாறலில் கொஞ்சம் சிந்திக் கிடந்தது, எந்த வரலாறு என்ற முகவரி இல்லாது. அண்ணல் இபுராஹீம் நபி அரபியரல்லர் என்று நான் எழுதியதை நிரூபிப்பதற்கு அன்னாரின் பர்த் ஸர்டிஃபிகேட்டை இங்கு அட்டாச் செய்ய வேண்டியதில்ல; அன்னாரது தந்தையிலிருந்து தொடங்கி அவரது பேரப் பிள்ளைகளின் அரபு மொழிக்கு அப்பாற் பட்டப் பெயர்களைத் தெரிந்திருந்தாலே போதுமானது. அதற்குக் குர்ஆனைப் பார்த்துப் படிக்கவாவது தெரிந்திருக்கக் கூடிய 'அடிப்படை அறிவு' வேண்டும்; அவ்வளவே! 

மிர்சா குலாம், எலிஜா முகமது, ரஷாத்கலீபா வழியில் யார் வேண்டுமானாலும் தன்னை நபி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கழிப்பிடத்திற்கு உள்ளே சென்றால் வேலையை முடித்துக் கொண்டுச் சீக்கிரம் திரும்பிவிட வேண்டும். காரணம், மிர்சா நப்பி செத்துப் போனது கக்கூஸில்! 

முன்னொரு காலத்தில் சூரக்கோட்டை மைனருக்கு(க் கல்யாணம் ஆகாமலே)ச் சொந்தமாயிருந்து, பின்னர் சுந்தருக்குக் கல்யாணமாகிச் சொந்தப் பட்ட, 'அதி நவீன முஸ்லிம்', 'கற்பு புகழ்' குஷ்பு அம்மணிக்கோ கல்யாணமே ஆகாமல் ஷிப்லிக்குத் தாயான 'உயரதி நவீன முஸ்லிம்' அஸ்ரா நுமானிக்கோ 'தன்னினமே தனக்குதவி' என்று போதுமென்ற பொன்மனம் படைத்த 'முன்நவீன லெஸ்பியன் முஸ்லிம்' இர்ஷாத் மஞ்சானிக்கோ இன்னபிற முன்-பின் நவீன முஸ்லிம்களுக்கோ தன் ஆதரவுக் கரத்தை சூபி நீட்டிக் கொள்ளட்டும்; நமக்குக் கவலையில்லை - அன்னை மர்யம் அவர்களுக்கு வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்! தலைப்பின் கருவைக் காணோமே எனத் திண்ணை வாசகர்கள் தேடி அலுத்துவிட்டிருக்கலாம்! மூன்றாவது பாயிண்டில்தான் சூபியின் வெளிச்சம் - அதுவும் பளீரென அடிக்கிறது:
"நபிமுகமது மூலமாக கி .பி.ஏழாம் நூற்றாண்டில் இஸ்லாம் அறிமுகமாகிறது"
என்று. 

"எங்கள் இறைவா! எங்களின் வழித்தோன்றல்களுக்கு உன்னுடைய வேத வசனங்களை ஓதிக் காட்டி, உன்னுடைய வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்பி வைப்பாயாக ..." 002:129 என்று அண்ணல் இபுராஹீம் அவர்களும் அண்ணல் இஸ்மாயீல் அவர்களும் அல்லாஹ்விடம் வேண்டி நின்றனர். அண்ணல் இஸ்மாயீல் அவர்களின் வழித்தோன்றியவர்தாம் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபி. அண்ணல் இபுராஹீம் அவர்களையும் அண்ணல் இஸ்மாயீல் அவர்களையும் இஸ்லாத்துக்கு எப்போது சூபி 'உள் வாங்க'ப் போகிறாரோ தெரியாது.  

"இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்காக அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட தூதன். எனக்கு (அருளப் படுவதற்கு) முன்னர் அருளப் பட்ட தவ்ராத்தையும் நான் உண்மைப் படுத்துகிறேன். மேலும், எனக்குப் பின்னர் 'அஹ்மது' எனும் பெயருடைய ஒரு தூதர் வருவதைப் பற்றிய தகவலையும் உங்களுக்கு நற்செய்தியாகக் கூறுகிறேன் ..." 061:005 என்று அண்ணல் ஈஸா என்ற அல்லாஹ்வின் தூதர், அல்லாஹ்வின் இறுதித் தூதரைப் பற்றி நற்செய்தி கூறினார். 
 
"நம்பிக்கையாளர்களே! உங்களின் மார்க்கமாக நூஹுக்கு அறிவுறுத்திய (ஓரிறைக் கொள்கை) அறவுரைகளையே (அடிப்படையாக அல்லாஹ்) ஆக்கியிருக்கின்றான். (முஹம்மதே!) நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிப்பதும் இபுராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு அறிவுறுத்தியதும் "ஓரிறைக் கொள்கையில் உறுதி குலையாமல் ஒருமித்து நில்லுங்கள்; பிரிந்து விடாதீர்கள் ...என்பதே" 042:013. பட்டியலில் அண்ணல் நூஹ் அவர்கள் முதல் அண்ணல் ஈஸா அவர்கள் ஈறாகக் காத்துக் கிடக்கின்றனர். 

சூபி மனது வைத்தால் 'உள் வாங்க'லாம்! 

இவ்வார இறுதியாக ஒரு வேண்டுகோள்: எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை வைத்துக் கொள்வது நல்லது - வெளிச்சம் போடுவது உட்பட. அப்பப்பா ... சென்ற வாரம் கண்கள் மிகவும் கூசி விட்டன!
ஃஃஃ

வெள்ளி, ஏப்ரல் 21, 2006

எதிர்மறைகள்

சென்ற வாரத் திண்ணையில் ஒரு வித்தையைக் காண நேர்ந்தது. 'தவ்ஹீது பிராமணீயம்' என்ற மொட்டைத் தலையில் சடை பிண்ணி அதை முழங்காலுக்கு முடிச்சுப் போட முயன்றதை வெறும் வித்தை என்று கூறுவதைவிட 'கண்கட்டு வித்தை' என்றே கூறலாம். 

கட்டுகளை அவிழ்ப்பதற்கு முன்னர் இங்கு ஆளப்படும் சில கலைச் சொற்களைச் சொல்லி விடுவது நல்லது:
வஹ்ஹாப்=இறைவன்/அல்லாஹ், 
வஹ்ஹாபிஸம்=வஹ்ஹாபினால் வழங்கப் பட்ட வாழ்க்கைநெறி/இஸ்லாம், 
வஹ்ஹாபி=வஹ்ஹாபிஸத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் /வஹ்ஹாபைச் சார்ந்தவர்/முஸ்லிம்.

வித்தையில் அவிழ்த்து விடப் பட்ட சொற்களை இங்கு எடுத்தாள வேண்டியிருப்பதால், பிராமணர்களின் சுட்டு விரல் என்னை நோக்கி நீளாது என்ற நம்பிக்கையோடு, மறுக்க முடியாத ஒப்பீடுகள் - சான்றுகளுடன்:

ஒவ்வொன்றாகப் பார்ப்போமெனினும் பிராமணீயம் என்று சொன்னவுடனே முதலாவதாக நினைவுக்கு வருவது புரோகிதம்தான்.  

1. புரோகிதம் இஸ்லாமிய மார்க்க மேதைகளுள் நால்வரான இமாம்கள் மாலிக், அபூ ஹனீஃபா, ஷாபியீ மற்றும் இபுனு ஹன்பல் ஆகியோரின் பெயரை மட்டும் பயன் படுத்திக் கொண்டு, இஸ்லாத்துக்கு எதிரான (இம்ரானா) தீர்ப்புகளைக் கூறி மக்களை மடையர்களாக்கும் முல்லாப் புரோகிதர்கள், சமாதிகளைக் காட்டிச் சுரண்டிப் பிழைக்கும் 'சாபு'ப் புரோகிதர்கள், ஒரேயொரு நேர்வழியான இஸ்லாத்தைப் பலவாறு துண்டிக்கத் துடிக்கும் எழுத்துப் புரோகிதர்கள் ஆகிய அத்தனைப் புரோகிதர்களுக்கும் எதிராக உரத்துக் குரல் கொடுப்பது வஹ்ஹாபிஸம் மட்டுமே.

முந்நூறுக்கும் மேற்பட்ட சிலைகளை இறையில்லமான கஃபாவைச் சுற்றிலும் வைத்து நடந்து கொண்டிருந்த புரோகிதத்துக்குச் சாவு மணி அடித்ததுதான் வஹ்ஹாபிகளின் தலைவர் முஹம்மது நபி அவர்கள் செய்த அறப்பணிகளுள் தலையாயது. 

அந்தப் பழைய புரோகிதர்கள் தங்கள் தொழிலுக்குச் சொன்னக் காரணம்: "...அல்லாஹ்விடம் எங்களை அண்மித்து வைப்பர் என்பதற்காகவே இவர்களை நாங்கள் வழிபடுகிறோம் ..." [039:003]. மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் தற்காலப் புரோகிதர்கள் தமிழகத்தில் அதிகமாகப் புழங்குவது 'பண்பாட்டு மரபியல்' என்று முன்,பின்,அதி,நவீனத்துவ அறிவுசீவிகளால் தூக்கி நிறுத்த முயலும் சமாதி வழிபாடு நடக்கும் தர்ஹாக்களில்தான்.

"எனக்கும் என் அடியானுக்கும் இடையில் யாரும் புரோகிதம் செய்யத் தேவையில்லை" என்று வஹ்ஹாப் தன் மறையில் அறிவுறுத்துகிறான் [002:186].  

2. வர்க்க பேதம் முழு மனுக்குலமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் [004:001] என்றும் வஹ்ஹாபிஸத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட எல்லா முஸ்லிம்களும் சகோதரர்களே [049:010] என்றும் வஹ்ஹாப் வரையறுத்துக் கூறி விட்டான். 

அடுத்து, "மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விடவோ, எந்த ஒரு கருப்பருக்கும் வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்" என்று வஹ்ஹாபிகளின் தலைவரும் வர்க்க பேதத்தைத் தம் காலடியில் போட்டு மூடி விட்டார். 

திரு. கொடிக்கால் செல்லப்பா (இன்று கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்) என்ற மூதறிஞர் தனது சொந்த வாழ்க்கைச் சுவடுகளின் அடிப்படையில் கன்னியாகுமரி - விவேகானந்தா கேந்திரத்தில் 1986 அக்டோபர் 2இல் நடைபெற்ற 'தீண்டாமை ஒழிப்பில் காந்திஜீயின் பங்கு' என்ற கருத்தரங்கில் ஆற்றிய உரையின் சிறு பகுதி:
"இஸ்லாமியக் குடும்பத்தில் பங்கு பெறும் எல்லா மனிதர்களும் எந்த இனத்தை, எந்தக் குலத்தை, எந்த நாட்டைச் சார்ந்தவரானாலும் முழுக்க முழுக்க சமமான உரிமைகளுடன் பங்கு பெற முடியும். அவ்வாறு பங்கு பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர்.அங்கே இன பேதமில்லை; நிற பேதமில்லை; புதிதாக வந்தவர்கள் என்ற அடைமொழி எதுவும் இல்லை. இஸ்லாத்தில் இணைந்து விட்டார்கள் என்றால் அங்கே இரண்டறக் கலந்துவிடுகின்ற நிலையே ஏற்பட்டு விடுகின்றது. கடலிலே நதிகள் கலந்துவிட்ட பின்பு, அங்கே நதிகள் என்று பிரித்து பார்க்க முடிவதில்லை. நதி கடலாகி விடுகிறது. இதுவே, இஸ்லாத்தில் இணைகின்றவர்களின் நிலை."  

3. வேதம் ஓதுதல் "ஓதுவீர்!" என்ற முதல் சொல்லோடு அருளப் பட்ட வேதம் [096:001] உலகிலேயே வஹ்ஹாபிகளின் வேதம் மட்டுமே. "முழு மனுக்குலமும் ஓதி உணர வேண்டியது" என்று பல இடங்களில் [002:185], [047:24], [054:17], [081:027] தன்னுடைய வேதத்தை வஹ்ஹாப் பொதுவில் வைக்கிறான்.  

4. தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துதல் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டு தம்பட்டம் அடிப்பதற்கு வஹ்ஹாபிகளுக்குத் தடையிருப்பது [053:32] போலவே பிறரைப் பற்றி இல்லாத குறை கூறித் திரிவதைப் பற்றியும் [104:001] தடையிருக்கிறது.  

5. மதிக்கப் படுதல் வட்டிச் சுரண்டல், வரதட்சணைக் கொடுமை, சமாதிகளைக் காட்டி நடக்கும் வழிப்பறிக் கொள்ளை, இஸ்லாத்தில் இடையில் புகுத்தப் பட்டப் பொல்லாப் புதுமைகள், மன்னிப்பில்லாப் பாவமான இறைவனுக்கு இணை கற்பித்தல் ஆகிய வன் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்காகத் தொழ முடியாமல் தடுக்கப் பட்டவர்கள், அடி-உதைகளைப் பரிசாகப் பெற்றவர்கள், ஊர் விலக்கம் செய்யப் பட்டவர்கள், பொய் வழக்குகளால் சிறை வைக்கப் பட்டவர்கள் இன்னும் எத்தனையோ இன்னல்களை ஏற்றுக் கொண்டவர்கள் வஹ்ஹாபிகள். 
இது போன்ற எவ்வளவோ எதிர்மறைகள் பிராமணீயத்துக்கும் வஹ்ஹாபிஸத்துக்கும் உள்ளன என்பதுதான் யதார்த்தம். இவற்றையெல்லாம் அறியாமல், இரண்டும் ஒன்றுதான் என்று 'கண்கட்டு வித்தை' காட்டுகிற கட்டுரை இடம் பெற்ற திண்ணையின் அதே இதழிலேயே வித்தைக் காரரின் 'தேவதைகளின் சொந்தக் குழந்தை' விமர்சனக் கூட்டத்தில் நடந்தவை தொகுக்கப் பட்டு வெளியாகி இருந்தன. 

அதில் கட்டுரையாளரின் எழுத்தைக் குறித்து யூசுப் என்பார் கூறுகிறார் "எதார்த்தம் தவறுதல் என்பது மனநிலை பிறழ்வேயாகும்".
ஃஃஃ
எடுத்தாளப் பட்டச் சுட்டிகள்:

வெள்ளி, ஏப்ரல் 14, 2006

மீண்டும் வெளிச்சம்

அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், "முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது" என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் சூபிக்குத் தேவைதானா?

மேற்காண்பது திண்ணையின் 30 மார்ச் 2006 பதிப்பில் வெளியான எனது கடிதத்தின் ஒரு சொற்றொடர்.

"அல்குர்ஆன் அரபு மொழி சார்ந்தது இல்லை என்று கூறி எவ்வளவு அப்பட்டமாக வாசகர்களை வகாபி குழப்பப் பார்க்கிறார்." இது சூபியின் குற்றச்சாட்டு

"இந்தக் குர் ஆனை அரபு மொழியில் அருளியிருக்கிறோம் - நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக" - இது அல் குர் ஆன் 012:002.
இலண்டன் ரெவரெண்ட் பாதிரியார் வீட்டுப் பிள்ளை மர்மட்யூக் பிக்தால் என்பாருக்கு அரபு மொழிப் பயிற்றுவிக்கப் பட்டது. எதற்காக? குர் ஆனைக் குறை காண வேண்டும் என்பதற்காக! குர் ஆனில் பிழை தேடப் புகுந்த அவர்தாம், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதோடு மட்டுமின்றி குர் ஆனுக்கு ஆங்கிலத்தில் விரிவுரையும் எழுதினார் என்பது பலருக்கும் தெரியும். 

சூபி எழுதியிருப்பதுபோல், அல்குர்ஆன் அரபு மொழி 'சார்ந்தது' (?) இல்லை; வஹ்ஹாபின் வார்த்தைகள் 'தெளிவான அரபு மொழி'யில் அருளப் பெற்றவைதாம் என்பது 'சூரியன்' நக்கீரன் வரைக்கும் தெரிந்த வெள்ளிடை மலை செய்தியாகும். நான் சூபியை இடைமறித்தது "முஸ்லிம்களின் அல்குர் ஆன்" என்று அவர் குறிப்பிட்டதைத்தான். அதற்காகத்தான் 081:027 வசனத்தையும் சான்றாக வைத்திருந்தேன்.

குர் ஆனை மேற்கோள் காட்டினாலே சூபிகளுக்கு மிரட்சி ஏற்பட்டு விடும். அதற்காக சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் விட முடியுமோ? "... இது மிகத் தெளிவான அரபு மொழியில் (அருளப் பெற்று) உள்ளது" 016:103. ஒரு கருப் பொருள் குறித்த முழு அறிவும் அடிப்படை அறிவும் யாவை என்பதற்கு ஓர் உவமையைப் பார்ப்போமா?

'தமிழில் எழுதுதல்' என்ற ஒரு கருவுக்குத் தமிழின் உயிர் எழுத்துகள் 12ஐயும் மெய் எழுத்துகள் 18ஐயும் உயிர்மெய் 216ஐயும் ஆய்தம் 1ஐயும் சேர்த்து 247 எழுத்துகள் பற்றிய 'முழு அறிவு' கட்டாயம் தேவை. தமிழைச் சீரிய முறையில் தெளிவாக எழுத, அடிப்படை அறிவுக்கு மேற்கொண்டு இலக்கணங்கள் தெரிந்திருக்க வேண்டும். சூபியைவிடச் சிறப்பாக எழுத அடிப்படை அறிவே போதும்.

காலத்திற்கேற்றவாறு வேதங்களில் அல்லாஹ்வால் ஏற்படுத்தப் பட்ட மாற்றங்களை, 'அல்லாஹ்வுக்கே முழு அறிவு இல்லை' என்றுக் கூற விழைதலைவிட அறியாமை ஏதுமுண்டா?.
 " ... இன்றைய நாளில் உங்களுடைய மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன்; என்னுடைய அருட்கொடை (இறைமறை)யையும் முழுமையாக்கி விட்டேன்; உங்களுடைய வாழும் வழியாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டேன்." என்று அல்லாஹ் கூறுகிறான் [005:003].
'இன்றைய நாளில்', 'நிறைவு', 'முழுமை' ஆகிய சொற்கள் உணர்த்துவது யாதெனில், 'இதற்கு முன்னர் முழுமை பெற்றிருக்கவில்லை' என்பதைத்தான்.

இது, சூபியின் சுரியானி, பிரியாணி போன்ற புதுக் கண்டுபிடிப்பன்று. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வஹ்ஹாபே கூறியவைதாம்.

ஹஜ்ஜின்போது பலி கொடுத்தல், முடி மழித்தல் ஆகிய அனைத்தும் அரபுவகைப் பட்டதல்ல என்று முன்பே நிறுவியிருக்கிறேன். ஏனெனில், அவையனைத்தும் அண்ணல் இபுராஹீம் நபி அவர்களின் வழிமுறை; அண்ணல் இபுராஹீம் அரபியரா? என்று கேட்டிருந்தேன். என் கேள்விக்கு பதில் தராமல் தன்னுடைய அறியாமையை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் சூபி உறுதியாயிருக்கிறார். அவருடைய உறுதியை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை!.

புதிதாக சூபி புகுத்தியிருப்பது 'இஸ்லாமிய ஆடை விதிகள்' (Dress Code) அரபுவகைப் பட்டன' என்பதாகும்.

உலகில் வாழும் முஸ்லிம்கள் எல்லாரும் அரபியரைப் போன்று உடையணிந்து திரிவதாகக் கனவு கண்டிருக்கிறார். கிருத்துவப் பாதிரியார்களும் கன்னிகளும்தாம் அரபியரைப் போன்று உடையணிகின்றனர். கிழித்துக் கொண்டு திரிவது சூபிகளின் வழக்கமென்பதால் முழுக்க அணிவது முட்டாள்தனமாகத் தெரிகிறது போலும்.

மாறுபட்ட மொழிகள் பேசுவோர் வாழும் நம் நாட்டுக்கான தேசியப் பாடலாக, வங்கக் கவிஞர் தாகூரின் 'ஜன கன மன'வை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் - அது பிறந்த சூழலைக் கருத்திலெடுக்காமலேயே.

முஸ்லிம்களின் இறைவணக்கத்தில் குர் ஆனுடைய வசனங்கள் ஓதப் படுவதன் காரணம், அரபு வகைப் பட்டுப் போவதோ அல்லாஹ்வுக்கு அரபியைத் தவிர வேறு மொழி தெரியாது என்பதோ உலகில் சிறந்த மொழி அரபிதான் என்பதோவல்ல. 

1- "... தொழுகையில் குர்ஆனிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதிக் கொள்ளுங்கள் ..." [073:020] என்பது அல்லாஹ்வின் கட்டளை.

2- அல்லாஹ்வுடைய குர்ஆன் வசனங்கள் அரபு மொழியில் அருளப் பட்டவை - காரணம்,

3- குர்ஆனை உலக மாந்தருக்கு அறிமுகப் படுத்திய நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி மட்டும்தான் தெரியும்.

4- ஒருவருக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால்தான் மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்ல முடியும்.

உலகளாவிய ஓர் இறைவணக்கம் என்பது ஒரு மொழியில்தான் இருக்க முடியும். நபிகள் நாயகம் தமிழகத்தில் பிறந்திருந்தால் குர் ஆன் தமிழில்தான் அருளப் பட்டிருக்கும். உலக முஸ்லிம்கள் தமிழ் மொழியில் தொழுகை நடத்திக் கொண்டிருப்பர். அப்போதும் சீனாவில் பிறந்த ஒரு பி-சூ மேதாவி, "சீன மொழியில் தொழுகை நடத்த தயாரா?" என்று வலையில் சவால் விட்டுக் கொண்டிருப்பார்.

அடுத்து,

"ஒரே நேரத்தில் நான்கு பேர் வரை திருமணம் செய்து கொள்ளலாம்" என்பது , 'காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனை'யன்று. மாறாக, வஹ்ஹாப் வஹ்ஹாபிகளுக்கு வழங்கியிருக்கும் அதிகளவில் வழக்கிலில்லாத அனுமதி - ஆம்; அனுமதிதான்; ஆணையன்று. கூடுதல் விபரங்களுக்கு:

1- பலதார மணம், பாவமா பரிகாரமா? - சுட்டுவிரல்

2- பலதார மணம் - இறைநேசன்

"நினைத்த நேரத்தில் முத்தலாக் சொல்லி பெண்ணை ஒடுக்குமுறை" செய்ய முடியாது. பாஸ்டன் பாலா அறிந்து வைத்திருப்பதைக்கூட அறியாத சூபியின் பார்வைக்கு: தலாக் ஒரு விளக்கம் - அபூ முஹை.

என்னுடைய சொத்தில் என் விருப்பத்திற்கு, நானே யாருக்கும் பங்கு கொடுக்க முடியாது. யாருக்கு எவ்வளவு என்று என் இறைவன் தன் மறையில் வகுத்திருக்கிறானோ அதன்படி அவரவர் எடுத்துக் கொள்வர் - நான் இறந்த பின்னர். அதில் சூபிக்குப் பங்கில்லை.

மேலும்,

தன் பிள்ளைகளின் அப்பன் பெயர் தெரியாத அம்மாப் பட்டியலை உள்ளடக்கிய 'பெண்ணிய இஸ்லாம்' போன்று இன்னும் எத்தனை இஸ்லாம்களை அறிமுகப் படுத்தினாலும் வஹ்ஹாபின் சட்டப்படி [003:019] இஸ்லாம் என்பது ஒன்றுதான் - ஒன்றே ஒன்று!

வெள்ளி, மார்ச் 31, 2006

மிரண்டுபோன சூபியின் முரண்டு

திண்ணையின் முஸ்லிம் வாசகர்களுக்குச் சென்ற வாரம் அடித்தது யோகம்!

பல இஸ்லாம்கள் அறிமுகப் படுத்தப் படுவது முஸ்லிம்களுக்கு யோகமில்லாமல் வேறென்ன? வெகுஜன இஸ்லாம் (Popular Islam) என்ற தலைப்பில் சூபி முகமது என்பார் சில புதிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தியுள்ளார். அவற்றுள்: 

1- நிறுவன இஸ்லாம் (Institutional Islam)
2- வெகுஜன இஸ்லாம் (Popular Islam)
3- நாட்டார் இஸ்லாம் (Folk Islam)

ஆகியவை முக்கியமானவை.

அடுத்து, எச்.முஜீப் ரஹ்மான் என்பார், பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM) என்ற தலைப்பில் தம் பங்குக்கு: 
1- மாற்று இஸ்லாம் (Alternetive Islam)
2- தாராளவாத இஸ்லாம் (Liberal Islam)
3- மதநீக்க இஸ்லாம் (Seculer Islam)

போன்ற இஸ்லாம்களை அறிமுகப் படுத்தி, இருவரும் ஒரே தொழில் செய்பவர்கள்தாம் என்பதை "இஸ்லாம்கள் வாங்கலியோ இஸ்லாம்கள்" என்று ஒரே குரலில் கூவி மெய்ப்படுத்தி இருக்கின்றனர்.

ஒன்று மட்டும் தெளிவு.

இரு கட்டுரைகளும் பொன்னீல எழுத்துகளால் பொறிக்கப் பட்டவைதாம் என்பதே அது. "ஒரு கருப்பொருளைப் பற்றிய சொல்லாடலுக்குள் புகுமுன் அதைப் பற்றிய முழு அறிவு இல்லாவிடினும் அது குறித்த அடிப்படை அறிவாவது கட்டாயம் இருக்க வேண்டும்" என்று வேறொருவருக்கு நான் எழுதியது சூபிக்கும் பொருந்தும். அல்குர்ஆன் என்ற இறைவேதம், அரபியருக்கோ ஏனைய முஸ்லிம்களுக்கோ மட்டுமான தனிச் சொத்தன்று (081:027) என்பதைக்கூட அறியாமல், "முஸ்லிம்களின் அல்குர்ஆன் அரபுமொழி சார்ந்தது" என்று எழுதித் தம் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுதல் சூபிக்குத் தேவைதானா?

வரலாற்றிலும் புகுந்து 'விளையாடுகிறார்' சூபி. ஹஜ்ஜின்போது நிறைவேற்றப் படும் கடமைச் செயற்பாடுகள் அனைத்தும் அண்ணல் இபுறாஹீம் மற்றும் அவர்தம் குடும்பத்தவரின் தியாகங்களை அடியொற்றி வந்தவை என்பது பிறமத நண்பர்களும் அறிந்து வைத்திருக்கும் அடிப்படை வரலாறாகும். அண்ணல் இபுறாஹீமும் அவர்தம் குடும்பத்தினரும் அரபியரா? 'சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றால்' உண்மை இப்படித்தான் சுடும்.

சரி, உண்டியலுக்கு வருவோம்.

இஸ்லாமிய ஆட்சி என்பது 'கிலாஃபத்' - பின்தோன்றல் முறைதான். பின்தோன்றுபவன் தமையானாகவோ தம்பியாகவோ மகனாகவோ பொதுமக்களுள் ஒருவனாகவோ இருக்கலாம். யாருக்குப் பிறந்தான்? என்று வஹ்ஹாபின் சித்தாந்தம் கேள்வி எழுப்பாது; மாறாக, வஹ்ஹாபின் அறிவுரையின்படி ஆட்சி நடக்கிறதா? என்றுதான் பார்க்கும். 

முஸ்லிம்கள் ஆள்வதால் அது இஸ்லாமிய ஆட்சி என்ற மூடநம்பிக்கைக்கு சூபி பலியாக வேண்டாம். ஹாஜிகளிடமிருந்து பெறப்படும் அன்னியச் செலவாணி, அவர்களுக்கு வசதிகளை அதிகப் படுத்திக் கொடுப்பதற்காகச் செலவு செய்யப் படுவதாக சவூதி அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன; ஹஜ்ஜுக்குச் சென்று வருபவர்களும் கூறுகின்றனர். ஹஜ்ஜுக்கு அனுப்பும் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவம் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பேற்கின்றனர்.

இவ்வாறுதான் தர்ஹா உண்டியலில் கொழுத்த சாபுகள், அவர்களின் பகற்கொள்ளையில் கிடைத்ததை 'பக்தர்'களுக்குச் செலவு செய்கிறார்களாக்கும்? மொட்டைத் தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சுப் போட்டு சூபி அடித்த அடி, நாலு பக்கமும் தெறிக்க வில்லையே? 'நனைத்து அடித்தல்' இதுவல்ல என்று நாமும் நம்புவோம்.

***
இது நிற்க, சந்தடி சாக்கில், "முகமதியரின் மறைப் புத்தகத்தில் உள்ள வன்முறை உணர்வை விதைக்கக் கூடிய வாசகங்களை அவை எந்தக் காரணத்திற்காக இடம்பெற்றிருந்தாலும் அவற்றின் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத இளஞ் சிறுவர்கள் பயிலும் மதரஸாக்களில் கற்பிக்கலாகாது என முடிவெடுக்க முகமதிய மார்க்க அறிஞர்கள் முன்வர வேண்டும்" என்று 'முகமதி'யர்களுக்கும்

"தமக்குக் கிட்டியுள்ள இசை ஞானத்தை 'சரஸ்வதி மா கீ தயா' (சரஸ்வதி அன்னையின் அருள்) என்று சொல்லும் திரை இசை இயக்குநர் நவ்ஷத்,

வாணியை மனதால் வணங்கிய பின்னரே பாடத் தொடங்குவதாகப் பல ஆண்டுகளுக்குமுன் பாபுராவ் பட்டேலின் மதர் இந்தியா பத்திரிகைக்குப் பகிரங்கமாகப் பேட்டி அளித்த ஹிந்தி பின்னணிப் பாடகர் தலத் மஹமத்,

காளிதேவியின் பூமிக்கு வந்து இசை நிகழ்ச்சியளிக்கும் அருள் கிடைத்ததால் தமது நிகழ்ச்சியினைக் காளிமாதாவின் பாத கமலங்களில் அர்ப்பணிப்பதாகக் கூறி மெய் சிலிர்க்க வைத்த சாஸ்த்ரிய சங்கீதப் பாடகர்களான அலி சகோதரர்கள்,

கங்கையைத் தம் மாதா எனக் கூறும் ஷெனாய் விற்பன்னர் பிஸ்மில்லாகான்,

இசையின் மூலம் இறைவனை வழிபடுவதாகக் கூறிய நூர்ஜஹான்

போன்றோரின் எண்ணிக்கை பெருகுவதற்கான வழிமுறைகளில் ஹிந்துக்களின் கவனம் செல்லவேண்டும்" என்று இந்துக்களுக்கும் பழம் பெறும் எழுத்தாளர் மலர் மன்னன் திண்ணையில் அறிவுரை கூறியிருந்தார்.

மட்டுமின்றி, மேற்காணும் முகமதியருக்கு இடுகாட்டில் இடம் கிடைக்காது என்றும் முகமதியர் பகிரங்கமாக அவ்வாறு அறிவித்துவிட்டு வெளியே நடமாட முடியுமா என்பதே சந்தேகம் என்றும் 'நடமாடிக் கொண்டிருப்பவர்களை'க் குறித்து ம.ம. கவலை தெரிவித்திருந்தார்.

ஒருவருடைய ஒரே கட்டுரைக்குள் ஒரே கருத்துக்குள் அவரே முரண்படுவதை விளக்கிக் கொண்டிருப்பது எனது நோக்கமில்லை. அதை, க.வி. பார்த்துக் கொள்ளட்டும். பின் நான் ஏன் அதை எடுத்தாள வேண்டும்? மேற்காணும் 'பெருங்கதையாடலில்' சூபிக்குச் சரக்கிருக்கிறது.

சங்கீத முகமதியரை ஒன்று திரட்டி, 'சங்கீத இஸ்லாம்' என்றும் பிரபல முகமதிய நடிகைகளான 'கற்பு புகழ்' குஷ்பு, நக்மா, மும்தாஜ் மற்றும் முகமதிய நடிகர்களான சல்மான்கான், ஷாருக்கான், ஆமிர்கான், அம்ஜத்கான் போன்றோரை வைத்து 'நட்சத்திர இஸ்லாம்' ஆகிய இஸ்லாம்களை அறிமுகப் படுத்தலாம்.

யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கடை விரிக்கலாம். கொள்வார்.............?

நல்லவேளை, சூபிக்கான என்னுடைய முதல் கடிதம் இன்றுவரை திண்ணையில் படிக்கக் கிடைக்கிறது. இல்லையெனில் மிரண்டுபோய் பதட்டத்துடன் ஆத்திரத்தில் புலம்புவது யாரென்று வாசகர்களுக்கு அடையாளம் தெரியாமல் போய்விடும்.
ஃஃஃ

சனி, பிப்ரவரி 25, 2006

ஹெச். ஜி. ரஸூலின் மீள்பார்வை இலக்கு

ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை-3

திண்ணையின் 12.01.2006 பதிப்பில் ஹெச். ஜி. ரஸூல் எழுதியிருந்த கட்டுரையின் மூன்றாவது பத்தியில், 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள்' (அல்லது மீள்பார்வை அதாவது மறு பரிசீலனை) செய்யப்பட வேண்டிய நூற்றுக் கணக்கானவற்றில் 'மைய இஸ்லாத்தில் நிகழ்த்தப் படும்' (அல்லது ஹஜ் கடமையின்) போது முஸ்லிம்கள் (அல்லது வஹ்ஹாபிகள்) செய்யும் 'சடங்குகள்' (அல்லது கடமைச் செயற்பாடுகள்) சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார்:

(1) ஸஃபா-மர்வா குன்றுகளிடையே ஸஃயுச் செய்தல் (2) மினாவில் ஜம்ராத்துக்குக் கல்லெறிதல் (3) கால்நடைகளை பலியிடுதல் (4) தலைமுடி மழித்தல் 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்' (வஹ்ஹாபிகளால்) விமர்சிக்கப் படுவதால், மேற்கண்பவற்றையும் 'அறிவுநிலைப்பட்ட விவாதங்கள்' செய்ய வேண்டுமென்ற காரணத்தை முன் வைத்திருக்கிறார்.

அஃதென்ன 'தமிழ் சூழல் சார்ந்த பண்பாட்டு இஸ்லாத்தின் உயிர்ப்புக் கூறுகள்'? என்று வாசகர்கள் அதிகம் குழம்ப வேண்டாம். வஹ்ஹாபிகளின் தலைவர் (அல்லது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் போதனைகளின்* அடிப்படையில் வஹ்ஹாபிகளால் கடுமையான விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகிக் களையிழந்து போன தர்ஹாக்கள் மற்றும் -அவற்றில் நடைபெறும் சமாதி வழிபாடுகள், சமாதிகளுக்காக நேர்ச்சை செய்தல், பலியிடுதல், மொட்டையடித்தல் -இல்லாத பேயை உற்பத்தி செய்தல், பேய் விரட்டும் பித்தலாட்டம் -கந்தூரி அனாச்சாரங்கள் -சமாதிகளின் பெயரால் தட்சணைக் கொள்ளை மற்றும் உண்டியல் சுரண்டல் -தர்ஹாக்களைச் சுற்றிலும் நடக்கும் பல்வகைக் கீழ்த்தொழில்கள் ஆகியன 'பண்பாட்டு உயிர்ப்புக் கூறுகள்' என்ற மேல்பூச்சுக்கு உள்ளேயுள்ளவற்றுள் சில.

இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் அனாச்சாரங்களுக்குக் கட்டுரையாளர், "தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் ஜாயாரத் வழிபாடுகள்" என்றும் "சூபிகள், சமயஞானிகளின் உறவிடங்களான தர்காக்கள் சார்ந்த மரபுவழிபண்பாட்டியல் நடவடிக்கைகள்" என்றெல்லாம் விளக்கம் சொல்லி உயிரூட்ட முயல்கிறார்.

ஹஜ்ஜில் நிறைவேற்றப் படும் கடமைச் சொயற்பாடுகளுக்கு இம்மடலின் இறுதியில் இஸ்லாத்தின் அடிப்படைகளான வஹ்ஹாபின் வார்த்தைகளையும் வஹ்ஹாபிகளின் தலைவருடைய வழிமுறையின் சான்றுகளையும் வரிசைப் படுத்தியிருக்கிறேன்.

என்னுடைய தெளிவான ஒரேயொரு கேள்வி என்னவெனில் 'தர்ஹாவுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு?' இறைமறை மற்றும் நபிவழிமுறையின் சான்றுகளை ஹெச். ஜி. ரஸூல் சொல்ல வேண்டும்.

மேலும், இறைவாக்கில் (அல்லது வஹ்ஹாபுடைய அறவுரையில்) அவருடைய பார்வையில் 'விசித்திரங்களாகத் தென்படுகின்ற' நிகழ்வுகளான: (அ) மூஸா நபியின் கைத்தடி பாம்பாக மாறியது [007:117] (ஆ) கடல் பிளந்து வழிவிட்டது [026:063] (இ) நெருப்புக் குண்டம் இபுராஹீம் நபிக்கு குளிர் பொய்கையாய் மாறியது [021:069] (ஈ) அப்ரஹாவின் யானைப் படைகளை (வஹ்ஹாப் அனுப்பிய) பறவைகள் பின்வாங்கச் செய்தது [105:001-005] ஆகியவற்றுக்கு 'அறிவுநிலைப்பட்ட விவாதம்' வேண்டும் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளவில்லை; இறைவாக்கின் உருவாக்கம் (அல்லது வஹ்ஹாப் அனுப்பிய வஹீ) குறித்தும் 'வரலாறு சார்ந்த சமூகவியல் பார்வையும் மானுடவியல் அணுகுமுறைகளும்' அவசரமாகத் தேவைப் படுவதாகக் கூறி, தம் மீள்பார்வை இலக்கு (அதாவது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியது) வஹ்ஹாபின் வார்த்தைகளான இறைவேதம்தான் என்று தெளிவாக்குகிறார்.

அவருடைய கட்டுரையை, "வஹ்ஹாபிஸம் துரோகம் செய்து கொண்டிருக்கிறது" என்று முடித்திருந்தார். அவர் சொல்ல வரும் செய்தி என்னவெனில், "(அ),(ஆ),(இ),(ஈ) ஆகிய நான்கிலும் 'விசித்திரங்கள் சார்ந்த நிகழ்வுகளை' உண்மை என நம்ப வைத்து, வஹ்ஹாப் துரோகம் செய்து விட்டான்" என்பதே!

புத்தக வடிவில் வரவேண்டிய கருத்து! ஏற்கனவே மயிலாஞ்சியில் அசைத்த ஆப்பின் மூலம் வால் மட்டும்தான் நசுங்கியது ...
ஃஃஃ
சான்றுகள்:
(1)"நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் குன்றுகள்) அல்லாஹ்வின் சின்னங்களைச் சார்ந்தவைதாம். எனவே (கஃபா என்னும்) இறையில்லத்தை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர்கள் அவ்விரண்டையும் சுற்றி வருவதில் தவறேதுமில்லை ... "அல்-குர் ஆன் 002:158.

வரலாற்றுக் குறிப்பு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்வரை ஸஃபாவில் "அஸாஃப்" மர்வாவில் "நாயிலா" ஆகிய சிலைகளை இணைவைப்பாளர்கள் வழிபட்டு வந்தனர். மக்கத்து வெற்றியின்போது அனைத்துச் சிலைகளும் அழிக்கப்பட்டன. என்றாலும், அவ்விரு சிலைகளும் அறியாமைக் கால அரபியரின் வழிபாட்டு அடையாளங்களாய்த் திகழ்ந்தமையால் அவை இருந்த இடமான ஸஃபா-மர்வாப் பள்ளத்தாக்கின் பக்கம் போவதையும் மக்கத்து வெற்றியின்போது உம்ராவை நிறைவேற்ற வந்த (மதீனத்து) முஸ்லிம்கள் வெறுத்தனர். மட்டுமன்றி, அங்குச் சென்றால் குற்றமாகிவிடுமோ என்றும் அஞ்சினார்கள். அப்போதுதான் மேற்காணும் இறைவசனம் இறக்கியருளப் பெற்றது -தப்ஸீர் இபுனு கஃதீர்.

(2)"கல் வீசப்படும் இடங்கள் ஒற்றைப் படையா(ன மூன்றா)கும்; வீசப்பட வேண்டிய கற்களும் ஒற்றைப் படையா(ன ஏழா)கும்..." என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2622.

பலியிடும் (துல்ஹஜ் பத்தாம்) நாளின் முற்றிய காலைப் பொழுதில் தங்கள் ஒட்டகத்தில் அமர்ந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜம்ர(த்துல் அகப)வில் ஏழு பொடிக் கற்களை வீசி விட்டு, "நீங்களனைவரும் உங்களுடைய ஹஜ்ஜுக் கடமையின் செயல்களைச் சரியாகச் செய்ய (என்னிடமிருந்து இப்போதே) கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனனில், இந்த ஹஜ்ஜுக்குப் பின்னர் நான் (மீண்டும்) ஹஜ்ஜுச் செய்வேனா என்று எனக்குத் தெரியாது" என்றார்கள். -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2618-2620.

(3) "...(நீங்கள் பலியிடும்) கால்நடைகளின் இறைச்சியோ இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. ஆனால், உங்களின் இறையச்சம்தான் அவனைச் சென்றடையும்" - அல்குர்ஆன் 022:037.

... (ஹஜ் மாதப் பத்தாம் நாளில்) கல் வீசிய பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 63 ஒட்டகங்களைத் தங்கள் கைப்பட அறுத்தார்கள். எஞ்சியதை அலீ (ரளி) இடம் கொடுத்து அறுக்கச் சொன்னார்கள் ... -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2555.

"... அவரவர் வசதியைப் பொருத்து ஓர் ஒட்டகத்தையோ ஒரு மாட்டையோ ஓர் ஆட்டையோ (பலியிட) ஓட்டிச் செல்லட்டும். ஒன்றுக்கும் வழியில்லாதவர் மூன்று நாட்கள் நோன்பிருக்கட்டும்..." என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். -அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரளி) - நூல்: புகாரீ, பாகம் 6 பக்கம் 35.

ஹுதைபிய்யா (உடன்படிக்கை) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு நாங்களும் (கால்நடைகளைப்) பலியிட்டோம். எழுவருக்கு ஓர் ஒட்டகம் (அல்லது) எழுவருக்கு ஒரு மாடு(என்ற கணக்கில் பலியிடப் பட்டது). -அறிவிப்பவர்: ஜாபிர் (ரளி) - நூல்: முஸ்லிம் / மிஷ்காத் ஹதீஸ் எண் 2636.

வரலாற்றுக் குறிப்பு : ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டில் அருளப் பெற்ற 002:196 இறை வசனக் கட்டளையின் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆயிரம் தோழர்களும் உம்ராச் செய்வதற்காக, பலியிட வேண்டிய தங்கள் கால்நடைகளோடு மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவை நோக்கி வந்தார்கள். குரைஷிகளின் பிரதிநிதியாக ஸுஹைலிப்னு அம்ரு, தமது குழுவினரோடு மக்காவிலிருந்து புறப்பட்டு வந்து ஹுதைபிய்யா என்ற இடத்தில் வழிமறித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் நபித் தோழர்களையும் "மக்காவிற்குள் நுழையக் கூடாது" எனத் தடுத்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் ஸுஹைலுக்கும் இடையில் அங்கு ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும். -தஃப்ஸீர் இபுனு கஃதீர், புகாரீ, முஸ்லிம் மற்றும் மிஷ்காத் ஹதீஸ் எண் 4042. (4)

"...ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாகவோ தலைச்சிரங்கு உள்ளவராக இருந்து, தலைமுடியை மழிக்க முடியாமலாகி விட்டால் நோன்பு நோற்றோ, தருமம் செய்தோ (இன்னொரு) பலி கொடுத்தோ அதற்கு ஈடு செய்ய வேண்டும் ..." அல்-குர் ஆன் 002:196.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தலைமுடியை (முழுக்க) மழித்துக் கொண்டார்கள். நபித்தோழர்களில் பெரும்பாலரும் அவ்வாறே (முழுக்க மழித்துக் கொண்டனர்). சிலர் முடியைக் கத்தரித்துக் கொண்டனர். -அறிவிப்பவர் : இபுனு உமர் (ரளி) - நூல்: புகாரீ, முஸ்லிம்/ மிஷ்காத் ஹதீஸ் எண் 2646.

·"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கி விடாதீர்கள்...": அஹ்மது 8449, அபூதாவூது 1746.
·"... இறைவா, எனது சமாதியை வழிபடுமிடமாக ஆக்கி விடாதே...": அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .
·"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்": நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.
·"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்து விட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் உறுதிபடக் கூறினார்கள். இல்லையெனில் அவர்களுடைய சமாதியையும் வணங்குமிடமாக்கிவிட வாய்த்து விடும் என ஐயுற்றார்கள்: புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
·"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் தடை செய்தார்கள்: திர்மிதீ 972, அஹ்மது 14748.

திங்கள், பிப்ரவரி 20, 2006

சூபியின் முகமூடி 'மட்டும்'

சூபி முகம்மது என்பவர் திண்ணையில் என்னுடைய கடிதத்தை விமர்சித்து ஓர் எதிர் மடல் எழுதியிருக்கிறார். அவருடைய மடலில் குறிப்பிட்டுள்ளக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளித்த அவருக்கும் அச்சேற்றிய திண்ணைக்கும் முதற்கண் என் நன்றி!

"வகாபிய கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஹெச்.ஜி.ரசூல் முன்வைத்த பல முக்கியமான விடயங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை" என்பதுதான் சூபியுடைய குற்றச்சாட்டு.

அக்குற்றச்சாட்டுக்கு பதில் தருமுன் ஒரு சிறு திருத்தம்: 'வகாபிய கருத்துக்கள்' என்று தனியாக இஸ்லாத்தில் ஏதுமில்லை. எனவே, 'வஹ்ஹாப் உடைய கருத்துக்கள்' என்று திருத்திப் படித்துக் கொள்க! அதற்கு உடன்பட மனமில்லையெனில், 'அல்-குர் ஆன்' என்று மாற்றிக் கொள்க!

இனி, 'பதில் சொல்லப்படாத முக்கிய விடயங்கள்' என்ற குற்றச்சாட்டுகளுக்கு வருவோம். (1அ) "பிரதேச தன்மைகளை அழித்து (1ஆ) அரேபிய வகைப்பட்ட ஒற்றைச் சமய அடையாளம் பேசும் அறிவு வாதம்" (2) "தனி நபர் மைய வாதம்" (3) "லாபக் கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு" மீக்கூறிய மூன்றில் முதலாவதான (1அ,1ஆ) குற்றச்சாட்டுக்கு திண்ணையில் என் முதல் மடலிலேயே பதில் உள்ளது:
__________

"... தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது வஹ்ஹாபிஸத்தின் அடிப்படை நோக்கமாகும். இதனை அரபு வகை(?)ப்பட்ட இஸ்லாமிய பேரடையாளமாகவும் சகலவித அதிகாரத்தையும் மையத்தில் குவிக்கும் ஒற்றை நிறுவனச் சமய மாதிரியாகவும்..." சொல்லலாமாம். இஸ்லாத்தில் இல்லாததும் இடையில் வந்து சேர்ந்ததுமான சமாதி வழிபாட்டை (மரபுவழி பண்பாட்டியல்?) அப்புறப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையுமாகும். இதில் 'அரபுவகை' என்று தனிவகை ஒன்றுமில்லை. கடமையாற்றுகிறவன் தமிழனாக இருப்பதில் கட்டுரையாளருக்கு என்ன நட்டம்?
__________

'தர்காக்கள் சார்ந்த மரபுவழி பண்பாட்டியல் நடவடிக்கைகள்' என்று கட்டுரையாளர் குறிப்பிட்டதைத்தான் 'பிரதேசத் தன்மைகள்' என்று சூபி மொழிபெயர்த்துவிட்டு, அதற்கு பதில் தரவில்லை என்கிறார். ‘நான் சொல்ல வந்தவை வேறு' என்று சூபி மறுத்தாரெனில் வேறு 'பிரதேசத் தன்மை'களுக்கும் பதிலுண்டு:

'உலக மக்களின் மார்க்கம்' (அல்- குர் ஆன் 030:030) என்று பொதுவுடமையோடு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இஸ்லாம், பிரதேசத் தன்மைகளான நாடு, மொழி, மரபு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தையும் மீறிச் செம்மாந்து நிற்கும்போது 'பிரதேசம்' என்ற குறுகிய வட்டதுக்குள் இஸ்லாத்தை அடக்க முயல்வது பேதைமையேயன்றி வேறென்ன?

இரண்டாவதாக, 'தனி நபர் மைய வாதம்' அதாவது, ஒரேயொரு நபருடைய கருத்துகளை/கட்டளைகளை மட்டும் ஏற்றுக் கொண்டு, மற்றவற்றைப் புறந் தள்ளுவது. இதுவும் தவறான குற்றச்சாட்டாகும். ஒரு முஸ்லிம், இருவருடைய கருத்துகளுக்கும் கட்டளைகளுக்கும் கட்டுப்பட வேண்டும்:
1. அல்லாஹ்
2. அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்).
அவன்/அவள்தான் உண்மையான முஸ்லிம் (அல்லது வஹ்ஹாபி).

மூன்றாவதும் முடிவானதுமான குற்றச்சாட்டு நகைப்புக்குரியது: "லாபக் கோட்பாடு சார்ந்த பொருளாதாரச் சார்பு" சூபியே குறிப்பிட்டபடி புரிந்து கொள்ளவே 'சிரமப் படுகின்ற' சொல்லாட்சி(?). அதற்கும் அவரே காரணம் சொல்கிறார் "தமிழுக்கு இவ்விடயங்கள் புதிது". இதுதான் சிக்கல்! வேறென்ன...? தமிழில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் என்னைப் போன்ற பாமரனும் 'சிரமப் படாமல்' புரிந்து கொள்வோம். அதை விடுத்து, கிரேக்கத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதினால் அதன் கருப் பொருளை என் போன்றோர் கருத்திலெடுப்பது கடினமன்றோ !

எனினும், நான் 'சிரமப்பட்டு' மூன்றாவது குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டது யாதெனில், 'தன் பொருளாதாரத்தை முதலீடு செய்யும் ஒவ்வொரு வஹ்ஹாபியும் இலாபத்தை எதிர் பார்ப்பான்' சரியா? எனில், மூன்றாவது குற்றச்சாட்டை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

அடுத்து, "எவ்வித உழைப்புமின்றி 'முதலாளி' ஆவதற்குத்தான் இந்தியா முழுதும் சமாதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை; மக்களை ஏய்த்துப் பிழைத்து வாங்கிய கார்களுக்குப் பெட்ரோல் போடக் காசு சேர்வதில்லை" என்று நான் பொத்தாம் பொதுவாகப் பேசுவதாக சூபி குற்றம் சாட்டுகிறார். "கந்தூரியில் கூட்டமில்லை; உண்டியல் நிறையவில்லை" என்பது என் 'பொத்தாம் பொது'க் கருத்தன்று. உண்மை நிலையை, இப்போது உள்ள நிலவரத்தைக் கண்களால் கண்டு எழுதியதே! வேண்டுமெனில், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிரம்பிய உண்டியல் வளத்தையும் இப்போதுள்ள வறட்சி நிலையையும் ஒரு சர்வே எடுத்துப் பார்த்து சூபி தெரிந்து கொள்ளட்டும். அதற்கு முன்னர், என்றைக்கோ இறந்துபோனவர்களின் சமாதிகளைக் காட்டி, மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் 'முதலாளி'கள் எந்தவகையான உழைப்புச் செய்கிறார்கள் என்று தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.

மேலும், ஓர் உலவி புத்தகம் எழுதியும் தொலைக் காட்சி விளம்பரங்கள் வழியாகவும் சம்பாதித்துப் பணக்காரராகிவிட்டாராம். அந்த உலவி ஓர் ஊழல் பேர்வழியாம். அவையும் என் மடலுக்கு பதிலாம். (திண்ணையின் கட்டுப்பாடுகளுள் "Avoid emotional and abusive language" என்பதும் அடங்கும். சூபிக்கு விதிவிலக்கு போலும்). நான் யாரைச் சார்ந்தவன் என்பதை இங்குத் தெளிவாகப் பிரகடனப் படுத்தி விட்டேன். அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்திருக்கும் சூபியின் நிலையை எண்ணிப் பரிதாபப்படுவதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.

கந்தூரிகளின் வழியே நிரம்பிய தர்கா உண்டியல்கள் தற்போது ஏகத்துவ எழுச்சியால் வறண்டு போனது ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் ஏகத்துவ எழுச்சிக்கு ஈடு கொடுக்க முடியாதவர்களின் இயலாமையினால் இந்த அளவுக்குச் சிந்தனையிலும் வறட்சி ஏற்பட்டிருப்பதும் பரிதாபத்திற்குரியதே!

இறுதியாக, பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு இஸ்லாம் (அல்லது வஹ்ஹாபிஸம்) வலியுறுத்துகிறது. சூபிக்காக பிரார்த்தனை செய்வது மட்டுமே இப்போது என்னாலானது.
ஃஃஃ