வெள்ளி, ஜூலை 07, 2006

நியாயமான கேள்விகள்

'கபாவில் சமாதியா?' என்ற தலைப்பில் 'சூபிமுகமது' என்பார் திண்ணையில் [சுட்டி-1] எனக்காகச் சில கேள்விகளை வைத்திருந்தார்: 1) தர்காக்களில் அடங்கப்பட்டிருக்கும் இறைநேசர்களது-சூபிஞானிகளின் நினைவிடங்களை நாடிச்செல்வதை திருக்குரானோ ஹதிசோ தடுக்கிறது என்று ஆதாரம் காட்டமுடியுமா? பதில்: முடியும் [சுட்டிகள் 2 முதல் 8 வரை] 2) இஸ்லாமியர்களின் ஹஜ் வழிபாடு பிற சமயத்தவரின் பார்வையில் ஒருவகை சமாதி/கல் வணக்கமாகவே கருதப்படுகிறது. பதில்: அது பிற சமயத்தவரின் பார்வை. 3) பணக்காரர்கள் மக்காவின் கபாவுக்கு செல்கிறார்கள். அங்குதான் அல்லாவின் சமாதி இருக்கிறது. பதில்: இல்லை. அல்லாஹ்வுக்கு சமாதி இருப்பதாகச் சொல்லும் சூபிதான் சமாதியைப் படம் பிடித்துப் போட வேண்டும். 4) அரபு பழங்குடிகள் அல்லா என்னும் ஆண்கடவுளை சிலையாக வணங்கி வந்துள்ளார்கள் என்பது சமூக வரலாறு. பதில்: வளமான கற்பனையைச் 'சமூக வரலாறு' என்றெல்லாம் அறிவுடையோர் எவரும் கூறுவதில்லை. சூபி அவ்வாறு கூறிக் கொள்வதில் எனக்கு அட்டியில்லை. 5) கறுப்புக் கல்லை தொட்டு முத்தமிடுவது பிறருக்கு கல் வணக்கமாகவே படுகிறது. பதில்: பிறருக்குத்தானே? படட்டும். ஆனால் முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறு [சுட்டி-9] 6) கபாவின் உட்புறத்தில் என்ன இருக்கிறது வகாபி ஆதாரத்தோடு சொல்லமுடியுமா? பதில்: முடியும். இப்போது காற்று இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கஅபாவின் உட்புறத்தைத் தூய்மை செய்வதைத் தொலைக்காட்சியில் காட்டுவர். அப்போதுத் துப்புரவுத் தொழிலாளர்களையும் பார்க்கலாம். 7) மக்காவின் புனித எல்லைமுழுவதும் மகாமு இபுராகீம் என்றே அழைக்கப்படுகிறது. பதில்: இல்லை. 'ஹரம்' (புனிதம்) என்று அழைக்கப் படுகிறது. 8) கபாவிற்கு உள்ளே அஷ்ட கோண வடிவ மகாம் ஏ இபுராகீமின் பீடம் உள்ளது என்றொரு கருத்தும் உள்ளது. பதில்: யாரிடமுள்ளது? 9) ஹஸ்ருல் அஸ்வத் கறுப்புக்கல்லை ஸ்ங்கே அஷ்வேத என்னும் பொருள்படும் வெண்மை அல்லாத கல் எனவும் இது சிவலிங்கத்திற்கு ஒப்பானது எனவும் கூட பொருள் கொள்ளப்படுகிறது. பதில்: யாரால் கொள்ளப் படுகிறது?
***
பதில்கள் முடிவுற்று, கேள்விகள் தொடர்கின்றன: திண்ணை வாசக நண்பர்: பூனக்குட்டி வெளியே வந்து பொத்துன்னு விழுந்துடுச்சே தெரியுமா? நான்: என்ன சொல்றீங்க? நண்பர்: சூபிமுகமது என்ற பெயரில் திண்ணையிலெ எழுதுற ஆளு முஸ்லிமில்லே! நான்: எப்படிச் சொல்றீங்க? நண்பர்: அல்லாவின் சமாதி, அல்லாவின் சிலை, கபாவுக்குள்ளே இபுராகீம் பீடம், ஸ்ங்கே அஷ்வேத, சிவலிங்கம் அப்டில்லாம் எழுதுறது இருக்கட்டும். ஒரு முஸ்லிமுக்கு இப்டியெல்லாம் நினைக்க முடியுமா? இது அவ்ளவும் ஆர்.எஸ்.எஸ் சைட்டிலேர்ந்து சுட்டது. நான்: இருக்கட்டும். யாராயிருந்தா என்ன? சூபின்னோ முகமதுன்னோ முஸ்லிமல்லாதவங்க உண்மையிலேயே பேரு வச்சிகிட்டா நீங்க கேஸா போட முடியும்? நண்பர்: முடியாதுதான். ஆனா இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை சந்தேகம்ங்கிற பேர்ல எழுதி திண்ணையை ஏமாத்தலாமா முடியாதா? இதையே ஒரு கிரிஸ்டின் பேர்லெயோ இந்து பேர்லெயோ எழுதி இருந்தா ... திண்ணை பப்ளிஷ் செய்யுமா? நியாயமான கேள்விகள்!
ஃஃஃ
சுட்டிகள்: 1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606303&format=html 2. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal3.html 3. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal4.html 4. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal6.html 5. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal7.html 6. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal8.html 7. http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal9.html 8. http://wahhabipage.blogspot.com/2006_02_01_wahhabipage_archive.html 9. http://www.islamworld.net/black_stone.htm

கருத்துகள் இல்லை: